Category: தமிழகம்

Tamil nadu latest news like online news portal

  • மக்களுக்கு நலத்திட்டங்களும் சென்றடைய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு | actpnews.com

    மக்களுக்கு நலத்திட்டங்களும் சென்றடைய முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு | actpnews.com

    ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முக்கிய உத்தரவு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாகவும் தாமதமின்றியும் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தகுதியான பயனாளிகள் அரசு நலத்திட்டங்களை முழுமையாக பெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முன்னுரிமை…

    Continue Reading

  • 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் ஆபத்து – அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை | actpnews.com

    700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள் குறையும் ஆபத்து – அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை | actpnews.com

    அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் குறையும் என கவலை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed University) மாறுவதால், அரசு ஒதுக்கீட்டில் கிடைத்து வந்த சுமார் 700 எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள் குறையும் நிலை உருவாகியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால், குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பை தொடர விரும்பும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என…

    Continue Reading

  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி பெயரை பொதுமக்கள் எழுத அன்புமணி எதிர்ப்பு | actpnews.com

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி பெயரை பொதுமக்கள் எழுத அன்புமணி எதிர்ப்பு | actpnews.com

    சாதி பெயரை எழுதும் முறைக்கு அன்புமணி எதிர்ப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் தாங்களாகவே சாதியின் பெயரை எழுதும் நடைமுறையை தவிர்த்து, அரசின் அதிகாரப்பூர்வ சாதி பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முன்னோட்ட ஆய்வு குறித்து கவலை இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட ஆய்வில், சாதி விவரத்தை காலியிடத்தில் எழுதும் நடைமுறை பின்பற்றப்படுவதாக…

    Continue Reading

  • திமுகவில் சேர ரூ.50 கோடி பேரம் – ஆடியோ வெளியிட்டு தவெக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு | actpnews.com

    திமுகவில் சேர ரூ.50 கோடி பேரம் – ஆடியோ வெளியிட்டு தவெக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு | actpnews.com

    ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. விஜி சரவணன் புதிய குற்றச்சாட்டு தமிழக அரசியலில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. விஜி சரவணன் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் இணையுமாறு தன்னிடம் பணம் மற்றும் பதவி வழங்குவதாக பேரம் பேசப்பட்டதாக தெரிவித்தார். “ரூ.50 கோடி மற்றும் அமைச்சர் பதவி வழங்குவதாக கூறினர்” விஜி சரவணன் கூறுகையில், தனது…

    Continue Reading

  • விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?

    விஜய் ஆட்சியை கவிழ்க்க பேரம்? இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறாரா செந்தில் பாலாஜி?

    வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியது த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க பணம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.. Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எம்.எல்.ஏ. புகார் இந்த…

    Continue Reading

  • “த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com

    “த.வெ.க. – அதிமுக இணைப்பு குறித்து மீண்டும் பேசினால் சட்ட நடவடிக்கை” – ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி. முனுசாமி எச்சரிக்கை | actpnews.com

    கிருஷ்ணகிரியில் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலர் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) இணையும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்தார். Read more : “குதிரை பேர அரசியலை உருவாக்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | Latest Tamil Political News “அதிமுக தொண்டர்களை…

    Continue Reading

  • “குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com

    “குதிரை பேர அரசியலை தொடங்கியது திமுகதான்” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் | actpnews.com

    ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழக அரசியலில் குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குதிரை பேர அரசியல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.   Read more : ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? நடிகை த்ரிஷா பகிர்ந்த பரபரப்பு பதிவு | Trisha Latest News “குதிரை பேர அரசியலின் தொடக்கம் திமுக காலத்திலேயே” செய்தியாளர்களின் கேள்விகளுக்கு…

    Continue Reading

  • ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? பிரபல ஆடை நிறுவனம் குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்த அதிருப்தி | actpnews.com

    ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாற்றம்? பிரபல ஆடை நிறுவனம் குறித்து நடிகை த்ரிஷா பகிர்ந்த அதிருப்தி | actpnews.com

    இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அனுபவத்தை பகிர்ந்த த்ரிஷா நடிகை த்ரிஷா, ஆன்லைன் மூலம் வாங்கிய ஆடைகள் தொடர்பாக ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. த.வெ.க.வில் இணைந்த புகழேந்தி: எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சை கருத்து | ACTP News “மூன்றாவது முறையாக இதே அனுபவம்” தனது பதிவில், ஆன்லைனில் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் இருந்ததாகவும், இது முதல் முறை அல்ல;…

    Continue Reading

  • தவெகவில் இணைந்த புகழேந்தி… கட்சியை அழிக்கனும்னா எடப்பாடியிடம் கொடுக்கலாம் என விமர்சனம் | actpnews.com

    தவெகவில் இணைந்த புகழேந்தி… கட்சியை அழிக்கனும்னா எடப்பாடியிடம் கொடுக்கலாம் என விமர்சனம் | actpnews.com

    த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அ.தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் த.வெ.க.வில் இணைந்து வரும் நிலையில், இந்த இணைவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. கட்சி தலைமையகத்தில் முக்கிய ஆலோசனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக இணைந்த நிர்வாகிகளை கட்சித் தலைமை வரவேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

    Continue Reading

  • தவெக ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | actpnews.com

    தவெக ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு: செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | actpnews.com

    எம்.எல்.ஏ. புகாரைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை தீவிரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் இந்த விவகாரம், ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து கவனம் பெற்றது. தனது ஆதரவை…

    Continue Reading

  • விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன் | actpnews.com

    விஜய் ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீசார் சம்மன் | actpnews.com

    தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் கொடுத்து பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ரூ.35 கோடி பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. புகார் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தன்னை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தெரிவித்திருந்தார். கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில்…

    Continue Reading

  • Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களல் திடீர் சோதனை!

    Raid : முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களல் திடீர் சோதனை!

    திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. திமுகவின் முக்கியமான நபரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, தொடர்ந்து 7 முறை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சியில், பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமான 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 35க்கும் மேற்பட்ட அதிகாரிகள்,…

    Continue Reading

  • Trisha : திரிஷா தான் அடுத்த முதல்வர் – மாநகராட்சி அலுவகத்தில் படத்தை வைக்க கோரிக்கை

    Trisha : திரிஷா தான் அடுத்த முதல்வர் – மாநகராட்சி அலுவகத்தில் படத்தை வைக்க கோரிக்கை

    நடிகை திரிஷா தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்றும், அவரது படத்தை மாநகராட்சி அலுவகத்தில் வைத்தே ஆக வேண்டும் என்றும் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அதிகாரப்பூர்வ முதல்வர் படத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மஞ்சள் பின்னணி கொண்ட முதல்வர் விஜய்யின் புகைப்படம் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி போன்றவற்றில், தவெகவுக்கு உறுப்பினர்கள் இல்லை என்ற…

    Continue Reading

  • சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்…

    சட்டப்பேரவையில் திமுகவை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்… ஆடிப்போன உதயநிதி ஸ்டாலின்…

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசியதைக் கேட்டு எதிர்க்கட்சத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, திமுகவை நேரடியாக குறிப்பிடாமல், வார்த்தை ஜாலங்கள் மூலமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அதிலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே திமுக ஆட்சியில் 9 மாதங்களாக டிஜிபி நியமிக்காமல் இருந்த‍து தான் என்று குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, அது என்னப்பா? என்று பின்னால்…

    Continue Reading

  • கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதமைமைச்சர் விஜய் சாமி தரிசனம் ஏன்?

    கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதமைமைச்சர் விஜய் சாமி தரிசனம் ஏன்?

    கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தனது 3 நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தை…

    Continue Reading

  • காவிரியில் நீர் திறப்பு இல்லை – டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவிக்க அன்புமணி கோரிக்கை

    காவிரியில் நீர் திறப்பு இல்லை – டெல்டாவை வறட்சி பகுதியாக அறிவிக்க அன்புமணி கோரிக்கை

    குறுவை பயிருக்கு காவிரியில் நீர் திறக்கப்படவில்லை: டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நடைமுறை இந்த ஆண்டு பின்பற்றப்படாததால், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா…

    Continue Reading

  • சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம்  – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தலில் நடந்திருப்பது சாகசமோ, சாதனையோ கிடையாது, புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி : ஸ்டாலின் ஆதங்கம்  – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: ”என்ன நடந்தாலும், சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதிக்கும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் அமைந்திருக்கிறது. அதுவும் நமது…

    Continue Reading

  • சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய  முதல்வர் விஜய்! – ACTPnews.com

    சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய  முதல்வர் விஜய்! – ACTPnews.com

    முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பெண் காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக வழங்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை அவரே இயக்கிப் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது:…

    Continue Reading

  • தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  – ACTPnews.com

    தவெகவினர் எந்த டெண்டரும் எடுக்கக்கூடாது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  – ACTPnews.com

    சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகளுடனும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஷெனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.அதன்பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஒவ்வொரு உறுப்பினர்களும் தொகுதி பிரச்னைகளை அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக் கூட்டம் நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் வில்லிவாக்கத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் அரசு ஊழியர்களுடன் நடைபெற்றது. அதன்படி மூன்று வகையாக பிரச்னைகளை…

    Continue Reading

  • பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – ACTPnews.com

    பரந்தூர் விமான நிலைய விவகாரம்: முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை – ACTPnews.com

    சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்தது.திமுக ஆட்சியில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர்.  இந்தத் திட்டம் அறிவித்தது முதல் அங்குள்ள மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025 ஆம்…

    Continue Reading

  • 21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன 4  அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்:  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ‘ட்விஸ்ட்’  – ACTPnews.com

    21 எம்எல்ஏக்கள் ஓகே, ஆன 4  அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சிக்கல்:  சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ‘ட்விஸ்ட்’  – ACTPnews.com

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி என இரு அணிகளாகப் பிரிந்திருந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பும் ஒன்றிணைந்தன. கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததற்காக, எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கினர்.  இதனைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சபாநாயகரைச் சந்தித்து, தாங்கள் அளித்த புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், தவெகவுக்கு…

    Continue Reading

  • தேர்தல் தோல்வி, 234 தொகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் குழு: ஸ்டாலின் ஆலோசனை  – ACTPnews.com

    தேர்தல் தோல்வி, 234 தொகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் குழு: ஸ்டாலின் ஆலோசனை  – ACTPnews.com

    இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன். இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின் பிரதிநிதிகளாக, எனது சார்பில் அனுப்பி வைக்கப்படுபவர்கள். எனது காதுகளாகச் செல்பவர்கள். தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை.…

    Continue Reading

  • தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம்  – ACTPnews.com

    தவெக ஆட்சி மூன்று மாதமாவது தாங்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது ? முன்னாள் அமைச்சர் தங்கம் விமர்சனம்  – ACTPnews.com

    விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள்…

    Continue Reading

  • முதல்வர் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் – ACTPnews.com

    முதல்வர் விஜய் 11-ம் தேதி டெல்லி செல்கிறார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் – ACTPnews.com

    சென்னை எழிலகத்தில் வருவாய் பேரிடர் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த  அமைச்சர் செங்கோட்டையன், “வருவாய் துறையில் மக்களுக்கான சேவைகளை விரைவாக வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிகளை இன்று நடத்துகிறோம். குறிப்பாக சாதித் சான்றிதழ் விரைந்து கிடைக்க என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். விண்ணப்பம் 5 நாட்களில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.  ரேஷன் கார்டுகள், முதியோர்…

    Continue Reading

  • பிளவு , உட்கட்சி மோதல், சமாதான தூதுவரான ரஜினி: அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை  – ACTPnews.com

    பிளவு , உட்கட்சி மோதல், சமாதான தூதுவரான ரஜினி: அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை  – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மோதல்  ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி என இரு அணி உருவாகி உள்ளது. தவெகவை ஆதரவு நிலைப்பாடுடன் வேலுமணி செயல்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்ற குரல் அதிமுக ஒலிக்க தொடங்கி உள்ளது.  பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என எடப்பாடி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள…

    Continue Reading

  • முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு – ACTPnews.com

    முதல்வர் விஜய் உள்பட 9 அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு – ACTPnews.com

    தமிழக முதல்வராக மே 10-ம் தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் சேர்த்து புஸ்ஸிஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்பட 9 பேர் பதவியேற்று கொண்டனர். 6 நாட்கள் ஆகியும் அமைச்சர்களின் இலாகா ஒதுக்காமல் இருந்தது. இது முதல்வர் விஜய் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர்களாக பொறுப்பேற்றும், இலாகாவிற்கு அமைச்சர்கள் ஒதுக்காமல் இருந்ததால் கோப்புகள் தேக்கம் அடைந்தன.  இந்த நிலையில், இன்று மதியம் முதல்வர் விஜய் முதன்மை செயலர் செந்தில் ஆளுநரை நேரில் சந்தித்து இருந்தார்.…

    Continue Reading

  • கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், ஒரு வேளை சோறு போட்டதில்லை: சீமான் மீது இலங்கை எம்பி காட்டம்  – ACTPnews.com

    கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர், ஒரு வேளை சோறு போட்டதில்லை: சீமான் மீது இலங்கை எம்பி காட்டம்  – ACTPnews.com

    தமிழகம் வந்துள்ள இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன், சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்து இருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு ஆதரவாக விஜய் பேச வேண்டும். சீமான் வாக்கு வாங்க மட்டுமே ஈழத்தமிழர் பிரச்னையை பேசினார். விஜய் சேவை தமிழ் பேசும் எல்லோருக்கும் தேவை.  பிரசாரத்திற்கு மட்டும் சீமான் இலங்கை தமிழர் பிரச்னை சீமான் பேசுகிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே சீமான் ஈழதமிழர்களை பயன்படுத்துகிறார். யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரத்தில்…

    Continue Reading

  • ரீல்ஸ் இல்லை ரியல்… உங்களுக்குத்தான் சால்வை… உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் விஜய்! – ACTPnews.com

    ரீல்ஸ் இல்லை ரியல்… உங்களுக்குத்தான் சால்வை… உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் விஜய்! – ACTPnews.com

    “முதல்வர் அறைக்குள் நாங்க நுழையும்போது அவர் எழுந்து நின்று, எங்களை ‘வாங்க… வாங்க…’ என வரவேற்றார். சென்னை ஐ.ஐ.டி_யின் அணுகல்தன்மை ஆய்வு மையத்தின் முதன்மை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் பார்வைக் குறைபாடு உள்ளவர். இதைக் கவனித்த முதல்வர், முன்னே வந்து அவரது கையைப் பிடித்தும் சேரில் உட்கார வைத்தார். நாங்க உட்கார இந்த சேர் போதுமா, வேறு ஏற்பாடு செய்யணுமான்னு கேட்டார். இந்த வரவேற்புக்குப் பிறகு, ‘சொல்லுங்க’ என்று முதல்வர் சொன்னவுடன், நாங்கள் கொண்டு சென்றிருந்த கோரிக்கை மனுவைக்…

    Continue Reading

  • தவெக அமைச்சரவையில் விஜயபாஸ்கர்? விஜய் போட்ட கண்டிஷன்..! – ACTPnews.com

    தவெக அமைச்சரவையில் விஜயபாஸ்கர்? விஜய் போட்ட கண்டிஷன்..! – ACTPnews.com

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

    Continue Reading

  • ராஜ்யசபாவில் சீமான்? ஆஃபர் கொடுத்த எடப்பாடி..! இது செம ட்விஸ்டா இருக்கே..! – ACTPnews.com

    ராஜ்யசபாவில் சீமான்? ஆஃபர் கொடுத்த எடப்பாடி..! இது செம ட்விஸ்டா இருக்கே..! – ACTPnews.com

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக எடப்பாடி தலைமையிலான அணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி என்று இரண்டாக பிளவுப்பட்டது. பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபிக்க வேண்டிய சூழலில், எடப்பாடி அணி விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக இருந்தது. ஆனால், சிவி சண்முகம் அணியானது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இத்தகையச் சூழலில், சிவி சண்முகம் அணி ஆதரவோடு தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, ஆதரவளித்த சிவி சண்முகம் அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

    Continue Reading

  • Workout ஆன மாமியார் – மருமகன் பிளான்! மாவட்டம் முதல் கிளை வரை.. காலியாகும் அதிமுக கூடாரம்? – ACTPnews.com

    Workout ஆன மாமியார் – மருமகன் பிளான்! மாவட்டம் முதல் கிளை வரை.. காலியாகும் அதிமுக கூடாரம்? – ACTPnews.com

    ஆரம்பத்தில் த.வெ.க.விற்கு ஆதரவு மட்டும் அளித்த தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் ஓரிரண்டு பின்வாங்கினாலும் ஆட்சிக்கு ஆபத்து என முடிவெடுத்த த.வெ.க. தரப்பு, 47 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள அதி.மு.க. மீது பார்வையை திருப்பியது. இந்த அசைன்மென்டை, அ.தி.மு.க தரப்பில் லாட்டரி அதிபர் மார்டினின் மனைவியும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸூம், த.வெ.க தரப்பில் ஆதவ் அர்ஜுனாவும் முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே, அ.தி.மு.க அதிருப்தி அணி, த.வெ.க.வுக்கு வாக்களித்தது. ஆனால், டீல் பேசியபடி எதுவும் நடக்கவில்லை. அதிருப்தி அணிக்கு அமைச்சரவையிலும் இடமில்லாமல்…

    Continue Reading

  • கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்: எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய  அதிமுகவில் ஐடி விங்க்  – ACTPnews.com

    கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்: எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய  அதிமுகவில் ஐடி விங்க்  – ACTPnews.com

    இதுகுறித்து அதிமுக ஐடி பிரிவு செயலாளர் ராஜ்சத்யன் எனது எக்ஸ் பதிவில், அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராக நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக  கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், “கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்” என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம்…

    Continue Reading

  • ஜூன் 4-ம் தேதி பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை ? – ACTPnews.com

    ஜூன் 4-ம் தேதி பிறந்தநாளில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடும் அண்ணாமலை ? – ACTPnews.com

    சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க அண்ணாமலை தலைவர் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவிலிருந்து விலகி இருந்த அண்ணாமலை, தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்தால். அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனுவும் கூட அண்ணாமலை தாக்கல் செய்யவில்லை.  இதனிடையே சிங்கநல்லூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டு பெற்று அங்கு அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக தலைமை முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதிமுக சிங்காநல்லூர் தொகுதியை ஒதுக்க முன்வரவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்தில்…

    Continue Reading

  • திமுகவின் அடுத்த கூட்டணி அவுட்..? தவெகவுடன் இணைகிறாரா வைகோ? – ACTPnews.com

    திமுகவின் அடுத்த கூட்டணி அவுட்..? தவெகவுடன் இணைகிறாரா வைகோ? – ACTPnews.com

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், இது பாஜகவிற்கு எதிரான கூட்டணி… இது மதசார்பற்ற கூட்டணி… இந்த கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது .. என்று ஏறும் மேடைகளிலெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதும், திமுகவின் கூட்டணிக் கூடாரம் காலியாகத் தொடங்கியதே ஸ்டாலினுக்கு பெருத்த அடியாக அமைந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.  தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பதால் மக்கள் தீர்ப்பை மதித்து தான் திமுக…

    Continue Reading

  • மக்கள் சேவையாற்ற தயாராக இருக்கிறோம் தவெக அமைச்சர்கள் பேச்சு – ACTPnews.com

    மக்கள் சேவையாற்ற தயாராக இருக்கிறோம் தவெக அமைச்சர்கள் பேச்சு – ACTPnews.com

    தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீ முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொண்டார். முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதலமைச்சர் விஜய்…

    Continue Reading

  • நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்…? மாறும் பாஜக மாநிலத் தலைமை..? – ACTPnews.com

    நைஸாக கழட்டிவிடப்படும் நயினார்…? மாறும் பாஜக மாநிலத் தலைமை..? – ACTPnews.com

    திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ அண்ணாமலையும் ஒரு மிக முக்கியக் காரணமே.   அப்படிப்பட்ட அண்ணாமலையை, சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணிக்காக தலைமை…

    Continue Reading

  • முழுசாக மாறப்போகும் அறிவாலயம்: திமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது ? – ACTPnews.com

    முழுசாக மாறப்போகும் அறிவாலயம்: திமுக மாவட்ட செயலாளர் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறது ? – ACTPnews.com

    நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பறிகொடுத்தது. சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்ய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் நேரடியாகத் தொகுதிகளுக்குச் சென்று நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டு, அறிக்கை தயாரித்து வருகின்றனர். இதில் திமுக தனித்து போட்டியிட வேண்டும், கட்சியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் பரிந்துரை செய்துள்ளது.  இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கட்சி பல மாற்றங்களை…

    Continue Reading

  • தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள்: திமுக மீது முதல்வர் விஜய் சாடல் – ACTPnews.com

    தற்குறி என்று கூறியவர்கள்தான், உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆகிவிட்டார்கள்: திமுக மீது முதல்வர் விஜய் சாடல் – ACTPnews.com

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: “6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள், ஆனால் 6 நாள்கள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற அரை மணி நேரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக – தவெக இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை.தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தவெக ஆட்சியமைக்கக் கூடாது என திமுக மற்றும் பலரும் நினைத்தார்கள்.திமுக நம்மை எதிர்க்க, அவமானப்படுத்த,…

    Continue Reading

  • நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்: தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம் – ACTPnews.com

    நாற்காலி டூ அதி நவீன குசன் சேர்: தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் திடீர் மாற்றம் – ACTPnews.com

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்த அவர், தினமும் தலைமைச் செயலகம் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை மற்றும் நேரக் கட்டுப்பாடு பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.    காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார்.அலுவல் பணிகள்: மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை மேற்கொள்கிறார்.மதிய உணவு: மதிய உணவிற்காக…

    Continue Reading

  • தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – ACTPnews.com

    தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு ஜூலை மாதம் இடைத்தேர்தல் ? – ACTPnews.com

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் தனிபெருபான்மை கிடைக்காத காரணத்தால் காங், விசிக, கம்யூ.., கட்சிகள் ஆதரவுடன் தவெக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனிடையே அதிமுகவில் தவெக ஆதரவு அணி ஒன்று உருவானது. எஸ்.பி.வேலுமணி தலைமையில் உருவான இந்த அணி பின்னர் எடப்பாடியுடன் சமரசம் செய்து கொண்டது.  இதனால் வேலுமணி அணியில் இருந்த மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல்; பெருந்துறையில் போட்டியிட்ட ஜெயகுமார்; தாராபுரத்தில் களமிறங்கிய சத்யபாமா; அம்பாசமுத்திரம் தொகுதியில்…

    Continue Reading

  • டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய  அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – ACTPnews.com

    டெல்லியில் அறிவாலயம் தொடங்கிய  அட்டாக்: ராகுல் காங்கிரசை விமர்சனம் செய்து திமுக பேனர் – ACTPnews.com

    நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் சில முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன. இந்தச் சரிவுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே நிலவும் மனக்கசப்புகளுக்கு மத்தியில் இந்த கூட்டம் கூடுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறியதைக் கடுமையாக விமர்சித்த திமுக, இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. …

    Continue Reading

  • திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! – ACTPnews.com

    திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் இவரா? வெளியான ட்விஸ்ட்! – ACTPnews.com

    2026 சட்டமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் நின்ற விஜய், இரண்டு தொகுகளிலும் வெற்றிப் பெற்றதால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் உருவானது. இதனால், பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார் விஜய். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது.  முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத அவர், தன் மேலாளர் வீட்டு நிகழ்ச்சிக்காக ‘சிங்கப்பெண்’ திட்ட தொடக்க…

    Continue Reading

  • புதுக்கட்சி தொடங்குவது உறுதி: அடம் பிடிக்கும் அண்ணாமலை, டீல் பேசும் பாஜக – ACTPnews.com

    புதுக்கட்சி தொடங்குவது உறுதி: அடம் பிடிக்கும் அண்ணாமலை, டீல் பேசும் பாஜக – ACTPnews.com

    மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகு அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை மெளனம் காத்து வந்தார். பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினரில் இருந்து அண்ணாமலை விலகி, இளைஞர்களை மையப்படுத்திய புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப் போவதாக கூறப்பட்டு வந்தது.  இதற்கான அறிவிப்பை ஜூன் 4 தனது பிறந்த நாளில் புதிய கட்சி அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  2 நாட்கள்…

