<p>பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பு இல்லை. வரலாற்றை மாற்றவோ, திரிக்கவோ அண்ணாமலை முயலக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என அண்ணாமலை கூறுவது நகைப்புக்குரியது. தேசிய கல்விக் கொள்கை என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன.&nbsp;</p>
<h2><strong>அண்ணாமலை கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது அரசு:&nbsp;</strong></h2>
<p>பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கூற்றை தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கு என்று வரலாறும், பாரம்பரியமும் உண்டு. 1997லேயே தொலைநோக்கு பார்வையோடு தமிழ்நாட்டுக்கென தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கையை உருவாக்கியவர் கலைஞர். செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது.&nbsp;</p>

Source link

Author

anbilchinnathambi@gmail.com

Related Posts