Category: இந்தியா

All national news including indian states

  • Rahul Slams Modi: “’இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்

    Rahul Slams Modi: “’இங்க புயலே வீசிட்டு இருக்கு, அங்க மெலோனிக்கு சாக்லெட் கொடுத்துட்டு இருக்கார் மோடி“; சீறிய ராகுல்

    இந்திய பிரதமர் ரோம் சென்றிருந்தபோது, ​​அவர் பரிசளித்த ‘மெலோடி’ சாக்லெட்டுகள் குறித்து இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி நகைச்சுவையாக பேசும் விடியோ ஒன்று வைரலானது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல், அந்த நகைச்சுவையான தருணத்தை, அரசின் பொருளாதாரக் கையாளுதல் குறித்த தனது விமர்சனத்துடன் தொடர்புபடுத்தி, சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து பிரதமர் விலகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து…

    Continue Reading

  • காங்கிரஸ் தலைவருக்கு நேர்ந்த அவமானம் – அதிர்ச்சியில் தொண்டர்கள்! வீடியோ
    ,

    காங்கிரஸ் தலைவருக்கு நேர்ந்த அவமானம் – அதிர்ச்சியில் தொண்டர்கள்! வீடியோ

    காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவமானம் நேர்ந்த‍தாக சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கேரளாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்தவர்கள், அருகில் இருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கை குலுக்கினர். ஆனால், கை கொடுப்பதற்காக மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரமாக கையை தூக்கிக்கொண்டே இருந்தார். அதைப் பொருட்படுத்தாமல், சாதாரணமாக காங்கிரஸ் நிர்வாகி கடந்து சென்றது, காங்கிரஸ் தொண்டர்களை கொதிப்படைய வைத்துள்ளது. அதை…

    Continue Reading

  • பாஜகவின் வெற்று விளம்பரம் – அம்பலப்படுத்திய ஜோதிமணி எம்பி
    ,

    பாஜகவின் வெற்று விளம்பரம் – அம்பலப்படுத்திய ஜோதிமணி எம்பி

    பாஜகவின் வெற்று விளம்பரத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அம்பலப்படுத்தியுள்ளார். இன்று பல்வேறு ஊடகங்கள் மோடியின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஷ் அவர்கள் வணிக வகுப்பில் ( Business Class) பயணம் செய்யாமல் எகானமி வகுப்பில் பயணம் செய்தார் என்று கூச்சமே இல்லாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். ஒரு விமானம் பறக்கும் போது எகானமி வகுப்புக்கு ஒரு விதமாகவும், வணிக வகுப்பிற்கு ஒரு விதமாகவுமா எரிபொருள் செல்வாகும் என்று எந்த…

    Continue Reading

  • பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்த‍து! காங்கிரசார் கொண்டாட்டம்!
    ,

    பாஜகவால் மேற்கு வங்கத்தில் சுதந்திரம் கிடைத்த‍து! காங்கிரசார் கொண்டாட்டம்!

    மேற்கு வங்க மாநிலத்தில் 1977க்குப் பிறகு காங்கிரசால் தலைதூக்க முடியாத நிலை இருந்த‍து. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதைத் தொடர்ந்து திரினாமூல் காங்கிரசும் என மேற்குவங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்தன. இதனால், காங்கிரசால் துளிர் கூட விட முடியாத நிலை மேற்கு வங்கத்தில் நிலவியது. அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தையும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியனர் அபகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரசார் எதுவுமே செய்ய முடியாத நிலையில், திரினாமூல் காங்கிரஸாரால் முடக்கி வைக்கப்பட்டதாக புகார்கள் இருந்த‍து. இநநிலையில்,…

    Continue Reading

  • புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!

    புதுச்சேரியில் பாஜக கூட்டணி அமோகம்! காங்கிரஸ் படுதோல்வி!

    புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ்-16, பாஜக -10, அதிமுக – 2, எல்ஜேகே -2 என தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்-16, திமுக-13, விசிக-1 என கூட்டணி அமைத்து நின்றன. விஜய்யின் தவெக.-28 தொகுதிகளில் தனித்தும், அதன் கூட்டணியாக நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. நாம்…

    Continue Reading

  • அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!

