Last Updated:
GOAT Tour | கொல்கத்தாவில் உள்ள மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர்.
கொல்கத்தாவில் நிகழ்ந்த அசாதாரண சூழலுக்கு மேற்குவங்க முன்னாள் அமைச்சர் அருப் பிஸ்வாஸ் முக்கிய காரணம் என மெஸ்ஸி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘GOAT Tour’ என்ற பெயரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி, கொல்கத்தாவில் உள்ள மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியதால் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிதான்நகர் காவல் ஆணையருக்கு மெஸ்ஸி தரப்பில் இருந்து நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மைதானத்தில் அரங்கேறிய குழப்பங்களுக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் அருப் பிஸ்வாஸ் முக்கிய நபராக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் பல நெறிமுறை மீறல்களும் பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. அருப் பிஸ்வாஸ் மற்றும் அவருடன் அனுமதியே இல்லாமல் மைதானத்தில் நுழைந்தவர்களால் நிலைமை மோசமானதாக சுட்டிக்காட்டியுள்ள மெஸ்ஸி தரப்பு, சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி 40-க்கும் மேற்பட்டோர் மெஸ்ஸியை சூழ்ந்துக் கொண்டு, அவரை தொடுவதும் தழுவியணைப்பதுமாக அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி மாறியுள்ள நிலையில், மெஸ்ஸி தரப்பின் இந்த கடிதம் விசாரணையை தீவிரமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu























