அட இப்படி கூட செய்யலாமா..? நூதன முறையில் போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்..


<div id=":mu" class="ii gt">
<div id=":mv" class="a3s aiL ">
<div dir="auto">
<div dir="auto" style="text-align: justify;">ஒரு ஊர் அல்லது நகரத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தூய்மை பணியாளர்களின் &nbsp;பங்கு மிக முக்கியமான ஒன்று. &nbsp;தூய்மை பணியாளர்களின் சுமையை நாம் குறைக்க வேண்டும் என்றால், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை பிரித்து தர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். &nbsp;அடுத்த தலைமுறைக்கு நாம் இந்த பூமியை, &nbsp;மாசுபடுத்தாமல் விட்டுச் செல்வதற்கும் ,குப்பையை தரம் பிரித்து தருவது &nbsp;மிக இன்றியமையாத ஒன்று.</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">இதுகுறித்து உலக அளவில் பல்வேறு &nbsp;வகையில் விழிப்புணர்வுகள் &nbsp; ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், &nbsp;நூதன முறையில் &nbsp;குப்பையை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது</div>
<div dir="auto" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/06dc391ff8d574e2b5adad0253dcdd371706287994428113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த நகரமன்றத் தலைவர்</strong></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை , மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்எம்.கே.டி கார்த்திக் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு செய்வதற்காக சில போட்டிகளை அறிவித்துள்ளார்.</div>
<div dir="auto" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/73a7be0f26dad850027f3159528464a51706288016434113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>சமூக வலைதளத்தில் விளம்பரம்</strong></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் உங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அதை என் whatsapp நம்பருக்கு அனுப்புங்கள் முதலில் வெற்றி பெறும் மூன்று நபர்களுக்கு சைக்கிள் வழங்கப்படும் எனவும், போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம்&nbsp; பரிசு வழங்கப்படும் என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டு அதை நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவரது whatsapp எண்ணிற்கு அனுப்பி வைத்தனர்.</div>
<div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/9b6ef466c10ab4e0b3f15e739d4d800a1706288048717113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>போட்டி போட்டுக் கொண்டு பரிசுகள் வாங்கிய ஊர் மக்கள்</strong></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">இதில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சைக்கிளும் ,அடுத்த மூன்று நபர்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்பட்டது. வீட்டிலும் போட்டியில் பங்கேற்ற 1716 பெண்களுக்கு&nbsp; தலா&nbsp; 5 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது. அதேபோல சிறுவர்கள் சிறுமிகளுக்கும் நம் நகரம் நம் தூய்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.</div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/00f79e854699f7584bbae2b4b61036741706288123029113_original.jpg" /></div>
<div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;">இதில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு சைக்கிளும் வழங்கப்பட்டது. நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் அவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.</div>
</div>
</div>
</div>

Source link