Villupuram: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்


<p style="text-align: justify;">விழுப்புரம்&zwnj; மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்&zwnj;, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்&zwnj; மற்றும்&zwnj; அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்&zwnj; உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்&zwnj; சி.பழனி தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">விழுப்புரம்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மைய அலுவலகத்தில்&zwnj; 01.01.2024 அன்று தொடங்கும்&zwnj; காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்&zwnj;, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்&zwnj; மற்றும்&zwnj; அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்&zwnj; உதவித்தொகை வழங்கும்&zwnj; திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்&zwnj; தற்பொழுது பெறப்படுகின்றன.</p>
<p style="text-align: justify;">பத்தாம்&zwnj; வகுப்பு (தோல்வி), பத்தாம்&zwnj; வகுப்பு தேர்ச்சி மற்றும்&zwnj; அதற்கும்&zwnj; மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்&zwnj; வேலைவாய்ப்பு அலுவலகத்தில்&zwnj; பதிவு செய்து பதிவினைத்&zwnj; தொடர்ந்து புதுப்பித்து 31.12.2023 அன்றைய தேதியில்&zwnj; ஐந்தாண்டுகள்&zwnj; நிறைவடைந்த பின்னர்&zwnj; வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்&zwnj; இளைஞாகளுக்கும்&zwnj;, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்&zwnj; பதிவு செய்து ஓர்&zwnj; ஆண்டு நிறைவடைந்த பின்னர்&zwnj; வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்&zwnj; மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும்&zwnj; தமிழக அரசால்&zwnj; உதவித்தொகை வழங்கப்படுகிறது.</p>
<p style="text-align: justify;">இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெற மனுதாரரின்&zwnj; குடும்ப ஆண்டு வருமானம்&zwnj; ரூ.72,000/- க்கு மிகாமல்&zwnj; இருத்தல்&zwnj; வேண்டும்&zwnj;. மேலும்&zwnj;, தாழ்த்தப்பட்ட மற்றும்&zwnj; பழங்குடியின மனுதாரர்கள்&zwnj; 31.12.2023 அன்றைய நிலையில்&zwnj; 45 வயதிற்குள்ளும்&zwnj;, இதர இனத்தை சார்ந்தவார்கள் 40 வயதிற்குள்ளும்&zwnj; இருத்தல்&zwnj; வேண்டும்&zwnj;. அரசாணை (நிலை) எண்&zwnj;.127, தொழிலாளர்&zwnj; மற்றும்&zwnj; வேலைவாய்ப்புத் &zwnj;(ஆர்&zwnj;2) துறை நாள்&zwnj; 25.07.2019 வாயிலாக இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; வழங்கப்படும்&zwnj; உதவித்&zwnj; தொகையினை இருமடங்காக உயாத்தி மாதமொன்றுக்கு பத்தாம்&zwnj; வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம்&zwnj; வகுப்பு தோரச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தோச்சிக்கு ரூ.600/- மற்றும்&zwnj; மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம்&zwnj; வகுப்பு தோல்வி மற்றும்&zwnj; தோச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு ரூ.750/-ம்&zwnj; மற்றும்&zwnj; பட்டப்படிப்பு தோர்ச்சிக்கு ரூ.1000/- என்றவாறு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">உதவித்தொகை விண்ணப்பப்படிவம்&zwnj; பெற விரும்பும்&zwnj; மனுதாரர்கள்&zwnj; தங்களின்&zwnj; வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மைய அலுவலகத்தில்&zwnj; விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்&zwnj; இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்&zwnj; அல்லது <a href="https://employmentexchange.tn.gov.in">https://employmentexchange.tn.gov.in</a>&nbsp; என்ற இணையதள முகவரியில்&zwnj; சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj;. மேலும்&zwnj;, இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; ஏற்கனவே பயன்பெற்றவர்கள்&zwnj; மீள விண்ணப்பிக்கத்&zwnj; தகுதியற்றவர்களாவார்கள்&zwnj;. மேலும்&zwnj;, இத்திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; பயன்பெறுபவர்களின்&zwnj; பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.</p>
<p style="text-align: justify;">01.01.2024 உடன்&zwnj; தொடங்கும்&zwnj; காலாண்டிற்கான உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள்&zwnj; 2024 பிப்ரவரி 28 -ம்&zwnj; தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும்&zwnj; மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்&zwnj; தொழில்நெறி வழிகாட்டும்&zwnj; மையம்&zwnj; விழுப்புரத்தில்&zwnj; இயங்கும்&zwnj; வேலைவாய்ப்பற்றோர்&zwnj; உதவித்தொகை திட்டப்பிரிவில்&zwnj; அனைத்து அசல்&zwnj; கல்வி சான்றிதழ்கள்&zwnj; வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும்&zwnj; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்&zwnj; கணக்குப்புத்தகத்துடன்&zwnj; நேரில்&zwnj; சமர்ப்பிக்கலாம்&zwnj;.</p>
<p style="text-align: justify;">வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்&zwnj;. வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை மாதந்தோறும்&zwnj; வழங்குவதற்கு அரசால்&zwnj; அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது எனவும்&zwnj; விழுப்புரம்&zwnj; மாவட்ட ஆட்சியர் டாக்டர்&zwnj; சி.பழனி தெரிவித்துள்ளார்&zwnj;.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>

Source link