தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ராம் சரண் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 
சர்வதேச செலிபிரிட்டி :
2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சிறுத்தை’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும்  எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. அப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஆடிய ‘நாட்டு நாட்டு…’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. அதன் மூலம் பவர் ஸ்டாராக இருந்த ராம் சரண் குளோபல் ஸ்டாராக பிரபலமானார். 

தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ‘ஜரகண்டி’ பாடலின் லிரிக் வீடியாவை படக்குழு வெளியிட்டனர். தற்போது இந்த பாடல் ட்ரெண்டிங்காகி வருகிறது. 
திருமண வாழ்க்கை :
ராம் சரணுக்கும் உபசனாவுக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் அப்போலோ மருத்துவமனையின் உரிமையாளரின் பேத்தியாவார். மேலும் அப்போலோ சாரிட்டியின் வைஸ் சேர்மேனாகவும் இருந்து வருகிறார் உபாசனா. இந்நிலையில் ராம் சரண்  சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளது. 
ராம் சரண் சொத்து மதிப்பு :
ஜூப்லி ஹில்ஸின் காஸ்ட்லீயான காலனியில் 25000 சதுர அடியில், 40 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பங்களாவுக்கு உள்ளேயே ஜிம், நீச்சல் குளம் மற்றும் பல வசதிகள் உள்ளன என கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்காக 45 கோடி சம்பளமாக பெற்ற ராம் சரண் அதன் இமாலய வெற்றிக்கு பிறகு சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார். கேம் சேஞ்சர் படத்துக்காக 100 கோடியாக உயர்த்தியவர் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள படங்களுக்கு மேலும் சம்பளத்தை பல கோடிகள் உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது. 
நடிகராக மட்டுமின்றி அவர்களின் குடும்ப பெயரில் கொனிடேலா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். விளம்பரங்களில் நடித்து வருவதுடன் 34 பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார். மேலும் ரூட்ஜெட் என்று விமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ராம் சரண். 

சொகுசு கார்கள்:
ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் , மெர்சிடஸ் மேபேக் , ஃபெராரி போர்ட்டோஃபினோ மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்துள்ளார். இதில் ராம் சரண் தந்தை சிரஞ்சீவி மற்றும் மனைவி உபசனாவின் சொத்து மதிப்பை சேர்க்காமல் ராம் சரண் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே 1300 கோடி  இருக்கும் என கூறப்படுகிறது. 
இந்த தகவல்களை கேட்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வாயடைத்து போய்விட்டனர்.

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed