<h2 class="p1"><strong>இந்தியா – ஆப்கானிஸ்தான் டி 20:</strong></h2>
<p class="p2">தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு<span class="s1">, </span>இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது<span class="s1">. </span>இந்திய அணி டி<span class="s1">20 </span>தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது<span class="s1">. </span>ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி<span class="s1">20 </span>தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது<span class="s1">. </span>இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி<span class="s1"> 11 </span>ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது<span class="s1">. </span>இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது<span class="s1">.</span></p>
<p class="p2">அதன்படி<span class="s1">, </span>இந்த போட்டியில் ஆடும் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது<span class="s1">. </span>அந்த வகையில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வாழங்கப்படவில்லை<span class="s1">. </span>மேலும்<span class="s1"> , </span>விராட் கோலியும் முதல் போட்டியில் விளையாடவில்லை<span class="s1">.</span></p>
<h2 class="p1"><strong>அதிரடி காட்டிய முகமது நபி:</strong></h2>
<p class="p2">இந்நிலையில்<span class="s1">, </span>ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது<span class="s1">. </span>அதன்படி<span class="s1">, </span>ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினார்கள்<span class="s1">. </span>அந்தவகையில் இருவரும் தங்களுடைய பேட்டிங்கை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள்<span class="s1">. </span>சரியான பார்ட்னர்ஷிப் அமைத்த குர்பாஸ் மற்றும் ஜத்ரான் ஜோடி<span class="s1"> 50 </span>ரன்களை குவித்தது<span class="s1">. </span>முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல்<span class="s1"> 7 </span>ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்<span class="s1">. </span></p>
<p class="p2">அப்போது அக்ஸர் படேல் வீசிய பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை பறிகொடுத்தார்<span class="s1">. 28 </span>பந்துகள் களத்தில் நின்ற அவர்<span class="s1"> 2 </span>பவுண்டரிகள் மற்றும்<span class="s1"> 1 </span>சிக்ஸர்கள் என மொத்தம்<span class="s1"> 28 </span>ரன்களை குவித்தார்<span class="s1">. </span>பின்னர்<span class="s1">, </span>இந்திய அணி சார்பில்<span class="s1"> 8 </span>வது ஓவரை ஷிவம் துபே வீசினார்<span class="s1">. </span>ஷிவம் துபே வீசிய இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்<span class="s1">. </span>அதன்படி<span class="s1">, 22 </span>பந்துகள் களத்தில் நின்ற அவர்<span class="s1"> 2 </span>பவுண்டரிகள் மற்றும்<span class="s1"> 1 </span>சிக்ஸர்கள் என மொத்த<span class="s1">, 25 </span>ரன்களை விளாசினார்<span class="s1">. </span></p>
<p class="p2">இதையடுத்து<span class="s1">, </span>அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் களம் இறங்கினார்கள். இதில், உமர் சாய் அதிரடியாக விளையாடினார். அப்போது ரஹ்மத் ஷா அக்‌ஷர் படேல் வீசிய பந்தில் 3 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த முகமது நபி அதிரடி காட்ட ஆரம்பித்தார். அந்த வகையில், 27 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 42 ரன்களை குவித்தார். அப்போது முகேஷ் குமார் வீசிய பந்தில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. 159 என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது.</p>
<p class="p2"> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
gambling illegal usa, poker site usa and free bingo odds of winning – Katrice, games united states, or online gambling…
odds atletik i dag Have a look at my web page tennis Tips
juegos de jugar gratis ruleta casino sin descargar ni Registrarse sin descarga
consigli scommesse oggi my homepage – quote vincente campionato italiano – Mariano,
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

“கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்” – கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு | Mla Kanimozhi Santhosh alleges that the Karur company discussed a package with her | ACTPnews.com
-

"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" – விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன? | ACTPnews.com
-

“ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்” – பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு | “Hunger strike to urge Tn government to build dam at Rasimanal” – P.R. Pandian announces. | ACTPnews.com
-

புதுக்கோட்டை: 'பேய் விரட்டும்' போராட்டம்; எலுமிச்சம்பழம், தாயத்து, சிலுவை கட்டிய த.வா.க-வினர்! | ACTPnews.com
-

“எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியா கூட்டணில்.!”- மாணிக்கம் தாகூர் கூறியதென்ன? | tn congress leader manickam tagore about tvk in india alliance | ACTPnews.com


















casino rabassada Visit my site casinos fuera de España