Anna Serial: உண்மையை உடைத்த பாக்கியம்: பரணி கொடுத்த அதிர்ச்சி: அண்ணா சீரியல் அப்டேட்! 


<p>தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் பிறகு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.&nbsp;</p>
<p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி இசக்கியை அடித்த விஷயம் தெரிய வந்து எல்லோரும் பரணியிடம் கோபித்துக் கொண்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.&nbsp;</p>
<p>அதாவது, வைகுண்டமும் அவரது மற்ற பெண்களும் இசக்கியை பார்க்க கிளம்பி வருகின்றனர். வைகுண்டம் &ldquo;இவ்வளவு நடந்ததுக்கப்புறம் நீ எதுக்குமா அவன்கூட இருக்கணும்? கிளம்பி வா&rdquo; என்று சொல்லிக் கூப்பிட பாக்கியம் &ldquo;ஆமா கூட்டிட்டு போய்டுங்க, உன் புள்ள வந்து முத்து பாண்டிய கொன்னுடட்டும், அப்புறமா ஜெயிலுக்கு போயிடுவான், நாம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்&rdquo; என்று சொல்கிறாள்.&nbsp;</p>
<p>பாக்கியம் இரண்டு குடும்பத்தின் நலனை வைத்துப் பேச, இவர்கள் &ldquo;என்னதான் இருந்தாலும் முத்துப்பாண்டி உன் பையன் தானே? எப்படி விட்டுக் கொடுத்துடுவ?&rdquo; என்று தப்பாக புரிந்து கொள்கின்றனர். பரணி &ldquo;அண்ணே உனக்கு புள்ள இல்லையா? இரண்டு பேரும் அப்படித்தான் பேசுவீங்க?&rdquo; என்று சொல்ல பாக்கியம் கோபப்படுகிறாள்.&nbsp;</p>
<p>அதாவது &ldquo;பரணிய பத்தி தப்பா சொல்லாதீங்க, நானே இசக்கிக்கு ட்ரீட்மென்ட் பாக்க சொல்லியும் அவர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்காமல் விடக்கூடாதுன்னு இசக்கியை கூட்டிட்டு போனாள். முத்துப்பாண்டி ஊர் ஜனங்க முன்னாடி இசக்கி கிட்ட மன்னிப்பு கேட்டதனாலதான் அவனை விட்டா&rdquo; என்று நடந்த விஷயத்தை சொல்ல இவர்கள் பரணியை புரிந்து கொள்கின்றனர்.&nbsp;</p>
<p>மேலும் பாக்கியம் &ldquo;நான் இசக்கிய என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க&rdquo; என்று வழிய அனுப்பி வைக்க, எதிரே முத்துப்பாண்டி வர வைகுண்டம் &ldquo;இன்னொரு முறை என் பொண்ணு மேல கைய வச்சா சண்முகம் வரமாட்டான், நானே உன் குரல் வளையை கடிச்சு துப்பிடுவேன்&rdquo;<br />என வார்னிங் கொடுக்கிறார்.&nbsp;</p>
<p>பிறகு வீட்டுக்கு வர, பரணி சாப்பிடாமல் பெட்டில் படுத்து கண் கலங்கிக் கொண்டிருக்க, சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்க &ldquo;நீங்க என்ன புரிஞ்சுகிட்டது அவ்வளவுதான் இன்னும் என்னை சௌந்தரபாண்டி மகளா தான் பாக்குறீங்க, இந்த வீட்டுல ஒருத்தியா பார்க்கல&rdquo; என்று கோபப்படுகிறாள்.</p>
<p>பரணியின் கோபத்தை கண்டு மற்றவர்கள் வருத்தப்படுகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.</p>

Source link