TN Rain Alert: மீண்டும் மழை.. காலை 10 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த இடங்களில் ?


<p>தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமாநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் மிதமான முட்தல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் நாளை வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான&nbsp; மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய&nbsp; வடதமிழகம்&nbsp; மற்றும் புதுவையில்&nbsp; வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக&nbsp; இருக்கக்கூடும் என்றும், உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை&nbsp; காரணமாக ஓரிரு இடங்களில்&nbsp; அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்&nbsp; இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.</p>
<p>மீனவர்களுக்கான எச்சரிக்கை:</p>
<p>தமிழக கடலோரப்பகுதிகள்:</p>
<p>26.02.2024: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார்&nbsp;&nbsp;&nbsp; வளைகுடா, தென்தமிழக&nbsp;&nbsp; கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று&nbsp; மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65&nbsp; கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.</p>

Source link