    அசாமில் அசைக்க முடியாத பாஜக! ஹாட்ரிக் ஆட்சி!

    அசாம் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அசாம் மாநிலத்தில் மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று பலரும் பேசினர். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாறி இருந்த‍து. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிகமான இடங்களில் பாஜக கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக…

    Continue Reading

  • கேரளமில் ஆட்சியை இழந்த‍து கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்த‍து யார்?

    கேரளமில் ஆட்சியை இழந்த‍து கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்த‍து யார்?

    அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார். இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே…

    Continue Reading

  • முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!

    முதல்முறையாக மேற்கு வங்கத்தை பிடித்த பாஜக! முழு வெற்றி நிலவரம்…!

    மேற்கு வங்க மாநிலத்தில் ம‍ம்தா பானர்ஜியை வீழ்த்தி முதல்முறையாக பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இந்தியாவில் பாஜகவுக்கு முழு எதிரி மாநிலமாக கருதப்படுவது மேற்கு வங்க‍மும் கேரளாவும் மட்டுமே. இதில் மேற்கு வங்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக ம‍ம்தா பானர்ஜி இருந்து வந்தார். இந்நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 293 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக – 206 திரினாமூல்…

    Continue Reading

  • மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்கம்: 285 வாக்குச்சாவடிகளில் மே 21 மறுவாக்குப்பதிவு

    மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது பல்வேறு இடங்களில் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள இரு தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குப்பதிவில் சுமார் 90 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபால்டா தொகுதியில் புதிய உத்தரவு தொடர்ச்சியாக எழுந்த புகார்களின்…

    Continue Reading

  • பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?

    பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்கிறது… எவ்வளவு தெரியுமா?

      இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அதிகமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பொது பயன்பாட்டு பெட்ரோல்…

    Continue Reading

  • பெட்ரோல் விலை ஏறப்போகிறது? எப்போது தெரியுமா?

    பெட்ரோல் விலை ஏறப்போகிறது? எப்போது தெரியுமா?

    பெட்ரோல் விலை ஏறப்போகிறது என்பது குறித்து காங்கிரஸ் கட்சி மீம்ஸ் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. போரை ஆரம்பித்து வைத்த அமெரிக்காவிலும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்த‍தை, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். Here in North Carolina and around the country, gas prices are too high. This is…

    Continue Reading

  • மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

    மும்பை அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு…

    மும்பை அருகே நிகழ்ந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பையில் இருந்து புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி பகுதிக்கு சிறிய விமானத்தில் சென்றார். பாராமதியில் விமானம் தரையிறங்கும்போது, திடீரென விபத்துக்குள்ளாகி, தீ பிடித்து எரிந்த‍து. விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், தீயை அணைத்து, உடல்களை மீட்டனர். VIDEO…

    Continue Reading

  • ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

    ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…

    ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்… அசாம் மாநிலத்தில் ரயில் மோதியதில் ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்த‍து, அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைராங்க் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் லிம்திங் மண்டலத்தில் உள்ள ஜமுனாமுக் காம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த‍து. அப்போது, ரயில் தண்டவாளங்களை கடக்க யானை கூட்டம் சென்று கொண்டிருந்த‍து. வேகமாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் மீதி மோதி…

    Continue Reading

  • கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…

    கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…

    கேரளாவில் அந்தரத்தில் தொங்கும் ரெஸ்டாரன்டில், பல மணி நேரம் வாடிக்கையாளர்கள் தவித்த‍தால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள அனேச்சல் பகுதியில் ஒரு மாத‍த்திற்கு முன்பு அந்தரத்தில் தொங்கும் ஸ்கை ரெஸ்டாரன்ட் திறக்கப்பட்டது. அங்கு, அந்தரத்தில் இருந்து உணவு சாப்பிட சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், மலப்புரத்தில் இருந்து, 2 சிறுவர்கள் பெற்றோர் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள், ஸ்கை ரெஸ்டாரன்ட் புக் செய்து சென்றனர். ஆனால், அந்தரத்தில் இருந்தபோது, ஹைட்ராலிக் பிரச்சினை…

    Continue Reading

  • உத்தரகாண்டில் அடுத்ததுத்து பெரிய நிலச்சரிவு வரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

    உத்தரகாண்டில் அடுத்ததுத்து பெரிய நிலச்சரிவு வரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த‍டுத்து மேகவெடிப்பால் பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. நேற்றும் திடீரென மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐஐடி கூர்க்கியை சேர்ந்த ஆய்வாளர்கள்…

    Continue Reading

  • ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…

    ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…

    ஆந்திராவில் சோதனை முயற்சியாக ஆற்று நீரில் இயக்கப்படும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான சேவை என்றாலே, அதற்கு விமான நிலையம், ஓடுதளம் என ஆயிரம் ஏக்கருக்கும் மேல் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக பெரும்பாலும், விவசாய நிலங்களையே அரசுகள் கையகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று பொதுமக்கள் அச்சத்தில், விமான நிலைய திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக அப்படி ஒரு போராட்டம்…

    Continue Reading

  • பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…

    பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி பரிந்துரை…

    பெண்கள் பாதுகாப்புக்காக, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க‍க் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் லக்னோவில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த, பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு…

    Continue Reading

  • மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…

    மீண்டும் ரயில் விபத்து… அதிர்ச்சியில் மத்திய அரசு…

    மேற்கு வங்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் வைத்துள்ள இந்தியாவில் கடந்த சில மாதங்களாக விபத்துக்கள் அதிகளவில் நடந்து வருகிறது. ரயில்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் – சாலிமார் அதிவிரைவு ரயில் வந்தபோது,…

    Continue Reading

  • காஷ்மீர் சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு சம்பவம்! காரணம் அதுதான்…

    காஷ்மீர் சட்டப்பேரவையில் நடந்த பரபரப்பு சம்பவம்! காரணம் அதுதான்…

    காஷ்மீர் சட்டப்பேரவையில் பிடிபி எம்எல்ஏ காட்டிய பேனரால், பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, பிடிபி எம்எல்ஏ திடீரென ஒரு பேனரை கையில் ஏந்திக்கொண்டு சென்றார். காஷ்மீரில் இருந்த சிறப்புச் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற வாசகங்கள் கொண்ட அந்த பேனரை பார்த்த‍தும், அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர். இதனால், காஷ்மீர் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து முழக்கங்களை…

    Continue Reading

  • வயநாடு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… வங்கி செய்த செயலால் போராட்டம்…

    வயநாடு மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி… வங்கி செய்த செயலால் போராட்டம்…

    வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசு நிவாரண நிதி வழங்கிய நிலையில், அந்த தொகையை, ஈஎம்ஐக்காக கேரள கிராமிய வங்கி பிடித்தம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு முண்டக்கை ,சூரல்மலையில் கடந்த மாதம் 30 தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக மூன்று முறை எற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 420 மேற்பட்டோர் உயிரிழந்தனர். 119 பேர் மாயமாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாமிலும், உறவினர் வீடுகளிலும், ஒருசிலர் அரசு கொடுத்துள்ள வாடகை…

    Continue Reading

  • ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடி புதிய அறிவிப்பு…

    ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடி புதிய அறிவிப்பு…

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து பேசிய பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சியில்…

    Continue Reading

  • வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 264 ஆக அதிகரிப்பு… 

    வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 264 ஆக அதிகரிப்பு… 

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்ணுக்குள் புதைந்த வீடுகளில் வசித்து வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டாலும், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கடும் முயற்சிக்கிடையே மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றனர். மண் அள்ளும் எந்திரம்…

    Continue Reading

  • துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை.. பரபரப்பு சிசிடிவி காட்சி…

    துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை.. பரபரப்பு சிசிடிவி காட்சி…

    மும்பையில் துப்பாக்கி முனையில் நகைக்கடைக்குள் புகுந்து ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் பிரதான பகுதியான நவி மும்பையில் கர்கார் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நேற்று இரவு 9.57 மணியளவில் கடைக்குள் ஒரு கும்பல் புகுந்த‍து. தலைக்கவசம் அணிந்துகொண்டு, முகத்தில் முக‍க்கவசம் அணிந்திருந்த 3 பேர், துப்பாக்கியை காட்டி, கடையில் இருந்தவர்களை மிரட்டினர். பின்னர், அவர்களை கைகளை மேலே தூக்க சொல்லி, துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டு மிரட்டினர். https://x.com/AnbilChinna/status/1817748498701312324 பின்னர், ஒருவர் பின்…

    Continue Reading

  • கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு…

    கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு…

    கேரளாவில் கோவில் மேல்சாந்திக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டபனை மேப்பாறை மகா விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர் மதுசூதனன் (வயது 52). 20 ஆண்டுகளாக ஆன்மிக பணியில் ஈடுபடும் இவர், அடிக்கடி கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார். அதேபோன்று தற்போதும் லாட்டரி வாங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 24-ந் தேதி பிப்டி பிப்டி லாட்டரி குலுக்கல் நடந்தது. அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டது.…

    Continue Reading

  • புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநர் நியமனம்… பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்… முழு விவரம்…

    புதுச்சேரி மாநிலத்திற்கு துணைநிலை ஆளுநர் நியமனம்… பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம்… முழு விவரம்…

    புதுச்சேரி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அசாம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கு புதிய துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன், குஜராத் மாநில முதல்வரின் முதன்மை செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார்.…

    Continue Reading

  • இந்திய கடற்படை போர்க்கப்பலில் தீ விபத்து… ஒருப்பகமாக கவிழ்ந்த‌தால் பரபரப்பு…

    இந்திய கடற்படை போர்க்கப்பலில் தீ விபத்து… ஒருப்பகமாக கவிழ்ந்த‌தால் பரபரப்பு…

    மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.பிரம்ம‌புத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, ஒருபக்கமாக கவிழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எஸ்.பிரம்ம‌புத்ரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதும், உடனடியாக, தீயை அணைக்க அந்த கப்பலில் இருந்த கடற்படை வீர‌ர்கள் ஈடுபட்டனர். ஆனால், ஐ.என்.எஸ். பிரம்ம‌புத்ரா போர்க்கப்பல் திடீரென ஒரு பக்கமாக கவிழ்ந்த‌து. இதனால், கப்பலில் இருந்தவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக கடற்படை வீர‌ர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். பலர் காயமடைந்த நிலையில், ஒரு மாலுமி மாயமானார். அவரை தேடும் பணியில் சக வீர‌ர்கள்…

    Continue Reading

  • எக்ஸ் தளத்தில் சாதித்த பிரதமர் மோடி… 100 மில்லியனை கடந்த ஃபாலோயர்ஸ்…

    எக்ஸ் தளத்தில் சாதித்த பிரதமர் மோடி… 100 மில்லியனை கடந்த ஃபாலோயர்ஸ்…

    பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தை ஃபாலோ செய்வோரின் எண்ணிக்கை 100 மில்லியன், அதாவது 10 கோடி பேரை கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எனினும், எக்ஸ் தளம் ஏற்கனவே இருந்த‍து போலவே செயல்பட்டு வருகிறது. இதில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு நிறுவனங்கள், ஊடகங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் தங்களுக்கு என்று பக்கத்தை உருவாக்கி, கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,…

    Continue Reading

  • ராணுவ வாகனம் மீது தாக்குதல்… 5 வீர‍ர்கள் பலி… தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

    ராணுவ வாகனம் மீது தாக்குதல்… 5 வீர‍ர்கள் பலி… தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

    காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீர‍ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் கட்டுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் ராணுவ வீர‍ர்கள் பாதுகாப்பு வாகனத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தை நோக்கி கிரானைட் எனப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்கினர். தொடர்ந்து துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டுள்ளனர். ராணுவ வீர‍ர்கள் சுதாரித்துக்கொண்டு, பதில் தாக்குதல் நடத்தினர். இதனால், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள்…

    Continue Reading

  • ஜார்க்கண்ட் முதல்வர் இப்போதுதான் பதவியேற்றார்… அதற்குள் இப்படி ஒரு சிக்கலா…

    ஜார்க்கண்ட் முதல்வர் இப்போதுதான் பதவியேற்றார்… அதற்குள் இப்படி ஒரு சிக்கலா…

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்ற நிலையில், வரும் எட்டாம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியில் இருந்தார். அவர் மீது சுரங்க முறைகேடுகளுடன் கூடிய பண மோசடி புகார் கூறப்பட்டு வந்த‍து. இந்த புகார் தொடர்பாக அண்மையில் அமலாக்கத்துறையால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பாக தனது முதலமைச்சர் பதவியை…

    Continue Reading

  • செங்கோலுக்கு எதிராக இப்படியா பேசினார் மதுரை எம்பி சு.வெங்கேடசன்? முழு விவரம்…

    செங்கோலுக்கு எதிராக இப்படியா பேசினார் மதுரை எம்பி சு.வெங்கேடசன்? முழு விவரம்…

    மக்களவையில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், செங்கோல் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பேசினார். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் போன்றவற்றை எல்லாம் தகர்த்துவிட்டுதான் இந்தியாவில் ஜனநாயகம் காலூன்றியதாக தெரிவித்தார். மன்னராட்சி எப்போது ஒழிந்ததோ, அப்போதே செங்கோலின் மகிமையும் ஒழிந்து விட்டதாகவும் சு.வெங்கடேசன் கூறினார். செங்கோலை கையில் வைத்திருந்த மன்னர்கள், எத்தனை பெண்களை தங்களது அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்கு…

    Continue Reading

  • சாலையில் நடந்து சென்ற முதலை… பொதுமக்கள் அச்சம்… பரபரப்பு வீடியோ…

    சாலையில் நடந்து சென்ற முதலை… பொதுமக்கள் அச்சம்… பரபரப்பு வீடியோ…

    மகாராஷ்டிராவில் மழை பெய்து வரும் நிலையில், சாலையில் முதலை ஒன்று நடந்து சென்றது பொதுமக்களை அச்சமடைய வைத்துள்ளது. கடற்கரை மாவட்டமான ரத்னகிரியில் மழை பெய்து கொண்டிருந்த‌து. அப்போது, சிப்லன் சாலையில் மிகப்பெரிய முதலை ஒன்று திடீரென நடந்து சென்றது. இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். காரில் சென்றவர்கள் முதலை நடந்து சென்றதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. https://x.com/ShivAroor/status/1807635116610445783 அருகில் உள்ள ஷிவா ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில்,…

    Continue Reading

  • கண்களை கவரும் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்… இப்படியா? வீடியோ…

    கண்களை கவரும் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்… இப்படியா? வீடியோ…

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை உலகமே வியந்து பார்த்து வருகிறது. திருமணத்திற்கு முன்பே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், உலக நாடுகளை தங்கள் பக்கம் ஈர்க்க வைத்தார் அம்பானி. அதிலும், உலக பணக்கார‍ர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதுதான் இல்லை. இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள்தான். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத்திற்காக, பல்வேறு…

    Continue Reading

  • கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரிக்க குஷ்பு தலைமையில் குழு… அதிரடி உத்தரவு…

    கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரிக்க குஷ்பு தலைமையில் குழு… அதிரடி உத்தரவு…

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் பெண்கள் உயிரிழந்த‍து தொடர்பாக விசாரணை நடத்த, குஷ்பு தலைமையில் குழு அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்பதால், விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமே சாராயம் குடிக்கும் நிலையில், பெண்களும் சாராயம் குடித்த‍தால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கணவன் மனைவி சேர்ந்து குடித்து உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 6 பெண்கள் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருப்பதை, செய்திகள்…

