Bommi Serial: க்ளைமேக்ஸை எட்டிய பொம்மி சீரியல்: குடும்பத்துடன் ஒன்றிணையும் அனிருத்! நடக்கப்போவது என்ன?


<p>கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி சீரியல் க்ளைமேக்ஸை எட்டியுள்ளதால் இந்த சீரியலின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.</p>
<p>இந்த சீரியலில், ஆறு மாதங்களுக்கு பிறகு அனிருத் இறந்துவிட்டதாக அனைவரும் அனுமானிப்பதைத் தொடர்ந்து பொம்மி அதிர்ச்சியில் இருக்கிறார். விசாரணையில், அனிருத்தும் பாண்டுவும் ஒரே மாதிரியாக இருப்பதை அவள் அறிந்துகொள்கிறாள். இதனால் தான் அனிருத்துடன் அல்ல, பாண்டுவுடன் வாழ்கிறாள் என்பதை உணர்கிறாள்.&nbsp; ஆனால் அனிருத்தின் இருப்பை உணர்ந்து, அவன் உயிருடன் இருப்பதாக அவள் நம்புகிறாள்.</p>
<p>பொம்மி இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறாள். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். இதற்கிடையில், அனிருத் தனது முகவரியை நினைவில் வைத்துக் கொண்டு அல்லி நகரத்திற்குத் திரும்ப முடிவு செய்கிறான். பாண்டு மருத்துவமனையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை கடத்தி இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.</p>
<p>பொம்மி, தனது குழந்தைகளைக் காணவில்லை என்பதைக் கண்டு நொறுங்கி, வீட்டை அடைகிறாள். ஆனால் கதவு பாண்டுவால் பூட்டப்பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவள் பாண்டுவிடம் தன் குழந்தைகளை திருப்பித் தருமாறு கெஞ்சுகிறாள். இருப்பினும், பாண்டு தனது நோக்கத்தை வெளிப்படுத்தி பொம்மியை உயிருடன் எரிக்க முயற்சிக்கிறான். ஆனால் சிறிது நேரத்தில் அனிருத் அங்கு வந்து அவளைக் காப்பாற்றுகிறான்.</p>
<p>கடந்த ஆறு மாதங்களில் அவன் தன்னுடன் இல்லாதபோது நடந்த அனைத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். ஆத்திரமடைந்த அனிருத் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைகிறான். அவனது குடும்ப உறுப்பினர்களுடன் உணர்வுப்பூர்வமாக மீண்டும் இணைந்த பிறகு, அனிருத் பாண்டுவை அறைந்து வெளியேற்றுகிறான். அனிருத்தும் பொம்மியும் தங்கள் இரட்டைக் குழந்தைகளை துர்கா சிலையின் முன் அழைத்துச் சென்று, தங்கள் குழந்தைகளும் சமூகத்தின் தீய பழக்கவழக்கங்களை முறியடித்து அவர்களைப் போல பாரிஸ்டர்களாக மாறுவார்கள் என்று அறிவிக்கும் வகையில் வரும் வாரம் மகிழ்ச்சியுடன் நிறைவடைகிற்து.</p>
<p>மேலும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி பொம்மி சீரியலின் கடைசி எபிசோட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் &nbsp;2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>

Source link