Tamilnadu – Tata Motors: தமிழ்நாடு அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்.. 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு..


<p class="p2"><strong>டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும்&nbsp; 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர்&nbsp; மு.க.ஸ்டாலின்&nbsp; முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</strong></p>
<h2 class="p1"><strong><span class="s1"> 5,000 </span>நபர்களுக்கு வேலைவாய்ப்பு:</strong></h2>
<p class="p2">இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்<span class="s1">, &ldquo;</span>தமிழ்நாடு முதலமைச்சர் மு<span class="s1">.</span>க<span class="s1">. </span>ஸ்டாலின்<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>முன்னிலையில் இன்று<span class="s1"> (</span>மார்ச்<span class="s1"> 13) </span>முகாம் அலுவலகத்தில்<span class="s1">, </span>தொழில்<span class="s1">, </span>முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்<span class="s1"> 9,000 </span>கோடி ரூபாய் முதலீடு மற்றும்<span class="s1"> 5,000 </span>நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது<span class="s1">.</span></p>
<p class="p2">இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை<span class="s1">, 2030-</span>ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது<span class="s1">.&nbsp; </span>மேலும்<span class="s1">, </span>அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும்<span class="s1"> (capital intensive high-tech Industries), </span>பெருமளவிலான<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>வேலைவாய்ப்புகளை<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>அளிக்கக்கூடிய தொழில்களையும்<span class="s1"> (Employment intensive Industries) </span>ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது<span class="s1">.&nbsp; </span></p>
<p class="p2">அதன் ஒரு பகுதியாக<span class="s1">, </span>சென்னையில் ஜனவரி<span class="s1"> 7 </span>மற்றும்<span class="s1"> 8 </span>ஆகிய தேதிகளில்<span class="s1">, </span>உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு<span class="s1">, </span>முன்னெப்போதும் இல்லாத அளவாக<span class="s1">, </span>ரூ<span class="s1">.6,64,180 </span>கோடி முதலீடு மற்றும்<span class="s1"> 26,90,657 </span>நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன<span class="s1">.&rdquo; </span>என்று கூறப்பட்டுள்ளது<span class="s1">.</span></p>
<h2 class="p1"><strong><span class="s1"> 9000 </span>கோடி ரூபாய் முதலீடு:</strong></h2>
<p class="p2">மேலும்<span class="s1">, </span>அந்த அறிக்கையில்<span class="s1">, &ldquo;</span>வாகன உற்பத்தித் திட்டத்தில்<span class="s1">, </span>டாடா மோட்டார்ஸ் நிறுவனம்<span class="s1">, </span><span class="s1">5 </span>ஆண்டுகளில்<span class="s1">, 9000 </span>கோடி ரூபாய் முதலீடு மற்றும்<span class="s1"> 5000 </span>நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில்<span class="s1">, </span>இராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது<span class="s1">. </span>தமிழ்நாட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக<span class="s1">,<span class="Apple-converted-space">&nbsp; </span></span>தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின்<span class="s1"><span class="Apple-converted-space">&nbsp; </span></span>மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே<span class="s1">. </span>விஷ்ணு<span class="s1">, </span>மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர்<span class="s1"> P.B. </span>பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது<span class="s1">&rdquo;</span>என்று கூறப்பட்டுள்ளது<span class="s1">.</span></p>

Source link