<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.&nbsp;இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயா கார்த்தியை பார்க்க ஆபீஸ் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p>
<p>அதாவது கார்த்திக்கை சந்திக்கும் மாயா &ldquo;நான் நட்சத்திராவோட தங்கச்சி&rdquo; என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். &ldquo;மேடம், உன்னையும் தீபாவையும் பிரிக்காமல் விடமாட்டேன். உங்க வாழ்க்கைய உருக்குலைப்பேன்&rdquo; என்று சவால் விடுகிறாள். அபிராமி வாயாலேயே தீபாவ வீட்டை விட்டு வெளியே விரட்டுவேன் என்று சொல்ல, கார்த்திக் &ldquo;உன்னால முடிந்ததை பாத்துக்கோ&rdquo; என பதிலுக்கு சவால் விடுகிறான்.&nbsp;</p>
<p>அதைத்தொடர்ந்து மாயா ஐஸ்வர்யா மற்றும் ரூபஸ்ரீ என மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்கின்றனர். &ldquo;தீபாவின் வாழ்க்கையை அழிக்க நாம மூணு பேரும் சேர்ந்து தான் சில வேலைகள் செய்யணும்&rdquo; என்று கை கோர்க்கின்றனர்&zwnj;.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து வீட்டில் தீபாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, தீபாவின் பெயருக்கு ஒரு கொரியர் வருகிறது. கார்த்திக் &ldquo;போய் வாங்கி பிரிச்சு பாருங்க&rdquo; என்று சொல்லி அனுப்பி வைக்க, தீபாவும் அதை வாங்கி பிரிக்க உள்ளே புடவை இருக்கிறது.&nbsp;</p>
<p>&ldquo;அதை கட்டிக்கிட்டு கேக் கட் பண்ண வாங்க&rdquo; என்று சொல்லும் கார்த்திக், புடவை கட்டிக் கொள்ளும்போது தீபாவிற்கும் உதவி செய்கிறான். அதோடு தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுவதாக சொல்ல, அவள் &ldquo;உங்களுக்கு மேக்கப் போடத் தெரியுமா?&rdquo; என்று கேட்க, அபிராமி &ldquo;காஸ்மெட்டிக் கம்பெனி நடத்துறவனுக்கு மேக்கப் போடத் தெரியாதா? எங்க அம்மாவுக்கு எல்லாம் நிறைய நான் தான் மேக்கப் போட்டு விட்டு இருக்கேன்&rdquo; என்று சொல்லி தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறான்.&nbsp;</p>
<p>பிறகு பர்த்டே பார்ட்டி தொடங்குகிறது. தீபா கேக்கை வெட்ட அருணாச்சலம் &ldquo;பல்லவி வரதா சொன்னீயே, எங்கே?&rdquo; என்று கேட்க தீபா அதிர்ச்சி அடைகிறாள். &ldquo;யார் வரப் போறாங்கன்னு தெரியலையே&rdquo; என்று யோசிக்க கார்த்திக், தீபா தான் அந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க, எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.&nbsp;</p>
<p>மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட, அபிராமி &ldquo;இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப&rdquo; என கோபப்படுகிறாள். பிறகு கார்த்திக் &ldquo;தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா, இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு அடிச்சு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன்&rdquo; என்று சொல்கிறான்.&nbsp;</p>
<p>அதுமட்டுமின்றி &ldquo;நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன்&rdquo; என்று சொல்ல, அபிராமி &ldquo;நம்ம கம்பெனியில் பாடுனா போதாதா?&rdquo; என்று கேட்க &ldquo;மற்ற கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை&rdquo; என்று சொல்கிறான்.</p>
<p>இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட, கார்த்திக் பின்னாடியே வர, காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. &ldquo;நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன், உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான்&rdquo; என்று கண் கலங்கி அழுகிறாள்.&nbsp; இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல்&nbsp; எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link


Latest News

View All

  1. Готель «ГЕРМЕС» https://hermes.zt.ua у Житомирі запрошує гостей міста на комфортне проживання. Вибирайте відповідний номер, уточнюйте вартість та умови бронювання. Зручний…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed