“பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!


<p>ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று மோடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,&nbsp;&rdquo;நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவர்போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.</p>
<p>ஆளுங்கட்சி காங்கிரஸை போலவும் எதிர்க்கட்சி பாஜகவை போலவும் காங்கிரஸை விமர்சித்து வருகிறார் மோடி. காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருவது புரியாத புதிராக உள்ளது. 400 மட்டுமல்ல மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்பது மோடி சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை&rdquo; என பேசினார்.&nbsp;</p>

Source link