ஐசிசி விருது… நான்காவது முறையாக தட்டிச் சென்ற ரன் மிஷின் விராட் கோலி!

 
ஐசிசி ஒருநாள் விருது:
ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி பெற்றிருக்கிறார். 
 
நான்காவது முறை:
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதற்கு முன்னர் கடந்த 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் ஒரு நாள் போட்டிகளின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக, தென்னாப்பிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தான் உலக அளவில் அதிக முறை ஐசிசி விருதை வென்ற வீரராக இருந்தார். தற்போது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து நான்காவது முறையாக இந்த விருதை வென்றிருக்கிறார். 
 
 
 
 

Player of the tournament at the ICC Men’s @cricketworldcup 2023 😎The extraordinary India batter has been awarded the ICC Men’s ODI Cricketer of the Year 💥 https://t.co/Ea4KJZMImE
— ICC (@ICC) January 25, 2024

Source link