maari serial today april 25th episode zee tamil written update | Maari Serial: வீடு தேடி வந்த பாம்பு.. ஸ்ரீஜாவுக்கு மாரி கொடுத்த வார்னிங்


Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா குழந்தையை கண்டுபிடிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது மாரி ஸ்ரீஜாவை சந்தித்து “நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு. ஒழுங்கு மரியாதையா குழந்தையை அவங்க அம்மா கிட்ட கொடுத்திட்டு வீட்ல எல்லாரிடமும் உண்மையை சொல்லிடு” என்று சொல்ல ஸ்ரீஜா முடியாது என்று மறுத்து விடுகிறாள்.  மறுபக்கம் சாஸ்திரி வீட்டில் குழந்தை பசியில் துடித்து கொண்டிருக்கிறது. சாஸ்திரி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்க இதையெல்லாம் அங்கிருந்து நோட்டம் விட்டு கொண்டிருக்கிறது நல்ல பாம்பு ஒன்று. 
உடனே அந்த பாம்பு மாரி வீட்டிற்கு வந்து மாரியை சந்தித்து பால் கேட்க மாரியும் பாம்புக்கு பால் வைக்க அதை குடித்த நாகம் மீண்டும் சாஸ்திரி வீட்டிற்கு திரும்பி வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Vishal: “என்னை சுற்றலில் விடுகிறார்கள்” ரத்னம் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் விஷால் ஆவேசம்!
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?

மேலும் காண

Source link