ரூ.777 கோடி செலவு: 2 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காத பிரகதி மைதான சுரங்கப்பாதை, வெடித்த சர்ச்சை

பிரகதி மைதான சுரங்கப்பாதைய பழுதுபார்ப்பது சாத்தியமில்லை, முற்றிலும் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 777 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதானம் சுரங்கப்பாதையை கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 1.4 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சாலையானது, டெல்லியின் கிழக்கு பகுதிகள் மற்றும் சேட்டிலைட் சிட்டிகளான நொய்டா, காசியாபாத் ஆகியவற்றை எளிமையாக இணைத்தது. தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் என, உலக தரத்தில் இந்த சுரங்கப் பாதை கட்டமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..

“பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள் – பதில் வருமா?” காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்

பிரதமர் மோடியால் பதிலளிக்க முடியுமா என? காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் 9 கேள்விகளை பட்டியலிட்டுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, “2014ல் wஆட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக அவர்கள் (பாஜக) நம்புகிறார்கள். 1947ல் சுதந்திரம் கிடைத்தது, அதற்காக காங்கிரஸ் போராடியது என்பது அவர்களுக்குத் தெரியாது.மேலும் படிக்க..

திமுக ஷாக்..! அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

திமுக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் பொன்முடி ஆகியோரை சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் தீர்ப்பளித்தன. இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்தார். மேலும் படிக்க..

மக்களவை தேர்தலை குறிவைக்கும் மனிதநேய மக்கள் கட்சி.. கேட்ட தொகுதியை கொடுக்குமா திமுக?

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், பிகாருக்கு அடுத்தப்படியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உள்ளது. இதனால், மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்நாடு எப்போதும் முக்கிய பங்காற்றி வந்துள்ளது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாட்டின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. தென்மாநிலங்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெறாவிட்டாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பெரிய வெற்றியை பதிவு செய்ததால் பாஜக எளிதாக ஆட்சி அமைத்தது. மேலும் படிக்க..

இந்தியாவில் 1,700% உயர்ந்த செல்போன் உற்பத்தி – மொத்த மதிப்பு எத்தனை லட்சம் கோடி தெரியுமா?

இந்தியாவில் நடைபெறும் செல்போன் உற்பத்தி தொடர்பான கேள்விக்கு, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் செல்போன் உற்பத்தி பெரும் ஏற்றத்தை கண்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கத்தின் படி,  2014-15ல் காலகட்டத்தில் ரூ.18,900 கோடியாக இருந்த உள்நாட்டு செல்போன் உற்பத்தியின் மதிப்பு,  2022-2023ல் சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed