Karthigai Deepam serial today february 21st zee tamil serial written update


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோயிலுக்குச் சென்றிருந்த போது அங்கு தீபாவைப் பார்க்க கூடிய கூட்டத்தில் சிக்கி அபிராமி கீழே விழுந்து காயம் ஏற்பட, அவள் தீபா மீது கோபத்தைக் காட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
அதாவது அபிராமியும் தீபாவும் வீட்டுக்கு வர கையில் காயத்துடன் இருக்க, அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து கார்த்திக் ஃபோட்டோவை எடுத்து பார்த்துக் கொண்டிருக்க, அந்த ஃபோட்டோ கீழே விழுந்து உடைய, அபிராமி ஜோசியர் சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்த்து பயப்படுகிறாள். அடுத்து கார்த்திக் ஆபிஸூக்கு வர, அங்கு எல்லாரும் கைத்தட்டி வாழ்த்து சொல்கின்றனர். இதனையடுத்து கார்த்தியும் நீங்கள் செய்ததும் பெரிய உதவி என்று பாராட்டி நன்றி தெரிவிக்கிறான். 
பிறகு சினேகாவைப் பார்த்து “என்ன சினேகா கச்சேரிக்கு நீங்க வரவே இல்லை?” என்று கேட்க, “இல்ல சார்.. கொஞ்சம் பெர்சனல் வேலை இருந்தது” என சொல்ல, கார்த்திக் மேலேயும் கீழேயும் பார்க்க, சினேகா “உண்மையாகவே கொஞ்சம் வேலை இருந்தது சார். அதனால் தான் வர முடியல. எனக்கும் கச்சேரிக்கு வரணும் என்ற ஆசை இருந்தது” என்று சொல்கிறாள். 
அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம் “தீபா பாடக்கூடாதுனு எவ்வளவு தடை? எவ்வளவு எதிரிகள்” என்று பேச, “வீட்டிலேயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க” என்று சொல்கிறான். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர, தீபா சோகமாக இருப்பதைப் பார்த்து என்னாச்சு என்று கேட்க, கோயிலில் அபிராமி கீழே விழுந்ததையும், தன்னைத் திட்டிய கதையையும் சொல்கிறாள். கார்த்திக், “சரி ப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன்” என்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்துக்கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான். 
இங்கே அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும் தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்ல, கார்த்திக் இதைக்கேட்டு விடுகிறான். பிறகு கார்த்திக் ரூமுக்குள் வர, இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர். கார்த்திக் அபிராமிக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Saranya Ponvannan: இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தும் ரொம்ப ஃபீல் பண்றேன் – சரண்யா பொன்வண்ணன் வருத்தம்!
Actress Trisha: ”திரிஷானு எங்க சொன்னேன்…” திடீர் பல்டி அடித்த முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ!

மேலும் காண

Source link