7 am headlines today 2024 18th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

விருதுநகர் பட்டாசு குடோன் தீ விபத்து; 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பிரதமர், முதலமைச்சர் நிதிஉதவி அறிவிப்பு
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய்க்கு தடை; புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதால் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்; காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார் நியமனம். 
பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து நடப்பதை தடுக்க அரசு கண்காணிப்பை தீவிரமாக்க வேண்டும் – அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்
இன்று திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. 
பல்வேறு துறைகளின் சார்பில் ந்ரூபாய் 732 கோடி அளவிலான திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்
கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது – அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
மேகதாது அணை கட்ட கர்நாடகா நிதி ஒதுக்கீடு – எடப்பாடி பழனிசாமி கண்டனம் 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் இருந்தவரை நீட் தமிழ்நாட்டிற்கு வரவில்லை – அமைச்சர் உதயநிதி. 
தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பறவைக்காய்ச்சல் எச்சரிக்கை
குரூப்-2 நேர்காணல் பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு
வடலூர் வள்ளலார் பெருவெளியை திமுக அரசு கையகப்படுத்த முயற்சி செய்தால் மாபெரும் மக்கள் பேராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

இந்தியா:

புதுடெல்லியில் நடைபெறும் 9-வது ரெய்சினா பேச்சுவார்த்தையில் சிறப்பு விருந்தினராக கிரேக்க பிரதமர் கிரியகோஸ் மித்சோடாகிஸ் பங்கேற்கவுள்ளார். 
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம். கடந்த 20 நாட்களில் காட்டு யானை தாக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு; பொதுமக்கள் போராட்டம்
மராட்டிய மாநிலம்: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. நிலேஷ் ராணே கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்
மும்பை விமான நிலையத்தில் வீல் சேர் இல்லாததால் பயணி உயிரிழந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ்
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் சுமார் 20 தெருநாய்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்
நாடு முழுவதும் பாஜகவின் எழுச்சிக்கு மோடியே காரணம் – ஜே.பி. நட்டா பெருமிதம்
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் – விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தர்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

உலகம்:

3 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள், வீரர்களுக்கு பயிற்சி; பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்தாக தொடரப்பட்ட வழக்கில் 354 மில்லியன் டாலர் அபராதம்; 3 ஆண்டுகள் வணிகம் செய்யவும் தடை 
8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா இன்று விடுதலை செய்யப்படுவார் என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அறிவிப்பு

விளையாட்டு:

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் சேர்ப்பு; இந்தியா தற்போது 322 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனில் தனது கடைசி போட்டியில் இன்று விளையாடுகின்றது. ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பினை இழந்த தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸுடன் இரவு 8 மணிக்கு மோதுகின்றது. 

Published at : 18 Feb 2024 06:58 AM (IST)

மேலும் காண

Source link