Wildlife Photography: "அழகாக உறங்கும் துருவக் கரடி" சிறந்த வன உயிரின புகைப்பட கலைஞர் விருதை வென்றது!


<p>சிறைய பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் புகைப்படம் பிரிட்டன் தேசிய வராலாற்று அருங்காட்சியகத்தின் சார்பில் வழங்கப்படும் ஆண்டின் &lsquo;சிறந்த வனவிலங்கு புகைப்படம்&rsquo; (மக்கள் தேர்வு) விருதைப் பெற்றுள்ளது.</p>
<h2><strong>தூங்கும் துருவக்கரடி:</strong></h2>
<p>துருவக் கரடி அழகாக உறங்கிய படத்தை எடுத்த பிரிட்டனைச் சேர்ந்த நிமா சரிஹானி (Nima Sarikhani) ‘ இந்தாண்டிற்கான சிறந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர்&rsquo; விருதை வென்றுள்ளார். &rsquo;Natural History Museum&rsquo; நடத்திய புகைப்படப் போட்டியில் நார்வே தீவுகளில் உள்ள துருவக் கரடியை படமெடுத்த புகைப்படத்திற்கு &lsquo;சிறந்த புகைப்பட கலைஞர்&rsquo; (மக்கள் தேர்வு) விருது அளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<p>இந்தப் புகைப்பட போட்டியில்&nbsp; சுமார் 95 நாடுகளில் இருந்து மொத்தமாக 50,000 பேர் பங்கேற்றனர்.&nbsp; கேமராவில் ஃப்ரீஸ் செய்த வன உயிரினங்களின் வாழ்விடத்தில் அழகியலுடன் புகைப்படங்களை எடுத்து அனுப்பி இருந்தனர். அதிலிருந்து சிறந்த 25 பதிவுகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் நிமா எடுத்த, பனிப்பாறை மீது உறங்கும் துருவக் கரடியின் படம் சிறந்த படமாக தேர்வு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. துருவக் கரடியின் புகைப்படத்திற்கு&nbsp; 75,000 பேர் வாக்களித்துள்ளனர்.&nbsp;</p>
<h2><strong>3 நாட்கள் காத்திருப்பு:</strong></h2>
<p>விருது குறித்து நிமா கூறுகையில், மூன்று நாட்களாக துருவக் கரடியின் வருகைக்காக காத்திருந்தேன். ஒரு நாள் வந்தது. இந்தாண்டிற்கான மக்கள் தேர்வு சிறந்த புகைப்பட கலைஞருக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்திற்கு வடக்குப் பகுதியில் எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். அதை காணும்போதே அவ்வளவு அழகாக இருந்தது.&rdquo; என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p>
<p>&rdquo; பனி அதிகம் இருக்கும் இடத்தை தேடி சென்றோம். அங்கு வயதில் இளைய மற்றும் மூத்த ஆண் துருவக் கரடிகளை பார்த்தோம். சுமார் எட்டு மணி நேரம் காத்திருந்தோம். ஒரு நள்ளிரவில் கரடி ஒன்று சிறிய பனிப்பாறையின் மீது ஏறி, தனது வலுவான பாதங்களைப் பயன்படுத்தி, தான் தூங்கும் இடத்தை தயார் செய்தது. நகங்களை பயன்படுத்தி அது பனியை செதுக்கியது அழகாக இருந்தது. பின்னர் தூங்கியது. அதை படமாக எடுத்தேன்&rdquo; என நிமா தெரிவித்தார்.</p>
<p>சிறிய பனிப்பாறை மீது இயற்கையின் அழகையும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலையும் ஒரு சேர வெளிக்காட்டும்படியாக அமைந்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p>
<hr />
<p>&nbsp;</p>

Source link