Siragadikka Aasai: விஜயா சொன்ன பெயர்! உடையப்போகும் ரோகினியின் ரகசியம் – சிறகடிக்க ஆசையில் இன்று!


<p>சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.</p>
<h2><strong>கேள்வி கேட்கும் மீனா:</strong></h2>
<p>மீனா &rdquo;சொல்லுடா உன்னை யாருடா அடிச்சா?&rdquo; என சத்யாவிடம் கேட்கிறார். பின் மீனா சத்யாவை அடிக்கிறார். வட்டி பணம் வாங்க சென்ற போது முத்து மாமா தன் கையை முறுக்கியதாகக் கூறுகிறார் சத்யா. &rdquo;சத்யா பொய் சொல்லாத&rdquo; என்கிறார் மீனா. &rdquo;எவ்ளோ சொல்லி பார்த்தேன்&rdquo; மாமா கேட்கல என்கிறார் சத்யா. அவரு குடிச்சிருந்தாருனு நினைக்குறேன் ஒரு மாதிரி ஸ்மெல் வேற வந்துச்சி&rdquo; என்கிறார் சத்யா.&nbsp;</p>
<p>மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரே என மீனாவின் அம்மா அழுகிறார். மீனா கார் செட்டுக்கு சென்று செல்வத்தை திட்டுகிறார். முத்து எழுந்து வந்து &rdquo;என்னவாம்&rdquo; எனk கேட்கிறார். &rdquo;என் தம்பி கையை உடைக்கும் போது இப்படிதான் குடிச்சி இருந்திங்களா? கொஞ்சம் கூட மனசாட்சியா இல்லையா உங்களுக்கு&rdquo; எனக் கேட்கிறார் மீனா. &rdquo;குடி மட்டும் போதும் உங்களுக்கு அப்படித்தானே&rdquo; எனக் கேட்கிறார் மீனா.&nbsp;</p>
<p><strong>அழும் மீனா:</strong></p>
<p>&rdquo;உங்க புத்தி மாறவே மாறாது&rdquo; என சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து வீட்டிற்குச் செல்கிறார். மீனா வீட்டிற்கு சென்று அழுது கொண்டிருக்கிறார். ஸ்ருதி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். &rdquo;ஆனா இவ சொல்ற காரணம் தான் நம்ப முடியல வட்டி சிட்டினு ஏதேதோ காரணம் சொல்லிக்கிட்டு இருக்கா&rdquo; என்கிறார் விஜயா. உடனே ரோகினி அதிர்ச்சி அடைகிறார். &rdquo;நம்ப வேற சிட்டிக்கிட்ட கடன் வாங்கி இருக்கோம், அவனை வேற இந்த மீனா அவங்க தம்பிக்கு தெரிஞ்சி இருக்கு&rdquo; என மனதிற்குள் நினைக்கின்றார்.&nbsp;</p>
<p>முத்து வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலை, ரவி ஆகியோர் சத்யாவை அடித்தது குறித்து கேட்கின்றனர். ஆனாலும் முத்து உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார். &ldquo;கண்டவன் கூட சேர்ந்து சுத்திக்கிட்டு திரிஞ்சா இப்டிதான் ஆகும்&rdquo; என்கிறார் முத்து. &rdquo;நான் என்ன கேட்குறேன் நீ என்ன பதில் சொல்ற? அவன் கைய ஏன் உடச்ச&rdquo; எனக் கேட்கிறார் அண்ணாமலை. &rdquo;வேண்டாம் மாமா அவரு கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். நாங்க ஏழைங்க தானே, எங்கள எல்லாம் அடிச்சா என்ன கேட்க நாதியா இருக்கு&rdquo;என மீனா அழுகிறார்.&nbsp;</p>
<p>&rdquo;எனக்கு என்னமோ இவன் அவனுக்கு காசு கொடுத்து இருப்பான், அதை திருப்பி கேட்க போய் தான் பிரச்சனை ஆகி இருக்கும்னு நினைக்கின்றேன்&rdquo; என்கிறார் விஜயா. &rdquo;அவன் ஏற்கெனவே ஒருமுறை நம்ம வீட்ல பைக்க திருடுனவன் தானே இப்போ என்ன பண்ணி வச்சானோ&rdquo; என்கிறார் மனோஜ். &rdquo;அவன் இப்போ ஒழுங்கா படிக்குறான். பார்க்ல போய் உட்கார்ந்து தூங்கல&rdquo; என்கிறார் மீனா. அண்ணாமலை சத்யாவிடம் முத்துவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். &rdquo;முடியாதுப்பா&rdquo; எனச் சொல்லுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.&nbsp;</p>

Source link