Yash Thakur: "அப்பா இறந்தப்ப கூட அழல.. கடவுளுக்குத்தான் வெளிச்சம்" யஷ் தாகூரின் அம்மா சொன்ன சோகக் கதை!


<h2 class="p1"><strong>ஐ.பி.எல் சீசன் 17:</strong></h2>
<p><strong>நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன் என்று யஷ் தாகூரின் தாயார் கூறினார்.</strong></p>
<p class="p3">கடந்த மார்ச்<span class="s1"> 22 </span>ஆம் தேதி தொடங்கிய ஐ<span class="s1">.</span>பி<span class="s1">.</span>எல் சீசன்<span class="s1"> 17 </span>விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது<span class="s1">. </span>இதில் நேற்று நடைபெற்ற<span class="s1"> 20</span>வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின<span class="s1">. </span>அந்தவகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது<span class="s1">. </span>அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி<span class="s1"> 163 </span>ரன்களை எடுத்தது<span class="s1">. </span>பின்னர்<span class="s1">, 164 </span>ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி<span class="s1">.&nbsp; </span></p>
<p class="p3">வலுவான தொடக்கத்தை கொடுத்த குஜராத் அணி வீரர் சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார் யஷ் தாகூர்<span class="s1">. </span>அந்தவகையில் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> சங்கர்<span class="s1">, </span>ராகுல் தெவாதியா<span class="s1">, </span>ரஷீத் கான் மற்றும் நூர் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்<span class="s1">. </span>இதன் மூலம் நடப்பு சீசனில்<span class="s1"> 5 </span>விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் யஷ் தாகூர்<span class="s1">.</span></p>
<h2 class="p2"><strong>தந்தையை இழந்த யஷ் தாகூர்:</strong></h2>
<p class="p3">இந்நிலையில் தன்னுடைய மகன் சிறப்பாக விளையாடியது குறித்து யஷ் தாகூரின் தாயார் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்<span class="s1">. </span>இது தொடர்பாக பேசிய அவர்<span class="s1">, &ldquo;</span>அவன் குழந்தையாக இருந்தபோது அவனை நான் பாடகராக ஆக்க வேண்டும் என்று கற்பனை செய்தேன்<span class="s1">. </span>ஆனால் என்னுடைய மகனின் உண்மையான ஆர்வம் கிரிக்கெட்டில்தான் இருந்தது<span class="s1">. 2011 </span>ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது சிக்ஸர் அடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்ததை பார்த்தது அவனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது<span class="s1">. </span>நான் அவனை பாடகராக மாற்ற வேண்டும் என்ற நினைப்பில் பள்ளியில் பாட்டுப்போட்டியில் சேரவைத்தேன்<span class="s1">. </span>மறுநாள் பள்ளிக்கு சென்ற போது தயவுசெய்து அவனை அழைத்துச் செல்லுங்கள் அவரால் பாட முடியாது&rdquo; என்றார்கள்</p>
<h2 class="p3"><strong><span class="s1">தோனி அடித்த உலகக் கோப்பை சிக்ஸர்:</span></strong></h2>
<p class="p3">அவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்று நினைக்கிறேன்<span class="s1">. </span>அதனால் அவரை அழைத்துச் செல்லுங்கள் என்று பள்ளி ஆசிரியர் சொன்னார்<span class="s1">. </span>உண்மையிலேயே யஷ் தாக்கூரின் பள்ளி ஆசிரியர் ஒரு சிறந்த பாடகர்<span class="s1">. </span>கடந்த ஆண்டு அவனுடைய<span class="s1"> 25 </span>வது பிறந்த நாளின்போது தந்தையை<span class="s1"> (</span>ரவி சிங் தாக்கூர்<span class="s1">) </span>இழந்தான்<span class="s1">. </span>ஆனால் அப்போது என்னுடைய மகன் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை<span class="s1">. </span>அவன் தனது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்தான்<span class="s1">. </span>தனி ஒரு ஆளாகவே அனைத்து சூழல்களையும் சமாளித்தான்<span class="s1">. </span>விதர்பாவின் ரஞ்சி டிராபி அணியின் அவன் இணைந்தபோது நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்<span class="s1">. </span></p>
<p class="p3">நாங்கள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை<span class="s1">. &rdquo;யஷ்</span> தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டான்<span class="s1">. </span>அவன் அதுபோன்ற சூழலை எப்படி சமாளித்தான் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்<span class="s1">&rdquo; </span>என்று உணச்சி பொங்க கூறினார்<span class="s1">. </span>தொடர்ந்து பேசிய அவர்<span class="s1">, &ldquo;</span>யஷ் தனது தந்தையுடன் மிகவும் நெருக்கமாக இருந்தான்<span class="s1">. </span>என் கணவரின் கடைசி நாட்களில் கூட இருவரும் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் பேசினார்கள்<span class="s1">. </span>ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் இருவரும் அமர்ந்து அதிகம் உரையாடுவார்கள்<span class="s1">&rdquo; </span>என்று பேசியுள்ளார் யஷ் தாகூரின் தாயார்<span class="s1">. </span></p>

Source link