Anna Serial: சண்முகத்தை ஏமாற்றும் வைகுண்டம்: பாண்டியம்மா காலை முறித்த இசக்கி: அண்ணா சீரியல் இன்று!


<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் இசக்கிக்கு தாலி பிரித்து போட முடிவெடுத்து சௌந்தரபாண்டியை சம்மதிக்க வைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.&nbsp;</p>
<p>அதாவது, இசக்கி எதுக்கு இதெல்லாம் என்று கேட்க, எல்லாம் &ldquo;உன்னையும் ஷண்முகத்தையும் சேர்த்து வைக்க தான் இப்படி பண்றேன், வேற எதுக்கும் இல்ல&rdquo; என்று சொல்ல, &ldquo;அண்ணனை பார்க்க போகிறோம்&rdquo; என்று இசக்கி சந்தோசப்படுகிறாள்.&nbsp;</p>
<p>அதனைத் தொடர்ந்து வைகுண்டம் சிவபாலனை பார்க்க, இசக்கியும் &ldquo;நீயும் எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டீங்க, ஆனால் அது நடக்காமல் போய்டுச்சே&rdquo; என்று வருத்தப்பட, அவன்&ldquo;அதெல்லாம் எனக்கு கவலை இல்ல மாமா, இசக்கி என்னுடைய மதினி அவங்க சந்தோசமாக இருந்தா போதும்&rdquo; என்று சொல்கிறான்.</p>
<p>இதனைத் தொடர்ந்து இங்கே வீட்டில் வைகுண்டம் &ldquo;நாளைக்கு கோயிலுக்கு போகணும், மாலை போட்டு பாத யாத்திரையா கோயிலுக்கு போகப் போறேன்&rdquo; என்று சொல்லும் போதே தடுமாற, சண்முகத்துக்கு சின்னதாக சந்தேகம் வருகிறது.&nbsp;</p>
<p>இதனைத் தொடர்ந்து இங்கே பாண்டியம்மா இசக்கியை கூப்பிட்டு காலை அமுக்க சொல்ல, அவளும் அமைதியாக காலை அமுக்கி விட்டு கொண்டிருக்கிறாள். பாண்டியம்மா &ldquo;உங்க அம்மா ஓடிப்போனவர் தானே&rdquo; என்று சொன்னதும் கடுப்பாகி பாண்டியம்மா காலை பிடித்து முறித்து விடுகிறாள். இதனைத் தொடர்ந்து மறுநாள் பாக்கியம் எல்லாரையும் கூப்பிட்டு கொண்டு கோயிலுக்கு வந்து விடுகிறாள்.&nbsp;</p>
<p>இங்கே ஷண்முகம் குடும்பமும் கோயிலுக்கு வருகின்றனர். ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களா? அடுத்து நடக்க போவது என்ன என்ற சுவாரஸ்ய முடிச்சுடன் அண்ணா சீரியல் இன்று நிறைவடைகிறது.</p>

Source link