இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்: இந்தியர் பலி; 2 பேர் காயம்


<p><strong>Israel Border:</strong> லெபனானில் இருந்து ஏவப்பட்ட டேங்கர் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையைத் தாக்கியது.&nbsp;</p>
<h2><strong>இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இந்தியர் பலி:</strong></h2>
<p>இஸ்ரேல் எல்லைக்கு அருகே நடந்த ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.&nbsp; இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், &ldquo;நேற்று லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லை சமூகமான மார்க<a title="லியோ" href="https://tamil.abplive.com/topic/leo" data-type="interlinkingkeywords">லியோ</a>ட் அருகே உள்ள பழத்தோட்டத்தை தாக்கியது. இதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்தனர்.</p>
<p>இவர்கள் மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் இஸ்ரேலின் வடக்கில் உள்ள கலிலி பகுதியில் உள்ள மோஷாவ் என்ற தோட்டத்தில் விழுந்து தாக்கியது&rdquo; என மீட்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம் ஜாக்கி ஹெல்லர் பிடிஐயிடம் தெரிவித்தார்.</p>
<h2><strong>கேரளாவைச் சேர்ந்தவர்கள் காயம்:</strong></h2>
<p>இந்த தாக்குதலில் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அவரது உடல் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>
<p>&rdquo;முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதால் ஜார்ஜ் பெட்டா திக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, உடல் நலம் தேறி, தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேசுவார்&rdquo;என அதிகாரிகள் தெரிவித்தனர். மெல்வின் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.&nbsp;</p>
<h2><strong>இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்:</strong></h2>
<p><span>காசா பகுதியில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ஹமாஸுக்கு ஆதரவாக அக்டோபர் 8 முதல் வடக்கு இஸ்ரேல் மீது தினமும் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி,&nbsp; லெபனானில் உள்ள ஷியா ஹிஸ்புல்லா பிரிவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.&nbsp; </span><span>இந்தத் தாக்குதலில் ஏழு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் இருவர் படுகாயமடைந்ததாகவும், அவர்களது ஆம்புலன்ஸ்கள் மற்றும் இஸ்ரேலிய விமானப்படை ஹெலிகாப்டர்களில் பெய்லின்சன், ரம்பம் மற்றும் ஜிவ் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதலில் தகவல் வெளியானது.</span></p>

Source link