Zee Tamil Idhayam Serial January 29th Episode Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம்.
இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் ஆதியின் காதல் குறித்த உண்மை அறிந்த சாரதா பாரதியை தனியாக அழைத்து இனிமே நீ ஆதி வாழ்க்கையில் வரக்கூடாது என மிரட்டி எச்சரித்து அனுப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வீட்டுக்கு வந்த பாரதி வாசுவின் போட்டோவை பார்த்து அழுது புலம்பி கொண்டிருக்க அவள் கண்ணில் தமிழ் வரைந்த ட்ராயிங் தென்பட அதை எடுத்து கிழித்துப் போடுகிறார்.
இந்த நேரம் பார்த்து தமிழ் உள்ளே வந்துவிட அதைக் கிழித்து படுவதை பார்த்து அதை எதிர்க்கும் கிழிச்சு போட்டீங்க என்று கேட்க நீயும் என்னை எதிர்த்து பேசுறியா என்று பாரதி குழந்தையை போட்டு அடிக்க எல்லோரும் ஓடி வந்து விடுகின்றனர். பாரதி கண்ணீர் விட்டு கதற எல்லோரும் பாரதியை தீட்டிவிட்டு தமிழை கூட்டிச் சென்று விடுகின்றனர்.
தமிழ் அம்மா அடித்த கோபத்தில் பாரதியிடம் பேசாமல் இருக்கிறாள். தாத்தா ரத்னம் ஸ்கூலுக்கு கூட்டி சென்று விடுகிறார். ஸ்கூலில் ஆதி வந்திருக்க அவளிடம் பாரதி அடுத்த விஷயத்தையும் டிராயிங்கை கிழித்துப் பார்த்த விஷயத்தை சொல்கிறான். சரி நீங்க கவலைப்படாம போங்க சாயங்காலம் உங்களுக்கு ஒரு கிப்ட் இருக்கு என்று சொல்லி அனுப்பி வைக்கும் பாரதி தனது மொபைலில் இருக்கும் டிராயிங் போட்டோவை பிரிண்ட் போட்டு கொண்டு போய் கொடுக்கிறேன்.
பிறகு பாரதியிடம் குழந்தை எதுக்கு அடிச்சிங்க? ட்ராயிங்கை எதுக்கு கிழிச்சு போட்டீங்க அவங்களுக்கு கிடைச்ச பெரிய கிப்ட் முதல் முறையாக உங்களை வெறுக்கிறேன் என்று சொல்லி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க 
Thalapathy Vijay: உதயநிதி எல்லாம் பத்தாது.. விஜய் அரசியலுக்கு வரணும் – இயக்குநர் பிரவீன் காந்தி கருத்து!
Karthigai Deepam: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் கார்த்திக் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
 
 
 

Source link