TN Weather Update: மீண்டும் மழை.. வடகடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை நிலவரம் இதோ..


<p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>அதன்படி இன்று, தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>நாளை கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
<p>வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி, வடதமிழக கடலோர &nbsp;மாவட்டங்கள் மற்றும் &nbsp;தென்தமிழக மாவட்டங்களில் &nbsp;ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; &nbsp; வட உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
<p>அதனை தொடர்ந்து 11 ஆம் தேதியும் 12 ஆம் தேதியும், வட &nbsp;தமிழக மாவட்டங்களில், தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
<p>பிப்ரவரி 13 மற்றும் 14 ஆம் தேதி, கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். உள்தமிழக மாவட்டங்களில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும்.&nbsp;</p>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களி லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை&nbsp; வானிலை ஆய்வு மையம்&nbsp; தெரிவித்துள்ளது.&nbsp;</p>

Source link