விடுமுறை நாட்களில் அபுதாபியில் இருந்து இந்து கோயில் வரை 203 என்ற புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஐக்கிய அமீரக அரசு தொடங்கியுள்ளது.
அபுதாபியில் இந்து கோயில்:
 பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு முதல் பொது விடுமுறை நாளான நேற்று முன்தினம் (03.03.2024) சுமார் 65 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் பேருந்து முனையத்திலிருந்து  இருந்து கோவில் வரை புதிய பேருந்து வழித்தடத்தை (203) அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை வளர்ப்பதில் நாட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் ஆன்மீக மற்றும் கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பது மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சிந்தனை அணுகுமுறைக்கு ஒரு சான்றாக உள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 
பேருந்து வழிதடம்
From/To: Al Nehyan Bus Station (Abu Dhabi City)Location: https://maps.app.goo.gl/nqQ12y83MxjKE5dS8?g_st=ic
To/From: BAPS Hindu Mandir, Abu Mureikha Location: https://maps.app.goo.gl/XPL6mnPn9ZkYasn68?g_st=ic
குவியும் பக்தர்கள் வருகை 
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட இந்து கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இக்கோயிலை மதம், இனம், மொழி பாகுபாடின்றி அனைவரும் வந்து பார்வையிடலாம் என பாப்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மார்ச் 1-ம் தேதி முதல் கோயிலை வந்து பார்வையிடம் என்றும் தெரிவித்திருந்தது. 
பார்வை நேரம்
தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிபாட்டுக்கு அனுமதிஅளிக்கப்படுகிறது. இந்நிலையில், முதல் பொது விடுமுறைநாளான நேற்று முன்தினம் (03.03.2024) இக்கோயிலுக்கு காலையில் 40 ஆயிரம் பேர், மாலையில் 25 ஆயிரம் பேர் என மொத்தம் 65 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
புதிய விதிமுறைகள்
அபுதாபியில் பிரம்மாண்டமாக திறக்கபட்டுள்ள BAPS இந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கியமான அறிவுரைகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து விதிமுறைகள் வெளியிட்டுள்ளது.
பார்வையாளர்கள் மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்
உடை 
பார்வையாளர்கள் தங்கள் தோள்கள் மற்றும் முழங்கால்களை  மறைக்கும் ஆடைகளை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆடைகளில் பிறர் மனதை புண்படுத்தும் வடிவமைப்புகள் மற்றும் வாசகங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. வளாகத்தின் புனிதத்தன்மையை பராமரிக்க வெளிப்படையான, ஒளி ஊடுருவக்கூடிய அல்லது இறுக்கமான ஆடைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களால் அவர்களின் உடை பொருத்தமற்றதாகக் கருதப்பட்டால், நுழைவுக்கு அனுமதி மறுக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை
கோவில் வளாகத்திற்குள் விலங்குகள் நுழைய அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை கொண்டு வர வேண்டாம்.
வெளிப்புற உணவுகளுக்கு அனுமதியில்லை
கோவில் வளாகத்திற்குள் வெளிப்புற உணவு மற்றும் குளிர்பானங்கள் அனுமதிக்கப்படாது. சாத்வீக உணவுகள் கோயில் வளாகத்தில்  கிடைக்கும்.
ஆளில்லா விமானங்கள்(டிரோன்) அனுமதி இல்லை
உள்ளூர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களிடம் தெரிவிக்கப்படாவிட்டால், கோயில் வளாகத்திற்குள் ட்ரோன்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை.
குழந்தைகள்
கோவில் வளாகத்திற்குள் நுழைய குழந்தைகளுடன் பெரியவர்கள் இருக்க வேண்டும்.

 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports