Seetha Raman Jauary 8th Zee Tamil Serial Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 
இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சீதா கல்பனாவை துப்பாக்கி முனையில் மிரட்டி அரைவிட்டு வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 
கல்பனா உன்னையும் மகாவையும் சும்மா விடமாட்டேன் என்று சவால் விட்டுவிட்டு இங்கிருந்து கிளம்பி செல்கிறார். அதன் பிறகு சீதா மகாவிடம் கம்ப்ளைண்ட் செய்ய அவர் எதுவும் தெரியாது என நல்லவள் வேஷம் போடுகிறாள். 
அதனை தொடர்ந்து சீதா ராமுக்கு போன் போட்டு நடந்தவற்றையெல்லாம் சொல்லி கண்கலங்க, அவன் “உடனடியா கிளம்பி வரேன்” என்று சொல்கிறான். சீதா நீங்க வரவேண்டாம் என்று சொல்லியும் ராம் “நான் லீவ் போட்டுட்டு கிளம்பி வரேன்” என்று ஃபோனை வைக்கிறான். பிறகு சீதா தன்னுடைய அம்மாவிடம் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி சொல்லி கண் கலங்கி அழுகிறாள். 
அடுத்ததாக மகா இது எல்லாத்துக்கும் காரணம் அர்ச்சனா தான் என அர்ச்சனா மீது பழி போட்டு பேச, இதை எல்லாம் ஒட்டுக் கேட்கும் அர்ச்சனா, “என்னை நீ இந்த வீட்டை விட்டு துரத்த பார்க்கிறியா? நான் போகும் போது உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்” என்று சவால் விடுகிறாள். 
அதைத் தொடர்ந்து சீதா ராம் வீட்டுக்கு வந்து விட்டதை நினைத்து தனியாக பேசத் தொடங்குகிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Cinema Headlines: அயலான் மூன்றாவது பாடல் ரிலீஸ்.. வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சினிமா ரவுண்ட்-அப்!
12th Fail Review: “கல்வியும் நேர்மையும் தான் மனிதனின் அடையாளம்” .. உரக்க பேசிய “12th Fail” படம்.. முழு விமர்சனம் இதோ..!

Source link