TN Weather Update: அதிகரிக்கும் வெயிலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியம்.. வானிலை விடுக்கும் எச்சரிக்கை..


<p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>அதன்படி இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை, மிழகம், புதுவை&nbsp; மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h2>அதிகபட்ச வெப்பநிலை :</h2>
<p>அதிகபட்ச வெப்பநிலை பொறுத்தவரை இன்றும் நாளையும், &nbsp;தமிழகத்தில்&nbsp;&nbsp;&nbsp; ஓரிரு&nbsp;&nbsp;&nbsp; இடங்களில்&nbsp;&nbsp;&nbsp; அதிகபட்ச&nbsp;&nbsp;&nbsp; வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக&nbsp; இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது&nbsp; அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான&nbsp;&nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்&nbsp; இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.0 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 32.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் வெயில் காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்காத நிலையில் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் பணிக்கு செல்லும் மக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>

Source link