வெளிநாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கலாம்; எப்படி?- உயர் கல்விக்கான தெற்காசிய மாநாட்டில் வழிகாட்டல்!


<p>பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj;துறையின்&zwnj; ஏற்பாட்டில்&zwnj; அரசுப்&zwnj; பள்ளி மாணவர்களுக்காக, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்&zwnj; உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாடு நடந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், வெளிநாடுகளில் சேர்ந்து படிப்பது குறித்த வழிகாட்டல் வழங்கப்பட்டது.&nbsp;</p>
<p>இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப்&zwnj; பள்ளிகள்&zwnj; உறுப்பினர்&zwnj; செயலர்&zwnj; இரா.சுதன்&zwnj; கூறி உள்ளதாவது:</p>
<h2><strong>மாணவர்&zwnj; சேர்க்கை விகிதத்தை மேலும்&zwnj; அதிகரிக்க நடவடிக்கை</strong></h2>
<p>தமிழ்நாடு GER (Gross Enrollment Ratio) எனப்படும்&zwnj; மாணவர்&zwnj;&nbsp;சேர்க்கை விகிதத்தில்&zwnj; நாட்டிலேயே முதலிடம்&zwnj; வகிக்கிறது. இந்த&nbsp;மாணவர்&zwnj; சேர்க்கை விகிதத்தை மேலும்&zwnj; அதிகரிக்கும்&zwnj; வகையில்&zwnj; தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p>
<p>இந்த முயற்சிகளின்&zwnj; ஒரு பகுதியாக உயர் கல்வியில்&zwnj; குறிப்பாக&nbsp;அயல்நாடுகளில்&zwnj; எங்கெங்கு என்னென்ன பல்கலைக்கழகங்கள்&zwnj;&nbsp;உள்ளன? அங்கு என்னென்ன படிப்புகள்&zwnj; உள்ளன? விண்ணப்பிக்கும்&zwnj; முறைகள்&zwnj;, கல்வி உதவித்தொகை பெறும்&zwnj; முறைகள்&zwnj; போன்றவற்றை எல்லாம்&zwnj; அரசுப்&zwnj; பள்ளி மாணவர்கள்&zwnj; அறிந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டது. இதற்காக&zwnj; பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj;துறை உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாட்டை நடத்தியது.</p>
<p>பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj;துறை அமைச்சர்&zwnj; அன்பில்&zwnj; மகேஸ்&zwnj; பொய்யாமொழி மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்&zwnj;. &ldquo;தமிழ்நாடு அரசு இதுவரை 57 வகையான திட்டங்களை பள்ளிக்&zwnj;கல்வித்&zwnj;துறைக்காக செயல்படுத்தி உள்ளது. உயர் கல்விக்கான தெற்கு ஆசிய மாநாட்டில்&zwnj; பங்கேற்றுள்ள மாணவர்கள்&zwnj; அனைவரும்&zwnj; மற்ற மாணவர்களிடமும்&zwnj;, வெளிநாடுகளில்&zwnj; நாம்&zwnj; உயர்கல்வி பயில நமக்குள்ள வாய்ப்பைப்&zwnj; பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.&rdquo; என மாணவர்களை கேட்டுக்கொண்டார்&zwnj;.</p>
<p>மாநாட்டுத்&zwnj; தொடக்க விழாவில்&zwnj; உரையாற்றிய தய்பெய்&zwnj; பொருளாதார மற்றும்&zwnj; பண்பாட்டு மையத்தின்&zwnj; தலைமை இயக்குநர்&zwnj; ரிச்சர்ட்&zwnj; சின்&zwnj; பேசுகையில்&zwnj; &ldquo;இந்தியாவின்&zwnj; திறமை வாய்ந்த மாணவர்களுக்காக தைவான்&zwnj; நாட்டு கல்வி நிறுவனங்களில்&zwnj; கல்வி உதவித்தொகைத்&zwnj; திட்டங்கள்&zwnj; செயல்படுத்தப்பட்டு வருகின்றன&rdquo; என்றார்&zwnj;.</p>
<h2><strong>என்னென்ன நாடுகள் பங்கேற்பு?</strong></h2>
<p>மாநாட்டில்&zwnj; தைவான்&zwnj;, தென்கொரியா, ஜப்பான்&zwnj;, மலேசியா, சிங்கப்பூர்&zwnj; போன்ற நாடுகள்&zwnj; பங்கேற்றன. இந்த நாடுகளின்&zwnj; சார்பாக அதன்&zwnj; தூதரகப்&zwnj; பிரதிநிதிகள்&zwnj; வருகை தந்தனர்&zwnj;. தைவான்&zwnj;, தென்கொரியா, ஜப்பான்&zwnj;, மலேசியா, சிங்கப்பூர்&zwnj; ஆகிய நாடுகளின்&zwnj; தூதரகப்&zwnj; பிரதிநிதிகள்&zwnj; தங்கள்&zwnj; நாடுகளில்&zwnj; உள்ள உயர் கல்விக்கான வாய்ப்புகளை பற்றி மாணவர்களிடையே விளக்கினார்கள்&zwnj;. அதைத்&zwnj;தொடர்ந்து அந்தப்&zwnj; பிரதிநிதிகள்&zwnj; உடனான அரசுப்&zwnj; பள்ளி மாணவர்களின்&zwnj; கலந்துரையாடலும்&zwnj; நடந்தது.</p>
<p>அரசுப்&zwnj; பள்ளியில்&zwnj; பயின்று தற்போது தைவான்&zwnj; நாட்டுப்&zwnj; பல்கலைக்கழகங்களில் பயின்று வரும்&zwnj; ஜெயஸ்ரீ, ஆவல்&zwnj; சிந்து ஆகியோரின்&zwnj; காணொலிகள்&zwnj; பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறையின்&zwnj; திட்டங்கள்&zwnj; குறித்த காணொலி, நாட்டின்&zwnj; முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச்&zwnj; சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள்&zwnj; குறித்த காணொலி, மணற்கேணி செயலி பற்றிய காணொலி ஆகியவை திரையிடப்பட்டன.</p>
<h2><strong> 274 அரசுப்&zwnj; பள்ளி மாணவர்கள்&zwnj; தேர்வு</strong></h2>
<p>முன்னதாக தமிழ்நாடு மாதிரிப்&zwnj; பள்ளிகள்&zwnj; சங்கத்தின்&zwnj; உறுப்பினர்&zwnj; செயலர்&zwnj; இரா.சுதன்&zwnj;&zwnj; வரவேற்புரை ஆற்றினார்&zwnj;. அவர் பேசும்போது, &rsquo;&rsquo;கடந்த ஆண்டு மட்டும்&zwnj; 274 அரசுப்&zwnj; பள்ளி மாணவர்கள்&zwnj; நாட்டின்&zwnj; உயர்கல்வி நிறுவனங்களில்&zwnj; படிப்பதற்கு தேர்வாகினர்&zwnj;. தைவான்&zwnj;நாட்டில்&zwnj; படிப்பதற்கான வாய்ப்பை இந்தியாவிலிருந்து 3 மாணவர்கள்&zwnj; பெற்றனர்&zwnj;. அதில்&zwnj; இரண்டு மாணவர்கள்&zwnj; தமிழ்நாட்டைச்&zwnj; சேர்ந்த அரசுப்&zwnj; பள்ளி மாணவர்கள்&zwnj;&rdquo; எனத் தெரிவித்தார்&zwnj;.</p>
<p>மாநாட்டில் அரசுப்&zwnj; பள்ளி மாணவர்களின்&zwnj; கலை நிகழ்ச்சிகள்&zwnj; நடைபெற்றன. பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறை உயர்&zwnj; அலுவலர்கள்&zwnj;, ஆசிரியர்கள்&zwnj; மற்றும்&zwnj; அரசுப்&zwnj; பள்ளி மாணவர்கள்&zwnj; பங்கேற்றனர்&zwnj;.</p>

Source link