தீர்மானிக்கும் கேமில் ஆதிக்கம்
வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் ஆரம்பம் முதலே சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் வேகம் மற்றும் துல்லியமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க ட்ரீசா–காயத்ரி முயன்றபோதிலும், புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை.இறுதியில் 21–8 என மூன்றாவது கேமையும் கைப்பற்றிய லியு ஷெங்ஷு–டான் நிங் 2–1 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம்
காலிறுதியில் உலக தரம் 4-இல் உள்ள சீன ஜோடியான ஜியா யி ஃபான்–ஜாங் ஷு ஷியான் அணியை 16–21, 21–15, 21–13 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்திருந்தனர்.
இதன்மூலம் 2011-ல் ஜ்வாலா குட்டா–அஷ்வினி பொன்னப்பா வெண்கலம் வென்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
























