தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கல் வேலையை பார்ப்பதற்கான பொறுப்பு தீபா கைக்கு அந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது அபிராமி தீபாவைக் கூப்பிட்டு “எனக்கு எதிராவே நீ வரியா?” என்று கேள்வி கேட்க, அபிராமி “மருமகளாக யாரும் சலச்சவங்க கிடையாது என்பதை நிரூபிக்கத்தான் நான் இந்த பொறுப்பை ஏத்துக்கிட்டேன்” என்று சொல்கிறாள். ஆனாலும் அபிராமி இதை ஏற்க மறுத்து தீபாவிடம் வாக்குவாதம் செய்கிறாள்.
இதனை தொடர்ந்து ரூமுக்கு வரும் தீபா கார்த்திக்கிடம் நான் அத்தையை எதிர்ப்பதற்காக இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்கிறார். அதற்கு கார்த்திக் “நீங்க யார் பக்கம் என்று கேட்க உங்களுக்கு ஒரு பிரச்சனையா நான் வருவேன், அம்மாவுக்கு ஒரு பிரச்சனையா அவங்களுக்கும் நான் வருவேன். இந்த ரெண்டு பேருக்குமிடையில் இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு நடுவே நான் வரமாட்டேன்” என சொல்லி விடுகிறான். 
அதைத்தொடர்ந்து மீனாட்சி “என்ன தீபா ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு போல?” என்று சொல்ல, “ஆமாம் அக்கா, நானும் இந்த வீட்டுக்கு தகுதியான மருமக தான் என்பதை நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு இது” என சொல்கிறாள். அபிராமி தனியாக இருப்பதைப் பார்த்த ஐஸ்வர்யா, “தீபா உங்களை எதிர்க்கத்தான் இப்படி எல்லாம் பண்றா” என ஏற்றி விடுகிறாள். 
ஆனால் அபிராமி “போதும் நிறுத்து, பொறுப்பை நீ ஏத்துக்கிட்டு இருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா” என ஐஸ்வர்யாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார் அபிராமி. இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: “தரமான ஆக்ஷன் விருந்து” தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports