Category: உலகம்

all world news including all countries

  • மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு – ACTPnews.com

    மண்டை ஓட்டுடன் பில்லி சூனியம்..மிரண்டு போன மாலத்தீவு அதிபர்.. கைதான அமைச்சர்கள் பதவி பறிப்பு – ACTPnews.com

    கிராமங்களில் சொந்தக்காரர்களுக்குள் சண்டை வந்து பிடிக்காமல் போனால் செய்வினை வைப்பார்கள். குடும்பம் கெட்டுப்போக வேண்டும் பிசினஸ் நொடிந்து போக வேண்டும் என்று மந்திரவாதியிடம் போய் செய்வினை வைப்பார்கள். மாலத்தீவு அதிபருக்கே பில்லி சூனியம் வைத்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மாலத்தீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ். இவரும் அதிபர் அலுவலகத்தில் அமைச்சராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலத்தீவு அதிபர்…

    Continue Reading

  • அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்… வெற்றி யாருக்கு? – ACTPnews.com

    அதிபர் தேர்தல்: முதல் விவாதத்தில் அனல்பறக்க பேசிய ஜோ பைடன்-டொனால்ட் டிரம்ப்… வெற்றி யாருக்கு? – ACTPnews.com

    வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் முதன்முறையாக  நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்றனர்.  அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேராக விவாதத்தில் பங்கேற்று அவர்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் நேரலையில் எடுத்துச்…

    Continue Reading

  • “தம்மாத்துண்டு துண்ட கட்டிக்கிட்டு”  வியட்நாம் பொதுவெளியில் இந்திய பெண் செய்த செயல்:  கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள் ! – ACTPnews.com

    “தம்மாத்துண்டு துண்ட கட்டிக்கிட்டு”  வியட்நாம் பொதுவெளியில் இந்திய பெண் செய்த செயல்:  கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள் ! – ACTPnews.com

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ரீல்ஸ் வீடியோ எடுத்துப் பிரபலமாவதற்காகச் சிலர் பொது இடங்களில் எல்லை மீறிச் செயல்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு தெருவின் நடுவே குளியல் துண்டை (Towel) மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளார்.  ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் ஒன்றிற்கு அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடும் இந்த வீடியோ, கடந்த மே 24-ஆம் தேதி…

    Continue Reading

  • பார்படாஸில் கடும் சூறாவளி… விமான நிலையம் மூடல்… நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு! – ACTPnews.com

    பார்படாஸில் கடும் சூறாவளி… விமான நிலையம் மூடல்… நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு! – ACTPnews.com

    பார்படாஸ்: பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. வெற்றி கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்திய வீரர்கள் இன்று நள்ளிரவு பார்படாஸில் இருந்து இந்தியா வருகை தர இருந்தனர். மும்பை விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது.…

    Continue Reading

  • ”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள் – ACTPnews.com

    ”குழந்தைகளின் மலர்போன்ற கைகளில் மாமிசம் ஒழுக வேண்டுமா”..உலக நாடுகளை எச்சரிக்கும் வைரமுத்துவின் ஆழமான வரிகள் – ACTPnews.com

    போர்கள் ஒழிக்கப்படவேண்டியவை இல்லையெனில் – அவை பூமியை ஒழித்துவிடும் எனவும், மூன்றாம் உலகப்போர் மூண்டால் அதுதான் இறுதிப்போர் எனவும் எச்சாரித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து…

    Continue Reading

  • இலங்கையின் புதிய அதிபராகும் முதல் இடதுசாரி அநுர குமார திசநாயக ! – ACTPnews.com

    இலங்கையின் புதிய அதிபராகும் முதல் இடதுசாரி அநுர குமார திசநாயக ! – ACTPnews.com

    மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து, தற்போது அதில் இருந்து கொஞ்சம் கோஞ்சமாக மீண்டும் வருகிறது இலங்கை. இந்த நிலையில், இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில், 1.7 கோடி பேர் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்கு அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை ரூபாய் மதிப்பில் 1,000 கோடி என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.276 கோடி…

    Continue Reading

  • ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப்  – ACTPnews.com

    ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அவ்வளவு தான்: நெதன்யாகுவை போனில் வெளுத்துவிட்ட டிரம்ப்  – ACTPnews.com

    பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் சமீபத்தில் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் முக்கிய ராணுவ விமானத் தளங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைகளை வீசியது. எனினும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை நடுவானிலேயே…

    Continue Reading

  • இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு – ACTPnews.com

    இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு – ACTPnews.com

    இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயகே (56) இன்று பதவியேற்க உள்ளார். மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை தற்போதுதான் கொஞ்சம், கொஞ்சம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையின் 9-வது அதிபருக்கான தேர்தல் நேற்று முன் தினம் (செப்.21) நடைபெற்றது. இதில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 1.7 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 13,421 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு இடையே எந்தவித வன்முறையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த தேர்தலுக்குத்தான் அதிக செலவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து நேற்று வாக்கு…

    Continue Reading

  • இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் – பிரதமர் மோடிக்கு சுந்தர் பிச்சை பாராட்டு – ACTPnews.com

    இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம் – பிரதமர் மோடிக்கு சுந்தர் பிச்சை பாராட்டு – ACTPnews.com

    ஏஐ தொழில்நுட்பம் மக்களுக்குப் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற் கடந்த 21ம் தேதி 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளின் நல்லுறவு உள்ளிட்டவை குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்களைச் சந்தித்த பேசி அவர், அமெரிக்கா வாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றினார். முன்னதாக அமெரிக்கா வந்த பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், நியூயார்க்கில் உலகின்…

    Continue Reading

  • ”ட்ரம்பை கொல்பவருக்கு 1.25 கோடி ரூபாய்..” விசாரணையில் வெளியான பகீர் லெட்டர்.. – ACTPnews.com

    ”ட்ரம்பை கொல்பவருக்கு 1.25 கோடி ரூபாய்..” விசாரணையில் வெளியான பகீர் லெட்டர்.. – ACTPnews.com

    டொனால்டு ட்ரம்பை கொல்பவருக்கு இந்திய மதிப்பின்படி சுமார்1.25 கோடி ருபாய் தருகிறேன் என்று கொலையாளி எழுதி வைத்திருந்த லெட்டர் சிக்கியதால் பரபரப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் தொடர் பிரசார…

    Continue Reading

  • ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு – ACTPnews.com

    ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு – ACTPnews.com

    உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது நோபல் பரிசு. கலை, இலக்கியம், அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அணு ஆயுதங்கள் அற்ற உலகினை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடங்க்யோ என்கிற அமைப்புக்கு இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் உலகை பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இரண்டாம்…

    Continue Reading

  • காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… ஹமாஸ் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் பலி – ACTPnews.com

    காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… ஹமாஸ் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் பலி – ACTPnews.com

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹாமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதையடுத்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக…

    Continue Reading

  • “பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” – உக்ரைன் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேச்சு – ACTPnews.com

    “பிரச்னைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்” – உக்ரைன் குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேச்சு – ACTPnews.com

    அமைதியான முறையில் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்புடனும் பிரிக்ஸ் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பு வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளுடன், 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் காசன் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் ரஷ்யாவின் காசன் நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு…

    Continue Reading

  • புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. காரணம் இதுதானா? – ACTPnews.com

    புதிய இடத்திற்கு அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. காரணம் இதுதானா? – ACTPnews.com

    உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் பெங்களூரில் உள்ள  உலக வர்த்தக மையத்தில் (WTC) அமைந்துள்ளது.இந்நிலையில், அமேசான் நிறுவனம் தங்களது அலுவலகத்தை பெங்களூரு விமான நிலையம் அருகே உள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்ற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. செலவுகளை குறைக்கும் விதமாகவும், வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமேசான் நிறுவனம், உலக வர்த்தக மைய…

    Continue Reading

  • கைவிரித்தது அமெரிக்கா- என்ன செய்யப் போகிறது உக்ரைன்? – ACTPnews.com

    கடந்த பிப்.,28 ஆம் தேதி உலக அரசியலை திக்குமுக்காடச் செய்தது வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை. அனல் பறந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாத நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து விருந்தினை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார் ஜெலென்ஸ்கி. இந்நிலையில் புதிய உத்தரவு ஒன்றினை டிரம்ப் வெளியிட்டுள்ளது உலக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான சண்டை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்படும்…

    Continue Reading

  • நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்.. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி – ACTPnews.com

    நான் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன்.. பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸின் முதல் பேட்டி – ACTPnews.com

    போயிங் ஸ்டார்லைனர் (Boeing’s starliner) விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்த வீரர்கள், ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் காப்ஸ்யூல் (spaceX’s Dragon capsule) மூலமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டு பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்விற்கு பிறகு, முதன் முறையாக நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 (NASA’s SpaceX crew-9) வாஷிங்டனில்…

    Continue Reading

  • Google Android: 16 GB மொபைல் .. செக் வைத்தது கூகுள் ஆண்ட்ராய்டு 15 – ACTPnews.com

    Google Android: 16 GB மொபைல் .. செக் வைத்தது கூகுள் ஆண்ட்ராய்டு 15 – ACTPnews.com

    பிளே ஸ்டோர் சர்வீஸ்களை ஸ்மார்ட்போனில் பெற தற்போதுள்ள குறைந்தபட்ச ரேம் மற்றும் சேமிப்பிட கொள்ளளவினை அதிகரித்துள்ளது கூகுள். மொபைல் போன் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ராய்டு 15 உடன் புதிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய விரும்பினால், அவர்கள் குறைந்தபட்சம் 32 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்தை (32 GB Internal storage) சேர்க்க வேண்டும். 32 GB சேமிப்பிடம் இல்லையென்றால், நீங்கள் கூகுள் மொபைல் சர்வீஸ்களை பயன்படுத்த முடியாமல் போகலாம்.  சேமிப்பு கொள்ளளவினை கூகுள் உயர்த்துவது இது முதல் முறையல்ல. முன்னதாக…

    Continue Reading

  • Honda Dio: ஹோண்டாவின் புதிய டியோ 125 .. மிரட்டலான புதிய வசதிகளுடன் 1 லட்சத்திற்கும் குறைவாக – ACTPnews.com

    Honda Dio: ஹோண்டாவின் புதிய டியோ 125 .. மிரட்டலான புதிய வசதிகளுடன் 1 லட்சத்திற்கும் குறைவாக – ACTPnews.com

    இருச்சக்கர வாகனங்களான பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹோண்டா நிறுவனம் டியோ (Dio) 125 ஸ்கூட்டர் மாடலை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரிலுள்ள தனித்துவமான அம்சங்கள் என்ன? என்ன விலைக்கு கிடைக்கிறது? போன்ற தகவல்களை இந்த பகுதியில் காணலாம். புதிய டியோ 125, இதன் முந்தைய மாடலின் வடிவமைப்பிலிருந்து மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே, பேர்ல் ஸ்போர்ட்ஸ் மஞ்சள், பேர்ல் இக்னியஸ் பிளாக்…

    Continue Reading

  • TikTok ban: டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கெடு: மனமிறங்கிய டொனால்டு டிரம்ப் – ACTPnews.com

    TikTok ban: டிக் டாக் செயலிக்கு மேலும் 75 நாள் கெடு: மனமிறங்கிய டொனால்டு டிரம்ப் – ACTPnews.com

    டிரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றது முதலே உலகின் ஒட்டுமொத்த கவனமும் டிரம்ப் நோக்கி தான் இருக்கிறது. இதற்கு காரணம் அவர் எடுக்கும் சில அதிரடி முடிவுகள் தான். சமீபத்தில் பரஸ்பர வரி விதிப்பு என அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அந்நிய நாட்டு பொருட்கள் மீதான வரி விதிப்பு தொடர்பான டிரம்பின் அறிவிப்பு கிட்டத்தட்ட ஒரு பொருளாதார யுத்தத்திற்கு வழி வகுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனிடையே புகழ்பெற்ற சமூக வலைத்தளமாக விளங்கும், டிக் டாக்…

    Continue Reading

  • புதிய போப் யார்? தயாராகும் வாடிகன்.. தனிமைப்படுத்தப்படும் கார்டினல்கள் – ACTPnews.com

    புதிய போப் யார்? தயாராகும் வாடிகன்.. தனிமைப்படுத்தப்படும் கார்டினல்கள் – ACTPnews.com

    கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.,21 ஆம் தேதி உடல்நலக் குறைப்பாட்டினால் காலமானார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸ் மறைவினைத் தொடர்ந்து செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைப்பெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு உட்பட உலகின் அனைத்து முன்னணி தலைவர்களும் பங்கேற்று தங்களது மரியாதையினை செலுத்தியினர். இதனைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்வதற்காக நாளை (மே 7) கூடுகிறது கார்டினல்கள் கூட்டம்.…

    Continue Reading

  • லண்டனில் லலித் மோடி பிறந்தநாள் : விஜய் மல்லையா கூத்தாட்டம் – வைரலாகும் வீடியோ – ACTPnews.com

    லண்டனில் லலித் மோடி பிறந்தநாள் : விஜய் மல்லையா கூத்தாட்டம் – வைரலாகும் வீடியோ – ACTPnews.com

    பணமோசடி வழக்கில் தண்டனையில் இருந்து தப்பிக்க லலித் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  இந்திய சட்டங்களிலிருந்து தப்பிக்க லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களான லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா பார்ட்டி, கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு கூத்தடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பணமோசடி உட்பட பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு லலித் மோடி 2010 முதல் லண்டனில் வசித்து வருகிறார்.மறுபுறம், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா…

    Continue Reading

  • இஸ்லாமியர்கள் புனித தலம் மக்காவில் தற்கொலை முயற்சி : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ – ACTPnews.com

    இஸ்லாமியர்கள் புனித தலம் மக்காவில் தற்கொலை முயற்சி : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ – ACTPnews.com

    இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா அமைந்துள்ளது. மக்கா அல் ஹராம் மசூதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் மக்கா அல் ஹராம் மசூதிக்கு சென்ற இஸ்லாமியர் ஒருவர் திடீரென்று தற்கொலைக்கு முயன்றார். மசூதியின் மேல்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் அந்த நபர், திடீரென்று அவர் மசூதியில் மேல் இருந்து கீழே குதித்தார்.  அப்போது மசூதியின் தரைளத்தில் சவுதி அரேபியாவின் பாதுகாவலர் கண்காணிப்பு…

    Continue Reading

  • வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம்  – ACTPnews.com

    வெனிசுலா அதிபர் அவரது மனைவி நாடு கடத்தல் : அமெரிக்கா செயலுக்கு கியூபா, ஈரான் கண்டனம்  – ACTPnews.com

    அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.  தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப்…

    Continue Reading

  • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்  – ACTPnews.com

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்  – ACTPnews.com

    நேற்றிரவு ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய முதல் நேரடித் தாக்குதல் இதுவாகும். லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குலை நடத்திவருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி அமலான…

    Continue Reading

  • பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி  – ACTPnews.com

    பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி  – ACTPnews.com

    உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவராக நம்பப்படும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும்  இருவரும் பரஸ்பர விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை அந்த தம்பதி இணைந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர்.  எங்களுடைய உறவை எப்படி கொண்டு செல்வது என மிக அதிகமாக யோசித்த பிறகு, எங்களுடைய இல்லற வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று பில்கேட்ஸ், மெலிண்டா தம்பதி அந்த பதிவில்…

    Continue Reading

  • வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு! – ACTPnews.com

    வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு! – ACTPnews.com

    உலகப்புகழ் பெற்ற தகவல் தொடர்புச் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது ரஷ்யா. அந்நாட்டின் சட்டங்களுக்குப் புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்த முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ‘வீசாட்’ (WeChat) பாணியில், ரஷ்யா ‘மேக்ஸ்’ (MAX) என்ற புதிய சூப்பர் ஆப்-ஐ உருவாக்கியுள்ளது. இதில் வீடியோ கால், ஆடியோ கால் மற்றும் பணப்பரிவர்த்தனை போன்ற வசதிகளுடன் அரசுச் சேவைகளையும் பெற முடியும். இந்தச் செயலியை மக்கள்…

    Continue Reading

  • 3 நாட்களில், 10 ஆயிரம் ஆணுறைகள் காலி: குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் ஜாலி, கூடுதலாக வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறல்  – ACTPnews.com

    3 நாட்களில், 10 ஆயிரம் ஆணுறைகள் காலி: குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் ஜாலி, கூடுதலாக வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறல்  – ACTPnews.com

    2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கில் உலக நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  போட்டி தொடங்கிய முதல் சில நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்து போய்விட்டன. போட்டி ஏற்பாட்டளர்கள் வழங்கிய 10,000 பேக் ஆணுறைகள் விரைவாக தீர்ந்து போனதால், மீண்டும் வழங்க முடியாமல் அதிகாரிகள் திணறியுள்ளனர். இந்த போட்டிகளின் போது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வாரக்கணக்கில் அருகிலேயே வசிக்கின்றனர், எனவே நிச்சயம் அவர்களுக்கு ஆணுறை அதிகளவில் தேவைப்படலாம். 2024 ஆம் ஆண்டு பாரிஸில்…

    Continue Reading

  • உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம்  – ACTPnews.com

    உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம்  – ACTPnews.com

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…

    Continue Reading

  • போலீஸ் ஸ்டேஷனாக மாற போகும் ஹிட்லர் பிறந்த வீடு: மக்கள் அமோக வரவேற்பு – ACTPnews.com

    போலீஸ் ஸ்டேஷனாக மாற போகும் ஹிட்லர் பிறந்த வீடு: மக்கள் அமோக வரவேற்பு – ACTPnews.com

    ஜெர்மனி நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள பிரானாவ் அம் இன் (Braunau am Inn) என்ற ஊரில், சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு உள்ளது. நீண்ட நாட்களாகப் பாழடைந்து கிடக்கும் இந்தக் கட்டிடத்தைக் காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடம் நாஜி ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்பினர் கூடும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம். 2016-ஆம் ஆண்டில் ஒரு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்த…

    Continue Reading

  • விண்வெளியில் எலான் மஸ்க் உருவாக்கும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் : சிப்கள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை  – ACTPnews.com

    விண்வெளியில் எலான் மஸ்க் உருவாக்கும் பிரம்மாண்ட டேட்டா சென்டர் : சிப்கள் உருகிவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை  – ACTPnews.com

    விண்வெளியில் சுமார் 10 லட்சம் செயற்கை கோள்களை நிலைநிறுத்தி, ஒரு மாபெரும் நெட்வொர்க்கை உருவாக்க  எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளார். பூமியைப்போல இரவு நேரம் அல்லது மேகமூட்டம் போன்ற தடைகள் விண்வெளியில் இல்லை என்பதால், அங்கு 24 மணிநேரமும் தடையற்ற சூரியசக்தியை பெற முடியும். மேலும், பூமியில் சர்வர்களை குளிர்விக்க அதிக நீர் மற்றும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், விண்வெளியின் இயற்கையான குளிர்ச்சியான சூழல் இதற்கு உதவும் என மஸ்க் நினைக்கிறார். விண்வெளியில் உள்ள இந்த டேட்டா சென்டர்கள்…

    Continue Reading

  • இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம் : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு – ACTPnews.com

    இஸ்ரேல்- ஈரான் போர், மாறி மாறி தாக்குதல் பதற்றம் : வளைகுடா நாடுகள் கடும் பாதிப்பு – ACTPnews.com

    யுஏஇ-ல், சுற்றுலா தலங்கள், பங்கு சந்தைகள்  மூடல் ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம்,குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலில் இறங்கி இருக்கிறது. போர் எதிரொலியாக பிராந்தியம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், துபாயில் உள்ள உலகளாவிய…

    Continue Reading

  • இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? – ACTPnews.com

    இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல் :  பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டார், ஈரான் அறிவிப்பு? – ACTPnews.com

    ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், குவைத் உள்பட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலில் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பெஞ்சமின் நெதன்யாகு உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.  ஈரானில் 555 பேர் பலி கடந்த 28-ந்தேதி முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்…

    Continue Reading

  • “இது உனக்குத் தேவையா” ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு – ACTPnews.com

    “இது உனக்குத் தேவையா” ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு – ACTPnews.com

    கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. போரின் முதல் நாளில் மட்டும் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் போர் நீண்ட…

    Continue Reading

  • இந்தியாவில் 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள்  தவிப்பு – ACTPnews.com

    இந்தியாவில் 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள்  தவிப்பு – ACTPnews.com

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகள்  மற்றும்  மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த நாடுகள் தங்களது வான்வழியை மூடியுள்ளன.  இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை…

    Continue Reading

  • “பஞ்சாயத்து ஓவர்” ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல் – ACTPnews.com

    “பஞ்சாயத்து ஓவர்” ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல் – ACTPnews.com

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்மூஸ்  நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் ஹார்மூஸ் நீரிணை பகுதியில்…

    Continue Reading

  • ஈரான் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு   – ACTPnews.com

    ஈரான் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு   – ACTPnews.com

    பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவிட்டுள்ளது.  அந்த பதிவில் , “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது.  இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10…

    Continue Reading

  • உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை –  ஈரான் புதிய அறிவிப்பு  – ACTPnews.com

    உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை –  ஈரான் புதிய அறிவிப்பு  – ACTPnews.com

    ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது. இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் அந்நாட்டுக் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், நீரிணை வழியே…

    Continue Reading

  • 98-வது ஆஸ்கார் விருதுகள் கோலாகலம்: அதிக விருதுகளை தட்டி சென்ற அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ்  – ACTPnews.com

    98-வது ஆஸ்கார் விருதுகள் கோலாகலம்: அதிக விருதுகளை தட்டி சென்ற அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ்  – ACTPnews.com

    98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில்…

    Continue Reading

  • நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி  – ACTPnews.com

    நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி  – ACTPnews.com

    அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் நட்புக் கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.…

    Continue Reading

  • ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட்  – ACTPnews.com

    ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட்  – ACTPnews.com

    அமெரிக்காவின் அழைப்பை உலக நாடுகள் நிராகரித்தால் அதிபர் டிரம்ப் கடும் அப்செட்டில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ல நாடுளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். கூட்டு பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள்…

    Continue Reading

  • டிரம்ப் – நெதன்யாகு இடையே மோதல்: அமெரிக்கா இஸ்ரேல் உறவில் விரிசல் – ACTPnews.com

    டிரம்ப் – நெதன்யாகு இடையே மோதல்: அமெரிக்கா இஸ்ரேல் உறவில் விரிசல் – ACTPnews.com

    கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  ஈரான் தங்கள் நாடு மீதான தாக்குதலுக்க பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.…

    Continue Reading

  • ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – ACTPnews.com

    ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு  – ACTPnews.com

    மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம், 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியையும் ஈரான் மூடியதால், உலகெங்கும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின்…

    Continue Reading

  • ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என இஸ்ரேல் அறிவிப்பு:நெதன்யாகு டிரம்ப் மோதல் உச்சகட்டம்   – ACTPnews.com

    ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என இஸ்ரேல் அறிவிப்பு:நெதன்யாகு டிரம்ப் மோதல் உச்சகட்டம்   – ACTPnews.com

    ஈரான் மீது கடந்த 28-ம் தேதி முதல் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.  ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும். ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன.. இந்த போரின் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள்…

    Continue Reading

  • அமெரிக்க உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன: வடகொரியா கிம் ஜாங் சாடல்  – ACTPnews.com

    அமெரிக்க உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன: வடகொரியா கிம் ஜாங் சாடல்  – ACTPnews.com

    வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 சதவிகித வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அனைவரும் வியக்கும் விதமாக இந்தத் தேர்தலில் 99.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.  அதில், அதிபராகவுள்ள கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி 99.93 சதவிகித வாக்குகளையும் முழு ஆதரவையும் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வாகவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதிபராக பதவியேற்ற…

    Continue Reading

  • அமெரிக்க எஃப்-18 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட ஈரான் – ACTPnews.com

    அமெரிக்க எஃப்-18 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட ஈரான் – ACTPnews.com

    கடந்த 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்க பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த போரின் காரணமாக கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதன்…

    Continue Reading

  • 4 லிட்டர் பெட்ரோல் பதுக்கியவருக்கு 21 நாட்கள் சிறை : எந்த நாட்டில் தெரியுமா ? – ACTPnews.com

    4 லிட்டர் பெட்ரோல் பதுக்கியவருக்கு 21 நாட்கள் சிறை : எந்த நாட்டில் தெரியுமா ? – ACTPnews.com

    ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கடந்த 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக  ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் உள்பட பெட்ரோல்,டீசல் பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அந்நாட்டு அரசு எரிபொருள் பதுக்கலுக்குத் தடை விதித்துள்ளது. எரிபொருள் விநியோகத்துக்காக பிரத்யேக ‘கியூ.ஆர்.’ குறியீடு அடிப்படையிலான முறையை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த…

    Continue Reading

  • தரை வழித்தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிக்கு செல்வார்கள் : ஈரான் எச்சரிக்கை  – ACTPnews.com

    தரை வழித்தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிக்கு செல்வார்கள் : ஈரான் எச்சரிக்கை  – ACTPnews.com

    ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானை இலக்காகக் கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வளைகுடா நாடுகளை ஈரான் ஜனாதிபதி மசூத்…

    Continue Reading

  • ‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூல்: டாலருக்கு பதில் ரியாலுக்கு அனுமதி – ACTPnews.com

    ‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூல்: டாலருக்கு பதில் ரியாலுக்கு அனுமதி – ACTPnews.com

    கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இடையே கடும் போர் நடந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 25 சதவீத இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அங்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது.  ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு ‘ஹார்முஸ் நீரிணை மேலாண்மை…

    Continue Reading

  • அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம்  – ACTPnews.com

    அமெரிக்க புதிய வகை கொரோனா: 25 மாகாணங்களில் பரவல் மக்கள் அச்சம்  – ACTPnews.com

    2024-ம் ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் காணப்பட்ட இந்த தொற்று, 2025-ம் ஆண்டில் பரவலாக பரவியது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் என 2021-ம் ஆண்டு பரவலாக காணப்பட்ட வைரசின் தொடர்ச்சியாக இது உள்ளது. இதன் புரதம் 70 முதல் 75 வகையான உருமாற்றங்களை பெற்றுள்ளது. இதனால், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், இதனால் உடனடியான அச்சுறுத்தல் எதுவும் பெரிய அளவில் இல்லை என டாக்டர் ஒருவர் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள…

    Continue Reading

  • மாறி மாறி தாக்குதல்: ஈரான் பி1 பாலம் மீது ஏவுகணை தாக்குதல், இஸ்ரேல் ரயில் நிலையத்தை தகர்ப்பு  – ACTPnews.com

    மாறி மாறி தாக்குதல்: ஈரான் பி1 பாலம் மீது ஏவுகணை தாக்குதல், இஸ்ரேல் ரயில் நிலையத்தை தகர்ப்பு  – ACTPnews.com

    கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் முடக்கி வைத்துள்ளது. அதனை திறக்க அமெரிக்க அதிபர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும், ஈரான் சற்றும் அசராமல், தொடர்ந்து அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார். ஆனால், அதற்கு பயப்படாத ஈரான், ட்ரம்ப்பிற்கு பதில் மிரட்டல்களை விடுத்து வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மிக உயரமானப் பாலமாகவும் ஈரானின் பொறியியல் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் கராஜை தலைநகர்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed