<p>ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.</p>
<p>இந்தியா வெற்றி பெற்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்.டி.ஜி) வெற்றி பெறும். நீடித்த வளர்ச்சி இலக்குகள் வெற்றி பெற வேண்டுமானால், இந்தியா வெற்றி பெற வேண்டும்" என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வலியுறுத்தினார்.</p>
<p>மேலும் அவர் தனது உரையில், "நிலையான இந்தியாவை முன்னெடுத்தல்: முன்னோக்கி வேகமாக 2030 உடன் மாற்றத்தை இயக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ், ஒரு நாள் மாநாட்டில் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், நீர் பின்னடைவை மேம்படுத்துதல், நிலையான நிதி மற்றும் முதலீடு மூலம் செழிப்பை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான வாழ்க்கை ஊதியங்களை ஊக்குவித்தல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.</p>
<p>ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, ஐந்தாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, மேலும் முதலீட்டுக்கு மிகவும் விருப்பமான இடமாக வேகமாக மாறி வருகிறது என்று கூறினார் .&nbsp; இந்தியாவில் நிலவும் முடிவுகள்தான் உலகின் விளைவுகளை நிர்ணயிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.</p>
<p>கடந்த பத்தாண்டுகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், 250&nbsp;மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பன்முக வறுமையிலிருந்து&nbsp;விடுபட்டுள்ளனர் என்றும்,&nbsp;இது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நாட்டின் உறுதிப்பாட்டிற்கு சான்று என்றும் கூறினார்.</p>
<p>உலகளாவிய சவால்களுக்கு மத்தியில்,&nbsp;நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் அணுகுமுறை பிரகாசிக்கிறது என்று திரு பூரி கூறினார். உலகின் கணிசமான பகுதியினர் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்தைப்&nbsp;பெறுவதில் போராடி வரும் நிலையில்,&nbsp;இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறினார். நிலைத்தன்மை இலக்குகளை அடைவதில் பரந்த நிதி இடைவெளி இருந்தபோதிலும்,&nbsp;வளங்களைத் திரட்டுவதிலும்,&nbsp;பயனுள்ள முன்முயற்சிகளை செயல்படுத்துவதிலும் இந்தியா தீவிரமாக உள்ளது என்று அவர் கூறினார்.</p>
<p>பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய அரசின் முயற்சிகள் பற்றிப் பேசிய திரு. பூரி, இந்தியாவில் இதுவரை அனைத்துத் திட்டங்களும் பெண்களை மையமாகக் கொண்டவையாக இருந்தன என்றும், ஆனால் தற்போது பெண்கள் தலைமையிலான திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது என்றும் கூறினார். அரசியல் நடைமுறைகளில் பெண்களின் சமமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா&rdquo; பற்றி அவர் குறிப்பிட்டார்.</p>

Source link


Latest News

View All

  1. Если вы ищете надежное решение для ограждения, обратите внимание на [url=https://www.vorota-otkatnyye-mekhanicheskiye-na-rolikakh.ru/]ворота откатные механические цена 4 метра[/url], которые обеспечивают долговечность и…

  2. Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…

  3. Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed