Crime: தண்டையார்ப்பேட்டையில் நெஞ்சு வலிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..


<p>இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு , தவறான ஊசி செலுத்திய மருத்துவருக்கு 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.&nbsp;சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 56) இவரது மகன் சரவணக்குமார் (31) இன்ஜினியர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.</p>
<p>கடந்த 2017-ம் ஆண்டு வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பஸ்ஸில் ஏறிய போது நெஞ்சி வலி காரணமாக திரும்பி வீட்டுக்கு வந்தார். அவரது உறவினர்கள் அதே பகுதி சஞ்சீவீராயன் கோயில் தெருவில் உள்ள தனியார் (வசந்தா&nbsp; ஆஸ்பத்திரிக்கு) நெஞ்சு வலிக்காக சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு இ.சி.ஜி. எடுக்கப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் மருத்துவமணையின் மருத்துவர் நந்திவர்மன் (வயது 61) குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர். இந்நிலையில் சரவணக்குமார் தனது &nbsp;இ.சி.ஜி. ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மருத்துவரை சந்தித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் ஒன்றுமில்லை என்று கூறி ஒரு ஊசி போட்டுள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமாரின் உடல்நிலை மோசமாகவே அவரது உறவினர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர்.</p>
<p>அதற்கு டாக்டர், அவருக்கு சாதாரண வலி தான் ஒரு பிரச்சனை இல்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் சரவணகுமார் உயிரிழந்தார். உறவினர்களுக்கு சரவணகுமார் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டு தண்டையார்பேட்டை காவல் துறையில் புகார் அளித்தனர். &nbsp;இது எடுத்த தண்டையார்பேட்டை போலீசார்&nbsp; சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<p>பிரேத பரிசோதனையில் அறிக்கையில் டாக்டர் சரவணகுமாருக்கு தவறான ஊசி போடப்பட்டு உள்ளது என்று உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது. மேலும் இருதய நோய் பாதிக்கப்பட்டவருக்கு ஊசி மூலம் தவறான மருந்து வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது. &nbsp;இதையடுத்து இந்த வழக்கு சென்னை பெருநகர 15-வது ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி சுதா விசாரித்து வந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.</p>
<p>இந்த தீர்ப்பில் சரவணகுமாருக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு, கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர் நந்திவர்மனுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் பணம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இது தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p>

Source link