தலைக்கு ஏறிய பாலியல் வெறி.. மாத்திரை போட்டு உறவில் ஈடுபட்ட கணவரால் மனைவி உயிரிழப்பு


<p><strong>உத்தர பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. முதலிரவின்போது, புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர், பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்துவதற்காக மாத்திரைகளை எடுத்து கொண்டுள்ளார். முதலிரவில் வரம்பு மீறிய காரணத்தால் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</strong></p>
<h2><strong>முதலிரவில் கணவன் வெறிச்செயல்:</strong></h2>
<p>மாத்திரைகளை எடுத்து கொண்ட கணவரால் மனைவிக்கு கடும் காயம் ஏற்பட்டது. இதனால், மனைவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கான்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.</p>
<p>அந்தப் பெண் புதன்கிழமை (பிப்ரவரி 7) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். (பிப்ரவரி 10) சனிக்கிழமை அன்று அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். கணவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளரிடம் இறந்த பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>தனது வீட்டை பூட்டிவிட்டு கிராமத்தில் இருந்து இறந்த பெண்ணின் கணவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த விதமான புகாரும் அளிக்கப்படவில்லை என விளக்கம் அளித்த ஹமிர்பூர் காவல்துறை, "கோட்வாலி நகர காவல் நிலையத்திற்கு இது தொடர்பாக எந்த தகவலும்/புகாரும் வரவில்லை. புகார் கிடைத்ததும் விசாரணை நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.</p>
<h2><strong>மனைவிக்கு நேர்ந்த கொடூரம்:</strong></h2>
<p>புதிதாக திருமணம் செய்து கொண்ட நபர், பாலியல் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தனது மனைவி மீது காயத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் அவரின் உடல்நிலை மோசமானதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் உடல்நிலை மோசமானதையடுத்து, மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.&nbsp;</p>
<p>கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இணையான காயங்கள் அந்த பெண்ணின் உடலில் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.<br />கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. அரசு ஊழியரான பெண்ணின் சகோதரர்தான், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.</p>
<p>பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.&nbsp;</p>
<p>ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.</p>
<p>&nbsp;</p>

Source link