    Continue Reading

  • ராஜ்யசபா எம்பி பதவி எங்களுக்கு வேணும்: தவெகவிடம் காங்கிரசு டிமொண்ட்  – ACTPnews.com

    ராஜ்யசபா எம்பி பதவி எங்களுக்கு வேணும்: தவெகவிடம் காங்கிரசு டிமொண்ட்  – ACTPnews.com

    அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சி.வி. சண்முகம், தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் தற்போது காலியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி நாடாளுமன்ற அரசியலில் தடம் பதிக்கத் தவெகவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்குத் தகுதியான வேட்பாளரைத் தவெக தலைமை தீவிரமாகத் தேடி வருகிறது. இதற்கிடையே, நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பெயர் தவெக தரப்பில் பலமாகப்…

    Continue Reading

  • பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை ? ஜூன் 4-ல் ‘மக்கள் சக்தி இயக்கம்’ கட்சியை அறிவிக்கிறார்! – ACTPnews.com

    பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை ? ஜூன் 4-ல் ‘மக்கள் சக்தி இயக்கம்’ கட்சியை அறிவிக்கிறார்! – ACTPnews.com

    அதிமுகவுடனான கூட்டணிக்காக அண்ணாமலை தலைவர் பதவியை பாஜக மேலிடம் பறித்தது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.  அண்ணாமலைக்குத் தேசியப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி தொகுதி பொறுப்பாளர் பணி அண்ணாமலைக்கு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.  சட்டமன்ற தேர்தலிலும் அண்ணாமலை போட்டியிட வைக்க பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்த சிங்கநல்லூர் தொகுதியை அதிமுக ஒதுக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாமல் பிரசாரத்தோடு நிறுத்தி…

    Continue Reading

  • அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – ACTPnews.com

    அழிவை நோக்கி திமுக? விஜய் போடும் பலே திட்டம்..! – ACTPnews.com

    2026 சட்டமன்றத் தேர்தலின்போது “இங்க ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்னு TVK இன்னொன்னு DMK” என்று ஒவ்வொரு மேடைகளிலும் திமுகவை எதிர்த்தே தன் அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார் விஜய். இதனால் திமுக வெறுப்பு என்பது அதிகரிக்க, தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவுக்கு எதிராக அமைந்தது. பெரும்பான்மையான இடங்களை பிடித்த விஜய், ஆட்சியை அமைக்க டார்கெட் செய்ததும் திமுகவை தான். திமுக கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் இழுத்த தவெக பெரும் ஆதரவோடு…

    Continue Reading

  • 2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  – ACTPnews.com

    2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு  – ACTPnews.com

    2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது…

    Continue Reading

  • தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?: நாளை அமைச்சரவை கூட்டம்  – ACTPnews.com

    தமிழக பட்ஜெட் ஜூன் 3-வது வாரம் தாக்கல் ?: நாளை அமைச்சரவை கூட்டம்  – ACTPnews.com

    2026-2027ம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கு காரணம் ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்ததால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே திமுக அரசு பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்து இருந்தது. இதனால் புதிய அரசு அமைந்த பிறகு 2026-2027 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.  அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து, முதல்வராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். தவெக ஆட்சி பொறுப்பேற்று 1 மாதங்கள் நெருங்கும்…

    Continue Reading

  • மேயர் ப்ரியா VS தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்:  அரசு விழாவில் பதற்றம் – ACTPnews.com

    மேயர் ப்ரியா VS தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்:  அரசு விழாவில் பதற்றம் – ACTPnews.com

    2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக சார்பில் பல்லவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவிக நகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளி புதிய கட்டிடத்தை மேயர் ப்ரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தவெக பெண் எம்எல்ஏ பல்லவி தனியாக கத்திரிகோல் வைத்து தனியாக ரிப்பன் வெட்டினார். இதை தொடர்ந்து, பள்ளிக்கு…

    Continue Reading

  • என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் – ACTPnews.com

    என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் – ACTPnews.com

    தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூ, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை தவெக அமைத்துள்ளது.  முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து…

    Continue Reading

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports