தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரானார் செல்வப்பெருந்தகை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் மேலிடம் அதிரடி


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகிரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைமையின் இந்த முடிவு அதிரடியாக பார்க்கப்படுகின்றது. 

செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், செல்வப்பெருந்தகை வகித்து வந்த  காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 

மேலும் காண

Source link