Category: விளையாட்டு
all sports like cricket tennis badminton football soccer baseball kabadi
-

TNPL 2026 Final: ‘இறுதிப்போட்டியில் இப்படி ஒரு ஆதிக்கமா?’ – மதுரையை வீழ்த்தி சாம்பியனான கோவை! | TNPL 2026 Final: ‘Such dominance in the final?’ – Kovai defeats Madurai to become champions! | ACTPnews.com
இறுதிப்போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும் அதுவும் கோப்பையை முடிவு செய்யும் ஆட்டம் என்றால், கடைசி பந்து வரை யார் பக்கம் ஆட்டம் திரும்பும் என்று கணிக்க முடியாது. ஆனால் சேப்பாக்கத்தில் நேற்று நடந்த TNPL 2026 இறுதிப்போட்டியில், அந்தக் கணக்கு வேறு மாதிரி எழுதப்பட்டது. முதலில் பேட்டிங்கில் 182 ரன்கள் குவித்த கோவை கிங்ஸ், அடுத்து மதுரை பாந்தர்ஸை வெறும் 98 ரன்களுக்கு சுருட்டி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கோவை…
-

TNPL 2026 : திருச்சியை திணறடித்த ஹாட்ரிக்… உலக சாதனை படைத்த தீபன் லிங்கேஷ்!| TNPL 2026: Hat-trick stuns Tiruchirappalli… Deepan Lingesh creates a world record | ACTPnews.com
பந்துவீச்சாளரின் துல்லியம், திட்டமிடல் மற்றும் மன உறுதி ஆகிய மூன்றும் ஒன்றாக வெளிப்படும் தருணமாகவே கிரிக்கெட் உலகம் இதைப் பார்க்கிறது. ஒரே போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளிலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது கிரிக்கெட்டில் மிகவும் அரிதான சாதனையாக கருதப்படுகிறது. அதையே செய்து காட்டியுள்ள தீபன் லிங்கேஷ், ஒரு போட்டி இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பு TNPL தொடரிலேயே, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் கோவை அணியின்…
-

IND Vs SL டெஸ்ட்: 250 ஓவர்கள் ஃபீல்டிங்… “வேறு என்ன செய்திருக்க முடியும்?” – சுப்மன் கில் பதில்! | ACTPnews.com
இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 503/9 டிக்ளேர் செய்ய, இலங்கை முதல் இன்னிங்ஸில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை, 2-வது இன்னிங்ஸில் 429/9 ரன்கள் எடுத்ததால் இந்தியாவால் வெற்றியைப் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிய, முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-0 எனக் கைப்பற்றியது. “எங்களால் வேறு என்ன செய்திருக்க…
-

TNPL 2026: Trichy Grand Cholas Collapse for 99, Kovai Kings Enter Final | TNPL 2026: முதல் 3 பந்தில் 3 விக்கெட்… சுருண்ட திருச்சி! இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்த கோவை! | ACTPnews.com
வந்தார் சென்றார்…திருச்சிக்கு ஆரம்பமே அதிர்ச்சி 184 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே கே. ராஜ்குமார் டக் அவுட் ஆக, அடுத்த பந்தில் ஷ்யாம் சுந்தரும் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ஜெகதீசன் கௌசிக் விக்கெட்டையும் வீழ்த்திய கே. தீபன் லிங்கேஷ், தனது முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அடுத்தடுத்து விழுந்த இந்த மூன்று விக்கெட்டுகளால் நிலைகுலைந்த திருச்சி அணியால், அந்த…
-

“கிரிக்கெட் களம்; மோதல் களம் அல்ல!”- ஜெய்ஸ்வால்–அசிதா பெர்னாண்டோ மோதலுக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் | ACTPnews.com
இந்தியா–இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட மோதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து பெர்னாண்டோ ஆக்ரோஷமாக ‘send-off’ கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெய்ஸ்வால் திரும்பிச் சென்று அவரிடம் பேசினார்.…
-

“மற்றவர்களின் கருத்துகளை பொருட்படுத்துவதில்லை.!”- விமர்சனங்களுக்கு கௌதம் கம்பீர் பதிலடி| Gautam Gambhir Breaks Silence On Recent Criticism | ACTPnews.com
இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கௌதம் கம்பீரிடம், அவர் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. கௌதம் கம்பீர் அதற்கு பதிலளித்த அவர், “விமர்சனமா? கோப்பைகளை வெல்வதே எனது வேலை. அதை மட்டுமே நான் நம்புகிறேன். அதில்…
-