    Continue Reading

  • ஒடிசாவுக்கு பதவிகளை அள்ளித்தரும் மத்திய அரசு… வாய் பிளக்கும் தமிழர்கள்…

    ஒடிசாவுக்கு பதவிகளை அள்ளித்தரும் மத்திய அரசு… வாய் பிளக்கும் தமிழர்கள்…

    ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகளை மத்தியில் ஆளும் பாஜக அள்ளித் தருவது தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு, ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு, ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சக்திவாய்ந்த முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதோடு மட்டுமல்லாமல், அங்கு மக்களவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், மத்திய பாஜக ஆட்சியில் ஒடிசா…

    Continue Reading

  • பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…

    பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…

    பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளதால், அண்டை நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்…

    Continue Reading

  • கேரளாவில் பரவி வரும் மஞ்சள் காமாலை… ஆபத்தான நிலையில் 4 பேர்… எச்சரிக்கை…

    கேரளாவில் பரவி வரும் மஞ்சள் காமாலை… ஆபத்தான நிலையில் 4 பேர்… எச்சரிக்கை…

    கேரளாவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வரும் நிலையில், 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் தற்பொழுது கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் வெங்கூர் பஞ்சாயத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் மஞ்சள் காமாலை உறுதி செய்யப்பட்டது. பின்னர் நோய் பலருக்கும் பரவியது. தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து, 150 பேர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவர்களில்…

    Continue Reading

  • சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிச்சண்டை… 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

    சத்தீஸ்கரில் பயங்கர துப்பாக்கிச்சண்டை… 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை…

    சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் பாரிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரில் உள்ள பிடியா கிராமத்திற்கு அருகில் வனப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப்படையினர் வருவதை அறிந்த நக்சல்பாரிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்த‍து. இந்த மோதலில், 12 நக்சலைட்டுகள்…

    Continue Reading

  • 7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News

    7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News

    தமிழ்நாடு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஊட்டி, கொடைக்கானல் செல்லும்…

    Continue Reading

  • Vande Metro comes soon as in chennai tirupati and all over india

    Vande Metro comes soon as in chennai tirupati and all over india

    வந்தே பாரத் ரயில்கள் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரங்கள் உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இதனால் அதிக தூரமுள்ள உள்ள இடங்களின் பயணம் நேரமானது குறைந்துள்ளது. இந்நிலையில் குறைந்த தூரங்களுக்கு இடையேயான இடங்களை இணைக்கும் வகையில், வந்தே மெட்ரோ திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. குறைந்த தூரங்களுக்கு வந்தே மெட்ரோ: வந்தே மெட்ரோ ரயில்கள் ரயில்கள் செயல்பாட்டுக்கு வந்தால் 100 முதல் 200 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க சில மணி நேரம் ஆகும் என…

    Continue Reading

  • Amit Shah Helicopter: மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷா.. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்!

    Amit Shah Helicopter: மயிரிழையில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷா.. கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர்!

    Amit Shah: பீகார் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க உள்ளது. கடந்த 19ஆம் தேதி, 102 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலும் கடந்த 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது. இதையடுத்து, வரும் மே மாதம்…

    Continue Reading

  • Election Commission wants AAP to change its poll campaign song for slams bjp and intelligence agency

    Election Commission wants AAP to change its poll campaign song for slams bjp and intelligence agency

    தேர்தல் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக ஆம் ஆத்மியின் தேர்தல் பிரச்சாரப் பாடலான ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’ பாடலுக்கு இந்திய தேர்தல் ஆணையம்  தடை விதித்துள்ளது. மேலும், இப்பாடலை மாற்றியமைக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.  ஆம் ஆத்மி பாடலுக்கு தடை: கடந்த 25 ஆம் தேதி, டெல்லியில் மையமாக கொண்டு செயல்படும் ஆம் ஆத்மியின் பரப்புரை பாடலான  ‘ஜெயில் கா ஜவாப், வோட் சே டெங்கே’  வெளியானது. சுமார் 2…

    Continue Reading

  • எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோ? தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

    எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோ? தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

    <p>எடிட் செய்யப்பட்ட அமித் ஷா வீடியோவை பகிர்ந்ததாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>உச்சக்கட்ட பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது.</p> <h2><strong>தெலங்கானா முதலமைச்சருக்கு சம்மன்:</strong></h2> <p>தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள…

    Continue Reading

  • பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: அவதியுறும் பயணிகள்! காரணம் என்ன?

    பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: அவதியுறும் பயணிகள்! காரணம் என்ன?

    பெங்களூரில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்கு கிளம்பிய பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்த ரயில் சென்னை வந்து சேராததால் பயணிகளும் அவர்களது உறவினர்களும் தவித்துப் போய் உள்ளனர். சிக்னல் கோளாறால் தாமதம் என தகவல் பெங்களூரில் இருந்து ரயில் கிளம்பியதில் இருந்து இடையிடையே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால் ஒவ்வொரு ரயில் நிலையத்தை அடைவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 15 நிமிட…

    Continue Reading

  • TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

    TN Weather Update: அடுத்த 4 நாட்களுக்கு தொடரும் வெப்ப அலை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

    <p>தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.</p> <p>கடந்த சில வாரங்களுக்கு முன் கோடை மழை இருந்ததன் காரணமாக வெப்பத்தின் தாக்கம்…

    Continue Reading

  • Priyanka Gandhi : "அப்பாவ துண்டு துண்டா, வீட்டுக்கு கொண்டு வந்தேன்" பிரியங்கா காந்தி உருக்கம்!

    Priyanka Gandhi : "அப்பாவ துண்டு துண்டா, வீட்டுக்கு கொண்டு வந்தேன்" பிரியங்கா காந்தி உருக்கம்!

    <p><strong>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.</strong></p> <h2><strong>பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கம்:</strong></h2> <p>தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், பாஜகவின் கோட்டையாக…

    Continue Reading

  • Gujarat Pani Puri Seller Who Looks Like PM Modi videos viral on social media Doppleganger Anil Bai Thakkar

    Gujarat Pani Puri Seller Who Looks Like PM Modi videos viral on social media Doppleganger Anil Bai Thakkar

    பிரதமர் மோடியை போன்று தோற்றம் கொண்டு ஒருவர் பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி போன்று தோற்றம் கொண்டு பானி பூரி விற்பனை செய்யும் நபர், பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பானி பூரி விற்பனை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்த மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், குஜராத்தில் பானி பூரி விற்கும் பிரதமர் நரேந்திர மோடி போன்ற தோற்றம் கொண்ட ஒருவரின்  வீடியோ சமூக…

    Continue Reading

  • Yogi Adityanath says congress would give people the right to eat beef sparks controversy

    Yogi Adityanath says congress would give people the right to eat beef sparks controversy

    Yogi Adityanath: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மக்களவை தேர்தல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. பாஜக தலைவர்கள் தொடர் சர்ச்சை: இதையடுத்து, நேற்று 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தேர்தல் தொடங்கியதில் இருந்தே பாஜக தலைவர்களின் சர்ச்சை கருத்து தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என பலரும்…

    Continue Reading

  • கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!

    கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!

    Mamata Banerjee Slipped: ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், மம்தாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.  கால் தவறி விழுந்த மம்தா பானர்ஜி: நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 19ஆம்…

    Continue Reading

  • UP Students Clear Exam With ‘Jai Shri Ram’ Answers, Professors Suspended in tamil | UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க்

    UP Students Clear Exam With ‘Jai Shri Ram’ Answers, Professors Suspended in tamil | UP Jai Shri Ram: தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க்

    UP Jai Shri Ram:  உத்தரபிரதேசத்தில் அரசு பல்கலைக்கழக தேர்வில், ஜெய் ஸ்ரீராம், பாடல் வரிகள் போன்றவை எழுதப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி: உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் அரசு நடத்தும் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வில், முதலாம் ஆண்டு மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதியுள்ளனர். அதை திருத்திய ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு பாஸ் மார்க்கும் போட்டுள்ளனர்.…

    Continue Reading

  • latest gold silver rate today april 27 2024 know gold price your city

    latest gold silver rate today april 27 2024 know gold price your city

    தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 54,160-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,770  விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,920 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,240 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு கிராம்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed