Family-அ Damage பண்ணிட்ட, பொதுவாழ்க்கைல இருக்குற ஒருத்தர ஏன் மா இழுக்குற..? எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ


<p>கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு இதுவரை திரும்பவில்லை. இந்த நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார் .&nbsp;</p>
<p>மேலும், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா வயது 18 என்பவர் சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலை சேர்க்கப்பட்டார்&zwnj;. மேலும் ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த நிலையில், கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்களது வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள்கள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்எல்ஏ மகன் சூடு வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது. மேலும், அவரது மருமகள் மார்லினா தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p>இதனுடைய கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்ட நிலையில்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>க்காக வீட்டிற்கு வரவேண்டும் என அவரது தாய் அழைத்ததாலும் சென்னையில் ரேகா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி ரேகாவை சொந்த ஊருக்கு அனுப்ப இருந்தனர்.&nbsp;</p>
<p>அப்போது, இந்த கொடுமைகளை எல்லாம் மீறி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, அதன்பின்பு நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து ரேகாவின் உடலின் பல இடங்களில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதையடுத்து, ரேகா உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.</p>
<p>இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ மருமகள் மெர்லினா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், &ldquo; மூன்று நாளால என்னால சாப்ட முடியாம, தூங்க முடியாம, என் பொண்ணையும் என்னால பார்க்க முடியாம இந்த லெவலுக்கு என்னை கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கீங்க. அந்த பொண்ண என் வீட்ல ஒரு பொண்ணாகதான் பார்த்தேன். அது அந்த பொண்ணுக்கே நல்லாவே தெரியும்.&nbsp;</p>
<p>ரேகா உனக்கு அக்காவை பற்றி நல்லாவே தெரியும். அக்கா உன்னை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தணும்ன்னு நினைச்சதே இல்லை. எதுக்காக இதையெல்லாம் செய்யுற மா. உனக்கு எதுனாலும் வேணும்னா அக்காகிட்ட கேட்டு வாங்கி இருக்கலாமே. எதுக்காக நீ இவ்வளவு தூரம் ஒரு பேமிலிய டேமேஜ் பண்ற மா. உனக்கு அதோட சீரியஸ்னஸ் புரியாம நீ பண்ணிட்டு இருக்க. என்ன பத்தி, அண்ணனை பற்றி பேசுற ஓகே. எங்க மாமனார் என்ன மா பண்ணாரு. எத்தனை வருட உழைப்பு தெரியுமா மா? இரவும், பகலும் தூங்காமல் எவ்வளவு பேரை பார்த்து கஷ்ட்டப்பட்டு… இதனால எங்க குடும்பத்துக்குள்ள எவ்வளவு பெரிய பிரச்சினை வரும்ன்னு யோசிச்சு பார்த்தியா மா..? தயவுசெஞ்சு பொது வாழ்க்கைல இருக்குற ஒருத்தர வச்சு கவனத்திற்கு கொண்டு வரனும்ன்னு நினைக்காத மா. இது சரி இல்லை&rdquo; என்று பேசியிருந்தார்.&nbsp;</p>

Source link