ஒரு சில நடிகைகள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நிலையான ஒரு இடத்தை பிடித்துவிடுவார்கள். எத்தனை எத்தனை காலங்கள் ஓடினாலும், எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஒரு சிலர் மீது இருக்கும் கிரேஸ் மட்டும் எப்போதுமே அப்படியே பதிந்து விடும். அப்படி பட்ட ஒரு நடிகை தான் 80ஸ் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவை தன் கைக்குள் அடக்கி வைத்திருந்த நடிகை நதியா. 
 

ரசிகர்களின் மனம் கவர்ந்த நதியா:எளிமையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை வெகு சிறப்பாக நடிப்பதில் வித்தகி நடிகை நதியா. தமிழ் திரைப்படங்களை போலவே மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பாசில் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்திய நதியாவை தமிழ் திரை ரசிகர்கள் கொண்டாடினர். அன்று போலவே இன்றும் அதே இளமையுடன் அழகுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நதியா. 
சமீபத்தில் நடிகை நதியா மலையாள தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை மலையாள நடிகர் முகேஷ் நடத்தி  வருகிறார். இன்றும் முகேஷ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் நடிகை நதியாவை பற்றின ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றை நடிகர் முகேஷ் பகிர்ந்து இருந்தார். 
 

1986ம் ஆண்டு முகேஷ் மற்றும் நதியா இணைந்து நடித்த திரைப்படம் ‘ஷாமா’. சிரிப்பு வராமல் ஜோக் அடிப்பதில் திறமையானவர் நடிகர் முகேஷ். ஷாமா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் முகேஷ் ஏராளமான ஜோக் அடிக்க நதியா அதை மிகவும் விரும்பி கேட்பாராம். அவரின் ரசிகையாகவே மாறி போன நதியா படப்பிடிப்பு செட்டுக்கு எப்போது வந்தாலும் முகேஷை தான் தேடுவாராம். இதை பார்த்த மற்றவர்களுக்கு பொறாமையாக இருக்குமாம். 
மிரட்டிய முகேஷ்:
ஒரு நாள் வழக்கம் போல முகேஷ் ஜோக் அடிக்க நதியா அவரை பார்த்து ‘யூ ஆர் ஏ குட் ஜோக்கர்’ என சொல்லி பயங்கரமாக சிரித்துள்ளார். அத்தனை நாட்களாக பொங்கிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்களாம். அப்போதில் இருந்து நதியா முகேஷை பார்க்கும் போதெல்லாம் ‘ஜோக்கர்’ என்று சொல்லியே கேலி செய்துள்ளார் நதியா. இதனால் கடுப்பான முகேஷ் ஒரு நாள் நதியாவிடம் இன்னொரு முறை ஜோக்கர் என்று கூப்பிட்டால் கிஸ் பண்ணிவிடுவேன் என்று சொல்ல பயந்து போன நதியா அதற்கு பிறகு அவரை ஜோக்கர் என்ற அழைக்காமல் ஒதுங்கி கொண்டாராம். 
அதற்கு பிறகு நதியாவை பார்க்கும் போதெல்லாம் எங்க இப்ப கூப்பிடு என சொல்லி வெறுப்பேற்றியுள்ளார் முகேஷ். அவரை பார்த்தாலே வாயை கையால் பொத்திக்கொண்டு ஓடிவிடுவாராம் நதியா. அந்த படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு நதியா காரில் கிளம்பும் போது தலையை மட்டும் வெளியில் நீட்டி ‘ஜோக்கர்’ என முகேஷை பார்த்து கத்தி சொல்லி பழி தீர்த்துக்கொண்டாராம் நதியா. அந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் முகேஷ் மற்றும் நதியா இருவரும் தங்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.   
 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports