TN Weather Update: 22 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கும்.. வெப்பநிலை அதிகரிக்கும் எச்சரிக்கை..


<p>கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>அதன்படி இன்று, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், &nbsp;புதுவை மற்றும் &nbsp; காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு &nbsp;இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும். &nbsp;உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>நாளை (பிப்ரவரி 17), தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். &nbsp;ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும்.&nbsp; உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.&nbsp;</p>
<p>அதேபோல் 18 ஆம்&nbsp; தேதி முதல் 22 ஆம் தேதி வரை,&nbsp; தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</p>
<p>16.02.2024 மற்றும் 17.02.2024: தென்தமிழக &nbsp;கடலோரப்பகுதிகள், &nbsp; &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய &nbsp;குமரிக்கடல் &nbsp;பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு &nbsp;45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>

Source link