<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க, அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். </p>
<p>அதாவது, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று சொல்லி கேட்க, ரவுடி ஒருவன் கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுக்க, அபிராமி அவனை கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள். </p>
<p>இதனையடுத்து மெய்ன் ரவுடிக்கு இந்த விஷயம் தெரிய வர, அவனும் அபிராமியை துரத்தி வர போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடிப் பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில் அங்கு இருக்கும் தடயங்களை வைத்து “இப்போ தான் தப்பி சென்றிருக்கணும்” என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர். </p>
<p>மறுபக்கம் தப்பி ஓடி வரும் அபிராமி ரோட்டை அடைந்து விட, எதிர்பாராத விதமாக ஒரு வண்டி இடித்து விட விபத்தில் சிக்கி சரிந்து விழுகிறாள். உடனே அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்ப, அந்த வழியாக வரும் ஆட்டோவை கை போட்டு நிறுத்துகின்றனர். அந்த ஆட்டோ ட்ரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர் தான்.</p>
<p>ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி தெரியாத காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Previous Post
Next Post






















suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz