Sun tv Ethirneechal serial today episode March 25 promo | Ethirneechal: போலீசிடம் சிக்கிய தர்ஷன்! உமையாளுக்கு சித்தார்த் கொடுத்த ஷாக்


சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களை இல்லத்தரசிகள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள குழந்தைகள், ஆண்கள் உட்பட அனைவரும் தவறாமல் பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’.
 
எதிர்நீச்சல் (Ethirneechal ) சீரியல் டி.ஆர்.பி வரிசையிலும் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரங்களில் காணாமல் போன தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டாள். இருப்பினும் அவளால் சகஜ நிலைக்கு திரும்ப முடியாதபடி அவள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். இந்த நிலையில் கூட விடாப்பிடியாக தர்ஷினிக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே குறியாக  இருக்கிறார் குணசேகரன். இத்தனை நாட்களாக கரிகாலனுடன் திருமணம் என்று சொல்லி வந்தவர் தற்போது தர்ஷினியை உமையாள் மகன் சித்தார்த்துக்கு பேசி நிச்சயம் செய்ய ஏற்பாடுகளை மும்மரமாக செய்து வருகிறார். சித்தார்த், ஜனனியின் தங்கை அஞ்சனாவை காதலிக்கிறான் என்ற உண்மை தெரிந்தும் இந்த பேச்சுவார்த்தை தொடர்கிறது.
ஜனனி, சக்தி:இப்படியான சூழலில் இன்றைய (மார்ச் 25 ) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. சக்தி, ஜனனி மற்றும் அஞ்சனா பேசி கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் நடந்த பிரச்சினை அனைத்தையும் பற்றி தெரிந்தும் சித்தார்த் இதுவரையில் அஞ்சனாவுக்கு போன் கூட செய்து பேசவில்லை அப்படி இருக்கையில் அவனை எப்படி நம்ப முடியும் என்பது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அங்கே சித்தார்த் வருகிறான். “அவளை காதலிப்பது உண்மைனா எந்த நேரத்திலும் அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடு” என சக்தி சித்தார்த்திடம் சொல்ல “நான் உன்னை நிச்சயமா கைவிட மாட்டேன்” என அஞ்சனாவுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறான் சித்தார்த். அதை பார்த்துவிடும் உமையாள் சித்தரத்தை மிரட்டி “நீங்க எதுக்கு இவன் கூட பேசிக்கிட்டு இருக்கீங்க?” என ஜனனியையும், சக்தியையும் பார்த்து கேட்கிறாள் உமையாள். “நாங்க என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போற பையன் கிட்ட தான் பேசிகிட்டு இருக்கோம்” என சொல்ல டென்ஷனான உமையாள் சித்தார்த்தை பார்த்து முறைக்கிறாள்.
 
தர்ஷன் தன்னுடைய ப்ரெண்ட்ஸ்களுடன் செல்லும் போது போலீசில் மாட்டி கொள்கிறான். பெற்றோர்களை பற்றி இன்ஸ்பெக்டர் விசாரித்ததில் நான் குணசேகரன் மகன் என சொல்லவும் அதை உறுதி செய்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர்  குணசேகரனுக்கு போன் செய்து அங்கே வர சொல்கிறார். குணசேகரன் அங்கே வருவதற்குள் சக்தியும் ஜனனியும் அங்கே வந்து விடுகிறார்கள். குணசேகரன் வந்ததும் இன்ஸ்பெக்டர் அவரிடம் சென்று பேசுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.
 

புதிதாக தர்ஷனை கைக்குள் போட்டுக் கொள்வதற்காக குணசேகரன் போடும் ட்ராமாவாக இந்த பிளான் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. வரும் எபிசோட்களில் இதன் உண்மை நிலவரம் தெரியவரும்.  

மேலும் காண

Source link