TNPL 2026: ப்ளே ஆஃப்ஸ்-க்குள் நுழைந்தன மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள்! | TNPL 2026: Madurai Panthers, iDream Tirupur Tamizhans Enter Playoffs | ACTPnews.com
TNPL-ன் 27 மற்றும் 28 ஆவது லீக் போட்டியானது சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதிக் கொண்டன. சேலம் ஸ்பார்டன்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாஸ் ஜெயித்த சேலம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான எஸ்.அபிஷேக் மற்றும் பூபதி குமார் ஆகியோர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களைக் குவித்திருந்தனர்.…
-

BWF உலக சாம்பியன்ஷிப்: இறுதி வரை போராடிய ட்ரீசா–காயத்ரி… வெண்கலம் வென்று அசத்தல் BWF – Treesa Jolly-Gayatri Gopichand Clinch Bronze | ACTPnews.com
தீர்மானிக்கும் கேமில் ஆதிக்கம் வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆரம்பம் முதலே சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகம் மற்றும் துல்லியமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க ட்ரீசா–காயத்ரி முயன்றபோதிலும், புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.இறுதியில் 21–8 என மூன்றாவது கேமையும் கைப்பற்றிய லியு ஷெங்ஷு–டான் நிங் 2–1 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் காலிறுதியில் உலக தரம் 4-இல் உள்ள சீன ஜோடியான ஜியா யி ஃபான்–ஜாங்…
-

“வறுமையை உதைத்துத் தள்ளிய கால்பந்து வீரங்கனை”- ஸீனாவின் வரலாறு கேரள பாடத்திட்டத்தில் இடம்பிடித்தது! | ACTPnews.com
கேரள மாநிலம், எர்ணாகுளம் சளிக்கம்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சி.வி.ஸீனா. தற்போது 56 வயதாகும் அவரது விடாமுயற்சி நிறைந்த வாழ்க்கை, கேரள அரசின் 11-ம் வகுப்பு மலையாளப் பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. எர்ணாகுளத்தின் சளிக்கம்வட்டம் பகுதியில் பிறந்த ஸீனா-வுக்கு ஒரு வயது இருந்தபோதே தந்தை குடும்பத்தை விட்டு விலகிச் சென்றார். தாய் கார்த்தியாயினி கூலி வேலை செய்துதான் ஸீனாவையும் அவரது உடன்பிறப்புகளையும் காப்பாற்றி வந்தார். ஸீனா எட்டாம் வகுப்பு படிக்கும்போது தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது மூன்று சகோதரர்களும்…
-

TNPL 2026: திண்டுக்கல்லை சாய்த்த கோவை; சேப்பாக்கை வீழ்த்திய திருச்சி – சூடுபிடிக்கும் பிளே ஆப் ரேஸ்! | TNPL 2026 match report of 25th and 26th match | ACTPnews.com
TNPL 2026 தொடரின் 25-வது மற்றும் 26-வது லீக் போட்டிகள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் – கோவை கிங்ஸும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸும் பலபரீட்சை நடத்தின. VIDA கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் 25-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த…
-

TNPL 2026 : மதுரையை அசால்டாக வென்ற திருப்பூர்; நெல்லையின் அட்டகாச பந்துவீச்சு; சுருண்டது சேலம்! | ACTPnews.com
TNPL 2026-ல் 23 மற்றும் 24 ஆவது லீக் போட்டிகள் சென்னை எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 23-வது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் மோதிய போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.…
-

சச்சின் சாதனையைச் சமன் செய்த ஜோ ரூட்.. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் புதிய வரலாற்று மைல்கல்! | ACTPnews.com
Last Updated:Aug 21, 2026 12:38 PM ISTஇங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட்இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், பாகிஸ்தானுக்கு எதிராக ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் 66 ரன்கள் அடித்து, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையைச் சமன் செய்து புதிய…
-

2027 ஐபிஎல் தொடரில் புது அவதாரம்.. டெல்லி அணியின் பயிற்சியாளராகக் களமிறங்கும் யுவராஜ் சிங்! | ACTPnews.com
Last Updated:Aug 21, 2026 10:16 AM IST2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ள யுவராஜ் சிங், தற்போது பயிற்சியாளராகத் தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளார். யுவராஜ் சிங்இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், வரவிருக்கும் 2027 ஐபிஎல் (IPL) சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிகாரப்பூர்வமாகப் பயிற்சியாளர் களத்தில் அவர் முதன்முறையாகத் தடம் பதிப்பதுடன், ஆண்டிற்குச் சுமார்…
-

காற்றில் சுழன்று அசத்திய மாணவர்கள்… விழுப்புரத்தில் களைகட்டிய ஜிம்னாஸ்டிக், ஜூடோ போட்டி | ACTPnews.com
Last Updated:Aug 20, 2026 6:01 PM ISTமாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வெல்லும் மாணவர்கள், அடுத்ததாக நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.+ News18விழுப்புரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் மற்றும் ஜூடோ போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று…
-

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்.. உலகின் முதல்நிலை வீராங்கனை சபலெங்கா அதிர்ச்சி தோல்வி | ACTPnews.com
Last Updated:Aug 20, 2026 4:32 PM ISTஅமெரிக்காவின் முன்னணி வீராங்கனைகளான கோகோ கோஃப், ஜெசிக்கா பெகுலா காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.சபலெங்காஅமெரிக்காவின் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதலாம் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா அதிர்ச்சி தோல்வியடைந்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செக் குடியரசைச் சேர்ந்த 20 வயதான இளம் வீராங்கனை சாரா பெஜ்லெக்கை உலகின் நம்பர் 1 வீராங்கனையும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான அரினா சபலெங்கா எதிர்கொண்டார்.மேலும் படிக்க Source link
-

தோனியின் 14 ஆண்டு சாதனை, 88 ஆண்டு உலக சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்… | actpnews.com
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், டாஸ் வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து எட்டாவது டி20 போட்டியிலும் டாஸில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். தொடர்ந்து 8 போட்டிகளில் டாஸ் வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்ந்து எட்டு போட்டிகளில் டாஸில் வெற்றி பெற்ற…
-

14.07.2026 தலைப்புச் செய்திகள் – Headlines | actpnews.com
தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார் வழிநெடுகிழும் ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்பு அளித்தனர் சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார் பொது இ -சேவை மையத்தில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசின் சான்றிதழ்களை வழங்கினார் பெரம்பூர் தொகுதிக்கான ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து முதலமைச்சருக்கு அதிகாரிகள் விளக்கம் பெரம்பூர் தொகுதியில் கொண்டுவரப்பட உள்ள புதிய…
-

காலை தலைப்புச் செய்திகள் 13.07.2026 – Morning Headline | actpnews.com
2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்றும், தலைவர்கள் தானாக வரப்போகிறார்கள் என்றும் வி த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை உறுதி கோரிக்கைகளுக்கு தவெக அரசு செவிசாய்யாக்காவிட்டால் பிறகு பார்த்துக்கொள்வோம் என்று பொள்ளாச்சி அருகே ஆக்சிப்பட்டியில் நடந்த மாநாட்டில் பேச்சு… —————- 38 நாட்களில் 19 லட்சம் பேர் வி த லீடர்ஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும், அவற்றில் 17% பேர் பெண்கள் என்றும் அண்ணாமலை பெருமிதம்… தனது கட்சியில் அனைவரும் தன்னார்வலர்கள் தான் என்றும், தானும்…
-

2026 உலகக்கோப்பை: எகிப்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா | actpnews.com
பரபரப்பான நாக்அவுட் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனின் கம்பேக் 2026 பிஃபா உலகக்கோப்பை நாக்அவுட் சுற்றில், 2 கோல்கள் பின்தங்கிய நிலையிலிருந்து அபாரமாக மீண்டு வந்த அர்ஜெண்டினா, எகிப்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கியது. முதல் பாதியில் எகிப்தின் ஆதிக்கம் போட்டி தொடங்கிய முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய எகிப்து அணி, 15-வது நிமிடத்தில் யாசர் இப்ராஹிம் அடித்த கோல் மூலம்…
-

மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக்கோப்பையை 7-வது முறையாக வென்று தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. Read more : ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை: “த.வெ.க.-அதிமுக இணைப்பு குறித்து பேசினால் சட்ட நடவடிக்கை” முதலில் பேட்டிங்…
-

FIFA : 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை.. வைரல் வீடியோ! | actpnews.com
துபாய் நகை வியாபாரி ஹேமந்த் கரம்சாந்தினி, மகன் சேர்த்த லெகோ பிஃபா கோப்பை மாதிரியை அடிப்படையாக கொண்டு, 18 காரட் தங்கத்தில் 900 வைரங்கள் பதித்த கோப்பை உருவாக்கி காட்சிப்படுத்தினார். 900 வைரக் கற்களால் செய்யப்பட்ட பிஃபா கால்பந்து உலக கோப்பை. 900 வைரக் கற்களைக் கொண்டு பிஃபா கால்பந்து உலக கோப்பை மாதிரியை துபாயைச் சேர்ந்த நகை வியாபாரி உருவாக்கி உள்ளார். பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக…
-

T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed’ – கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! – காரணம்? | actpnews.com
“தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், “இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு…
-

FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து | actpnews.com
சியாட்டில் நகரில் நடைபெற்ற குரூப் பி பிரிவு போட்டியில் போஸ்னியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி முதல் முறையாக உலக கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. FIFA 2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில், மொராக்கோ, சுவிட்சர்லாந்து அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தன. மியாமி நகரில் நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை ஸ்காட்லாந்து எதிர்கொண்டது. இதில், தொடக்கம்…
-

FIFA : உலகக் கோப்பை 2026: ஈரான் கால்பந்து அணிக்கு அமெரிக்கா திடீர் சலுகை – பயணக் கட்டுப்பாடுகள் தளர்வு! | actpnews.com
ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய், இந்த உலகக் கோப்பையிலேயே தனது அணிதான் “மிகவும் ஒடுக்கப்பட்ட அணி” என்று கவலை தெரிவித்திருந்தார். ஈரான் கால்பந்தாட்ட அணி 2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் சீட்டிலில் (Seattle) நடைபெறவிருக்கும் மிக முக்கியமான லீக் போட்டிக்கு முன்னதாக, ஈரான் தேசிய கால்பந்து அணிக்கு அமெரிக்கா தற்காலிக பயண விதிவிலக்கு அளித்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய நிம்மதியையும், ஊக்கத்தையும் தந்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின்…
-

மீண்டும் களமிறங்கிய நீரஜ் சோப்ரா: தோஹாவில் 4-வது இடம் பிடித்து ‘கிளாஸ்கோ 2026’ போட்டிக்கு தகுதி பெற்றார் | actpnews.com
Last Updated:Jun 20, 2026 4:37 PM IST அவர் எறிந்த 85.69 மீட்டர் தூரமானது, இந்திய தடகள சம்மேளனம் (AFI) நிர்ணயித்துள்ள தகுதி வரம்பான 83.5 மீட்டரை விட அதிகமாகும் நீரஜ் சோப்ரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நேற்று நடைபெற்ற 2026 தோஹா டைமண்ட் லீக் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காயத்திற்குப் பிந்தைய தனது முதல் சர்வதேசப் போட்டியான இதில், அவர்…
-

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பந்த்? ஐபிஎல் அடுத்த சீசனில் நடக்கப்போகும் அந்த ‘மெகா மாற்றம்’ இதுதான்! | actpnews.com
Last Updated:Jun 20, 2026 5:45 PM IST 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய 14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது. ரிஷப் பந்த் 2027 சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டிரேட் முறையில் வீரர்கள் பரிமாற்றம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்ட், மீண்டும் தனது பழைய அணியான டெல்லி…
-

ஐபிஎல்-ல் மெகா டிரேடிங்! ரூ. 12 கோடியை குறைத்துக்கொண்டு டெல்லி அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்… | actpnews.com
Last Updated:Jun 23, 2026 6:58 PM IST 2022-ல் டெல்லி அணியில் இணைந்த அவர், இதுவரை 65 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் மிகச்சிறந்த விக்கெட்-டேக்கராக உருவெடுத்துள்ளார் குல்தீப் யாதவ் – ரிஷப் பந்த் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தம் (Trade Deal) அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (DC) ஆகிய இரு அணிகளும் இணைந்து இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.…
-

IND vs AFG ODI : ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் 5 ரன்களை பெற்ற இந்திய அணி.. என்ன காரணம் தெரியுமா? | actpnews.com
Last Updated:Jun 20, 2026 7:20 PM IST ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார். இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது சேசிங்கை ஒரு பந்து கூட வீசப்படுவதற்கு முன்பாகவே 5/0 என்ற ஸ்கோருடன் தொடங்கி ஆச்சரியப்படுத்தியது. கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அரிதாக நடக்கும் இந்த சம்பவத்திற்கு, ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா…
-

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மெஸ்ஸி புதிய வரலாற்று சாதனை | actpnews.com
Last Updated:Jun 23, 2026 7:21 AM IST உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த ஆடவர் என்ற புதிய சாதனை படைத்தார் அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, மிரோஸ்லாவ் குளோஸை முந்தினார் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டின கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கால்பந்து உலகில் பல எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி முடிசூடா மன்னனாக வலம் வருபவர் மெஸ்ஸி. நடப்பு…
-

மும்பை டு ராஜஸ்தான் : அணி மாறும் ஹர்திக்? – டிரேடிங்கில் மும்பை கேட்கும் வீரர் யார்? | actpnews.com
ஐபிஎல் தொடர் முடிந்தாலும், அணிகளுக்குள் நடக்கும் மாற்றங்கள் குறித்த பரபரப்புக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அந்த வகையில், ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப் பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இருவரும் அணியிலிருந்து வெளியேறப் போவதாக வெளியாகும் செய்திகள், மும்பை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மும்பை அணியின் புதிய சகாப்தத்திற்கான தொடக்கமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. ஹர்திக் – என்ன காரணம்?…
-

“அவன் அடிச்சா அண்டார்டிகாவே அதிரும்!” – 29 பந்துகளில் 94 ரன்கள்… ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி! | actpnews.com
“பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய…
-

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறை.. சேப்பாக்கத்தில் ரிக்கார்ட் ஏற்படுத்திய ரோஹித் – பிரசித் கிருஷ்ணா | actpnews.com
Last Updated:Jun 20, 2026 7:36 PM IST இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரசித் கிருஷ்ணா – ரோஹித் சர்மா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோடி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை…
-

இங்கிலாந்து தொடர்… இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு! | actpnews.com
Last Updated:Jun 21, 2026 7:13 PM IST இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. News18 இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட…
-

சேப்பாக்கத்தில் இந்தியா அபார வெற்றி… ஆப்கனுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை | actpnews.com
Last Updated:Jun 20, 2026 8:13 PM IST முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி…
-

“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல் | actpnews.com
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார். ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு,…
-

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி ! | actpnews.com
விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர். நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள்…
-

IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டி : இந்திய அணியில் முக்கிய மாற்றம்! | actpnews.com
Last Updated:Jun 20, 2026 10:07 AM IST IND vs AFG: சென்னையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் ஹர்சித் ரானா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், தர்மசாலா மற்றும்…
-

மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்..? ரசிகர்கள் அதிர்ச்சி.! | actpnews.com
Last Updated:Jun 20, 2026 6:37 AM IST லக்னோ அணியில் 27 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ரிஷப் பன்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பினால் ஏறத்தாழ 12 கோடி ரூபாய் வருவாய் இழப்பை எதிர்கொள்வார் எனக் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2024 ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு…
-

யோவான் விசா : முகத்தில் வீசப்பட்ட ஆசிட், ரொனால்டாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோவின் நாயகன் யார்? | actpnews.com
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியை எதிர்த்து காங்கோ அணி களம் இறங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகல் அணி முதல் கோல் அடித்து மிரட்டியதால், காங்கோ அணி தோற்றுவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நிமிடங்களில், யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் மைதானத்தில் நடந்தது. காங்கோ அணியின் நட்சத்திர வீரர் யோவான் விசா, எதிரணியின் தடுப்பு அரணை மிக…
-

2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி அட்டவணை.. பிசிசிஐ இறுதிக்கட்ட முடிவு | actpnews.com
Last Updated:Jun 12, 2026 8:45 PM IST 2027 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு புதிய மாற்றமாக ஒட்டுமொத்தமாக 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. இவை தலா 7 அணிகள் கொண்ட இரண்டு குரூப்களாகப் பிரிக்கப்படும். ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இத்தொடர் 2027 அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21ஆம் தேதி வரை…
-

உலகக்கோப்பை கால்பந்து: எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி – பிரான்ஸ், நார்வே அணிகள் அபார வெற்றி! | actpnews.com
Last Updated:Jun 17, 2026 3:54 PM IST இந்த வெற்றிகளின் மூலம் ‘ஐ’ பிரிவில் பிரான்ஸ் மற்றும் நார்வே அணிகள் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளன. 2 கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றுகளில், முன்னணி அணிகளான பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகியவை தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளன. ‘ஐ’ பிரிவில் (Group I) இடம்பெற்றுள்ள இந்த அணிகளின்…
-

கிரிக்கெட்டில் அதிகமுறை 400-க்கும் அதிகமான ரன்கள்.. வரலாறு படைத்தது இந்திய அணி.. | actpnews.com
Last Updated:Jun 17, 2026 6:26 PM IST ஷுப்மன் கில் 102 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் விளாசினார். இதில் 22 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். சுப்மன் கில் – இஷான் கிஷன் அதிகமுறை 400க்கும் அதிகமான ரன்கள் எடுத்த அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-ஆவது போட்டி இன்று…
-

FIFA : விசா மறுப்பு, இனப் பாகுபாடு, இன்னும் பல.! – ட்ரம்பின் அமெரிக்காவும் சர்ச்சைகளும் | actpnews.com
கால்பந்தின் உலகளாவிய திருவிழா… எல்லைகளையும், அரசியலையும், கலாச்சாரப் பிரிவினைகளையும் கடந்து நிற்கும் ஒரு மாபெரும் கொண்டாட்டம். ஜூன் 11 அன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் 2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியபோது, கால்பந்தின் இந்த ஆன்மாதான் பறைசாற்றப்பட்டது. ஆனால், ஆட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே, மைதானத்தில் அரங்கேறும் சிலிர்ப்பூட்டும் தருணங்களைவிட, அமெரிக்காவில் நிகழும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்தான் உலகையே உலுக்கி வருகின்றன. விசா மறுப்புகள், நுழைவுத் தடைகள், பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் தீவிர…
-

Messi | கொல்கத்தாவில் நடந்த ‘GOAT Tour’ அசம்பாவிதம்… மெஸ்ஸி தரப்பு குற்றம்சாட்டிய ஒரு நபர்! | actpnews.com
Last Updated:Jun 18, 2026 7:16 AM IST GOAT Tour | கொல்கத்தாவில் உள்ள மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். News18 கொல்கத்தாவில் நிகழ்ந்த அசாதாரண சூழலுக்கு மேற்குவங்க முன்னாள் அமைச்சர் அருப் பிஸ்வாஸ் முக்கிய காரணம் என மெஸ்ஸி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘GOAT Tour’ என்ற பெயரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி,…
-

2 ஆவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி.. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி | actpnews.com
Last Updated:Jun 17, 2026 10:09 PM IST சுப்மன் கில் – இஷான் கிஷன் 3-ஆவது விக்கெட்டுக்கு 224 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் வென்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 2-ஆவது ஒருநாள் போட்டி லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்…
-

ஃபிஃபா உலகக்கோப்பையில் டிராவில் முடிந்த 3 முக்கிய லீக் ஆட்டங்கள்! ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்! | actpnews.com
Last Updated:Jun 16, 2026 4:12 PM IST எகிப்து வீரர் முகமது ஹானி, எதிர்பாராதவிதமாகத் தனது சொந்த அணியின் கோல் பகுதியிலேயே பந்தை அடித்து ‘சேம் சைடு’ கோல் ஆக்கினார் பெல்ஜியம் – எகிப்து மோதலின் விறுவிறுப்பான காட்சி 23-ஆவது ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்று ஆட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கடைசி நிமிட டிவிஸ்ட் – பெல்ஜியம் மற்றும் எகிப்து ஆட்டம் டிரா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின்…
-

தொடரை வெல்லுமா இந்திய அணி? நாளை ஆப்கனுடன் 2 ஆவது ஒருநாள் போட்டியில் மோதல் | actpnews.com
Last Updated:Jun 16, 2026 7:03 PM IST போட்டியின் போது வெப்பநிலை 40°C முதல் 45°C வரை பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டியிலும், 3 ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆப்கன் அணி தோல்வியை சந்தித்தது. 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மசாலாவில் மழையால்…
-

சூர்யவன்ஷியுடன் மோதிய விவகாரம்.. இலங்கை வீரர் மீது கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை.. | actpnews.com
Last Updated:Jun 16, 2026 9:43 PM IST வீரர்கள் தங்களது கவனத்தை விளையாட்டில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. சூர்யவன்ஷியுடன் இலங்கை வீரர்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியின் 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுடன் மைதானத்தில் நேரடியாக மோதலில் ஈடுபட்டது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும்…
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
kyocera сканер мфу мфу kyocera цветной
casa de apuestas que significa Bankers en apuestas perú
kyocera сканер мфу мфу kyocera цена
цветной принтер kyocera купить мфу kyocera
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










мфу kyocera https://printer-kyocera.ru