பொது சேவையில் பங்கு கேட்பது எப்படி சதித்திட்டமாக இருக்க முடியும்? என்று முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கேள்வி எழப்பியுள்ளார்.

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அதிகாரப் பங்கு மற்றும் கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு வேலை செய்யாது” என்று ஸ்டாலின் கூறினார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், முதல்வரின் கருத்துக்கு எதிர்வினையாற்றி பதிவிட்டுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  1. Porn Pics Avatar

    Hahahaha You are so good

  2. Porn IP Avatar

    Every day is a new beginning

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports