Minister Sivasankar:எடப்பாடி பழனிசாமியை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயார்


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றார் எனவும், அவர் தன்னுடன் வந்தால் கிளாம்ப்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத்தயார் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். அவர் என்னுடன் வந்தால் அவரை அழைத்துக்கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சுற்றிக்காட்டத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link