Siragadikka Aasai :சத்யா வழிப்பறி செய்த வீடியோவை பார்க்கப் போகும் மீனா…சிறகடிக்க ஆசையில் இன்று!


<p>சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.&nbsp;</p>
<p>மீனா, ரோகினி மற்றும் ஸ்ருதி கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகினி, &ldquo;மேரேஜுக்கு முன்னாடி நம்மல இம்ரஸ் பன்றதுக்கு அப்டியே லவ்வா உருகுறாங்க. மேரேஜுக்கு அப்றம் டேக் இட் ஈசியா எடுத்துக்குறாங்க&rdquo; என்கிறார் ரோகினி. &rdquo;மேரேஜுக்கு முன்னாடி பார்க்கணுமே நாம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்க. அவங்களே வந்து சாரி சொல்லுவாங்க&rdquo; என்கிறார் ரோகினி. &rdquo;முன்னாடி என் இஷ்டத்துக்கு இருப்பேன் என் மம்மி என்னை எதுவும் கேட்க மாட்டங்க&rsquo;என்கிறார் ஸ்ருதி.&nbsp;</p>
<p>&rdquo;அவங்க 3 பேரும் சண்டை போட்டுகிட்டு போனது நமக்கு நல்லதா போச்சு. நம்ம நல்லா பேச முடியுது. அட்லீஸ்ட் நமக்குள்ள பாண்டிங்காவது வரும்&rdquo; என்கிறார் ஸ்ருதி. &rdquo;இப்ப மேல போய் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க இல்ல&rdquo; என்கிறார் ஸ்ருதி. உடனே மாடி மீது முத்து ரவி ஆகியோர் சிரிக்கின்ற சத்தம் கேட்கின்றது.&nbsp;</p>
<p>மீனாவை காபி கொண்டுவர சொல்கிறார் விஜயா. அதற்கு அண்ணாமலை &ldquo;என்னவோ அவள வேலைக்கு வச்சி இருக்க மாதிரி சொல்ற&rdquo; என்கிறார். &rdquo;அவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க இல்ல என்கிறார் விஜயா. &rdquo;அப்போ நீ வேலை செய். நீயுமா பேக் மாட்டிக்கிட்டு வேலைக்கு போற என கேட்கிறார் அண்ணாமலை. மனோஜ் பாயுடன் மாடியில் இருந்து வருவதை பார்த்து விஜயா அதிர்ச்சி ஆகிறார். விஜயா, ரோகினி ரூமுக்கு சென்று ரோகினியிடம் , &rdquo;உங்களுக்குள்ள வேற ஏதும் பிரச்சனை இல்லையே&rdquo; என கேட்கிறார். &rdquo;இப்ப வரை எதுவும் இல்லை ஆண்டி&rdquo; என ரோகினி சொல்கிறார்.&nbsp;</p>
<p>&rdquo;நீ சொன்னத கேட்டு அவசரப்பட்டு ஒரு வேலைக்கு போனது தான் தப்பா போச்சு&rdquo; என்கிறார் மனோஜ். அதற்கு &rdquo;ரோகினி உனக்கு எந்த வேலைக்கும் போக பிடிக்கலைனு சொல்லு. நீ லேசியா இருந்துட்டு என்னை ஏன் காரணம் சொல்ற&rdquo; என கேட்கிறார்.&nbsp; தான் ஹோட்டலில் வெயிட்டரா வேலை பார்த்தது குறித்து மனோஜ் ரோகினியிடம் சொல்கிறார்.&nbsp;</p>
<p>இனிமே என் படிப்புக்கு ஏத்த வேலை கிடச்சா மட்டும் தான் செய்வேன் என்கிறார் மனோஜ். &rdquo;இனிமே ஆளாலுக்கு என்னை கன்ஃபியூஸ் பண்ண வேண்டாம். எனக்கேத்த வேலையை நானே தேடிக்குறேன்&rdquo; என்கிறார் ரோகினி. &rdquo;வேலைக்கு போனா தான் உனக்கு ஒரு மரியாதை கிடைக்கும் அதனால தான் நான் உன்னை ஃபோர்ஸ் பன்றேன்&rdquo; என்கிறார் ரோகினி.&nbsp;</p>
<p>&rdquo;வாக்கிங் போகும் போது பார்த்தேன் கார் வெளியே இல்லையே&rdquo; என கேட்கிறார் அண்ணாமலை. முத்து ஷெட்டில் இருப்பதாக கூறி சமாளிக்கிறார். சத்யா விஜயாவிடம் இருந்து வழிப்பறி செய்த வீடியோவை முத்து பார்த்து விட்டு கோவப்பட்டு செல்கிறார். மீனா போனை எடுக்கிறார் முத்து அதை கோவமாக பிடுங்கிறார்.&nbsp;</p>
<p>ஸ்ருதி ஜாலியாக ரூமுக்குள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். &rdquo;நான் இல்லனு நீ கொஞ்சம் கூட ஃபீப் பண்ணலயா?&rdquo; என கேட்கிறார் முத்து. மீண்டும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.&nbsp;</p>

Source link