தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் கபடி போட்டிக்கு கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது திருச்செந்தூர் முருகன் கோவில் வெளியே பொங்கல் வைத்து கொண்டாட்டம் தொடங்க, மைக்கில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கபடி போட்டி விரைவில் தொடங்கி போகிறது என்ற அறிவிப்பு வருகிறது, சௌந்தரபாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் புல் ஹாண்ட் டீ ஷார்ட் போட்டு வந்திருக்க பாண்டியம்மா “எல்லாம் ரெடி தானே?” என்று கேட்க, அவர்கள் மறைத்து வைத்திருக்கும் கத்தியை எடுத்து காட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி மப்டியில் வந்து ஷண்முகத்தை இடித்து வம்பிழுக்க, ஊர் காரர்கள் “உனக்கு எப்பவும் ஷண்முகம் கூட பிரச்சனை செய்யறதே வேலையா போச்சி” என்று திட்டிப் பிரித்து விடுகின்றனர். முதல் ரவுண்டில் ஷண்முகம் டீமும் வேறொரு டீமும் விளையாட, ஷண்முகம் டீம் வெற்றியை பதிவு செய்ய முத்துப்பாண்டி டீம் களத்தில் இறங்கி வேறொரு டீமுடன் ஆக்ரோஷமாக விளையாட ஷண்முகம் டீமில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு சௌந்தரபாண்டி ரவுடிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து “சந்தேகம் வராமல் அந்த சண்முகத்தை போடணும்” என பேசி கொண்டிருப்பதை சிவபாலன் பார்த்து விட, அதை பரணி பாக்கியத்திடம் சொல்ல, அவர்கள் சண்முகத்தை தடுக்க முயற்சி செய்ய, ஷண்முகம் அனைத்தையும் மீறி விளையாட தொடங்குகிறான். ரவுடிகள் எதிர் டீமில் களமிறங்கி ஷண்முகம் டீம் ஆட்களை ஓட விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? ரவுடிகளிடம் இருந்ததை ஷண்முகம் தப்பிக்க போவது எப்படி எனும் ட்விஸ்ட்டுகளுடன் அண்ணா சீரியல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!























Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/