கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு 3 நாட்கள் அரசு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2 மற்றும் 3-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவின்போது மது பிரியர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் 4 டாஸ்மாக் மதுக்சில்லறை விற்பனை கடைகளை 3 நாட்களுக்கு அடைத்து வைக்க மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் காரவள்ளியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்களுக்கு மூடி வைக்க நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருந்தார்.

அதன் காரணமாக, இன்று காலை டாஸ்மாக் மதுக்கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. தொடர்ந்து 4-ம் தேதி பகல் 12 மணி வரை கொல்லிமலை வட்டத்தில் உள்ள 4 டாஸ்மாக் மதுக்கடைகளும் செயல்படாது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்கப்படும் சூழல் நிலவுவதால், அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சட்டவிரோம மது விற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி ம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports