<p style="text-align: justify;">சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கான கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
<p style="text-align: justify;">பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன், "தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் வந்தது அவர்கள் சம்பளம் வழங்குவதில்லை. அவர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். இதேபோல் தூய்மை பணியாளர்களுக்கான சீருடை பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற அவர், தமிழ்நாட்டில் காண்ட்ராக்டர் சிஸ்டத்தை ஒழிக்க வேண்டும். நஷ்டம் ஏற்படும் துறையை தான் தனியாரிடம் வழங்க வேண்டும். ஆனால் லாபம் இருப்பதால்தான் தூய்மை பணியை காண்ட்ராக்ட் எடுக்க பலரும் முன் வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மாநகராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போல, நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பிரச்சனை 60% வரை குறையும் என்று கூறினார். மேலும் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்காக தேசிய ஆணையம் இருப்பது போல மாநில ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்" என்றார். </p>
<p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/14/d9ae5cfc84346cc957e47c30a252d5aa1710420951652113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;">இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என குற்றம் சாட்டிய அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளர் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார். தூய்மை பணியாளர்கள் வேறு தொழிலுக்கு செல்ல விருப்பப்பட்டால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அதேபோல் மாநகராட்சியில் பணியாற்றும் படித்த தூய்மை பணியாளர்கள் அலுவலக உதவியாளர் மற்றும் வரி வசூலர் போன்ற படிப்பிற்கு ஏற்ற உரிய பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
mejor casa de apuestas online chile – Www.tmpimeraki.com, de españa
casino sin minimo de deposito tigre de cristal
casinos en badajoz Feel free to visit my site – casino madrid online bono sin depósito (https://www.speckandthecity.it/)
app casino tragamonedas en pucon
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

‘வருஷநாடு பகுதியில் உள்ள அரசு ஊழியர்கள் தாமாக முன்வந்து வெளியேறுங்கள் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு | Government employees in the Varushanadu area must voluntarily leave – District Collector’s order. | ACTPnews.com
-

“பொருளாதார வளர்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்”- தங்கம் தென்னரசு | dmk thangam thennarasu about parandur airport | ACTPnews.com
-

மோடி-ட்ரம்ப் சந்திப்பில் திடீர் திருப்பம்: 45 நிமிட செய்தியாளர் சந்திப்பு|‘Any Questions?’: How Trump Turned Modi’s G7 Meet Upside Down | ACTPnews.com
-

“கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்” – கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு | Mla Kanimozhi Santhosh alleges that the Karur company discussed a package with her | ACTPnews.com
-

"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" – விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன? | ACTPnews.com


















miglior bookmaker italiano Here is my web page; topitalia scommessa Gratis 50 euros