உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்


<p style="text-align: justify;"><strong>கள்ளக்குறிச்சி:</strong> உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் படுகாயமடைந்தனர்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<h2 style="text-align: justify;">ஆம்னி பேருந்து விபத்து</h2>
<p style="text-align: justify;">நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தது.&nbsp; அந்த பேருந்து இன்று அதிகாலை 4:30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் என்ற இடம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாலத்தின் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">20 பேர் காயம்</h2>
<p style="text-align: justify;">இந்த விபத்தில் ஆம்னி பேருந்தை ஒட்டி வந்த திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் 56 மற்றும் சக ஓட்டுநரான அதே பகுதியை சேர்ந்த குமார் பயணிகள் திருநெல்வேலியை சேர்ந்த பாரதி (26) திருச்செந்தூரை சேர்ந்த மோனிஷ் (25) சென்னையைச் சேர்ந்த இந்துமதி ( வயது 41) உள்பட 20 பேர் காயமடைந்தனர்.&nbsp;</p>
<h2 style="text-align: justify;">மருத்துவமனையில் சிகிச்சை</h2>
<p style="text-align: justify;">விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<h2 style="text-align: justify;">மீட்பு பணி</h2>
<p style="text-align: justify;">தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆம்னி பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>

Source link